Wednesday 19 September 2018

மூட்டு வலி தடுக்கும் முறைகள்

மூப்பு வரும்போது மூட்டு வலியும் தானாக வந்து விடுகிறது. இளம், நடுத்தர வயதினரையும் இந்த பிரச்னை விட்டுவைப்பதில்லை. கொஞ்சம் உடற்பயிற்சி, கட்டுப்பாடான உணவு என கவனமாக இருந்தால் மூட்டு தேய்மானத்தையும், அதனால் ஏற்படும் மூட்டுவலியையும் தவிர்க்கலாம் அதிலும் தற்போது நச்சு கலந்த உணவு வகைகள், இயற்கையில் விளையும் பொருளை நேரடியாக உட்கொள்ள முடியாத நிலை, இது போன்ற பல காரணங்களால் வராத வியாதி எல்லாம் வந்து பாடாய் படுத்துகின்றது. எலும்பு, நரம்பு மற்றும் தசைகள் நம் உடல் இயக்கத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன. நிற்கவும், உட்காரவும் நம் உடல் வளைந்து கொடுக்க உதவுபவை மூட்டுகள். இதில் முழங்கால் மூட்டு மிகவும் சிக்கலானது. எலும்பின் அசைவுக்கு உதவியாக அதன் மீது கட்டிலேஜ் என்ற ஜவ்வு உள்ளது. வயதாகும் போது இந்த ஜவ்வில் ஏற்படும் தேய்மானத்தால் எலும்பில் கிராக் மற்றும் பிராக்சர் போன்ற பிரச்னைகள் வருகிறது. இதன் காரணமாக வலி ஏற்படுகிறது. உடலின் எடையை தாங்கும் விதத்தில் முழங்கால் மூட்டு வலிமையுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூட்டு வெளியில் தெரியும்படி இருப்பதால் எளிதில் அடிபட்டு காயங்களுக்கு உள்ளாகிறது. இதனால் முழங்கால் மூட்டுப் பிடிப்பு மற்றும் பிறழ்வு ஏற்படுகிறது.
நமது எலும்புக்கூட்டில் எலும்புகள் கூடி இருக்கிறதே அந்த இடம்தான் மூட்டுகள். அதில் அசையும் மூட்டு, அசையாமூட்டு என்று இருவகை   உண்டு. தலையில் எலும்புகள் கூடி இருக்கும் இடம் அசையா   மூட்டு. நாம் பேசும்போது கீழ்தாடை மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு. ஓடுகிறோம். விளையாடுகிறோம். வேலைகளைப் பார்க்கிறோம். இவைகளில் நமது அசையும் மூட்டுகள் அதிக பங்காற்றுகிறது. இந்த மூட்டுகளில் தோள்மூட்டு, முழங்கைமூட்டு, மணிக்கட்டு மூட்டு, இடுப்பு மூட்டு, முழங்கால் மூட்டு போன்றவை முக்கியமானவை. மூட்டுகளில் இத்தனை இருந்தாலும், நாம் முழங்கால் மூட்டில் ஏற்படும் வலியைத்தான் பெரும்பாலும் மூட்டுவலி என்று சொல்கிறோம்.
முழங்கால் மூட்டில் பாதிப்பு ஏற்பட்டால் மூட்டு வசதியாக மடிந்து கொடுக்காது. கடும் வலி ஏற்படும். வீக்கம் தோன்றும். இடுப்பில் உள்ள மூட்டு சரியாக இயங்கவில்லை என்றால் முதுகெலும்பின் மூலம் ஓரளவு அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். மூட்டுவலிக்கு முக்கியமான   காரணம் அதில் ஏற்படும் தேய்மானம். இந்த மூட்டுகளில் வழுவழுப்பான திசுக்களான  குருத்தெலும்பின் வழவழப்புத்தன்மை   குறைந்துவிட்டால் மூட்டை அசைக்கும்போது சோர்வும் வலியும் ஏற்படும். அதைத் தான் தேய்மானம் என்கிறோம். பெண்களுக்குத்தான் இத்தகைய தேய்மானம் அதிகம் ஏற்படுகிறது.
முன்பெல்லாம் 65 வயதுக்கு மேல் எட்டிப்பார்த்த மூட்டு தேய்மானம், இப்போது 35 வயதை கடக்கும்போதே தோன்றி தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுகிறது. இதுபோன்ற வலியின்றி, நாம் நலமுடன் வாழவும் வழி உள்ளது. சரியான வாழ்க்கை முறை, உணவு முறை,உடற்பயிற்சி போன்றவைகளில் அக்கறை கொள்ள வேண்டும். அதையும் மீறி வலி வந்துவிட்டால் முறையான சிகிச்சை பெற்று மூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
வாத நோய்களில் நாள்பட்ட மூட்டு வலி மிகவும் கடுமையாக இருக்கும். அதிலும் இந்த காலத்தில் இளைஞர்களும் இதனால் அவதிப்படுகின்றனர். இந்த வலி வந்தால், மூட்டுகளில் வீக்கத்துடன் கடுமையான வலியும் வரும். இத்தகைய மூட்டு வலி வருவதற்கு காரணம் உடலில யூரிக் ஆசிட்டின் அளவு அதிகமாக இருப்பதே ஆகும்.
நாளடைவில் பெரிய நோயாக மாறும் இந்த மூட்டு வலிக்கு நமது அன்றாட உணவு முறைகளே போதுமானது. உணவில் உள்ள கரோட்டீன் மூலம் வலியை நிவாரணம் செய்யமுடியும். இந்த கரோட்டீன் நாம் அன்றாடம் உபயோகிக்கும் வெங்காயத்தில் அதிகப்படியாக உள்ளது.
அதே சமயம் எப்படி ஒருசில உணவுகள் மூட்டு வலிகளுக்கு தீர்வு தருகின்றதோ, அதேப் போல் ஒருசில உணவுகள் பாதிப்பையும் ஏற்படுத்தும்.
நாளடைவில் பெரிய நோயாக மாறும் இந்த மூட்டு வலிக்கு நமது அன்றாட உணவு முறைகளே போதுமானது. உணவில் உள்ள கரோட்டீன் மூலம் வலியை நிவாரணம் செய்யமுடியும். இந்த கரோட்டீன் நாம் அன்றாடம் உபயோகிக்கும் வெங்காயத்தில் அதிகப்படியாக உள்ளது.
அதே சமயம் எப்படி ஒருசில உணவுகள் மூட்டு வலிகளுக்கு தீர்வு தருகின்றதோ, அதேப் போல் ஒருசில உணவுகள் பாதிப்பையும் ஏற்படுத்தும்.
முக்கியமாக யூரிக் ஆசிட் அதிகம் உள்ள உணவுகளான தக்காளியை சாப்பிட்டால், இன்னும் மூட்டு வலியானது அதிகமாகுமே தவிர குணமாகாது. எனவே வாத நோய்கள் வந்துவிட்டால், உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும்.
இன்றைய தேதியில் முக்கிய வாத நோய்களில் ஒன்றானது ஆர்த்ரிடிஸ் , இதனை கட்டுப்படுத்த எந்தெந்த உணவுகளை உண்ண வேண்டும், எந்த உணவுகளை உண்ண கூடாது என்று தெரிந்து கொள்வதே புத்திசாலித்தனம்.
மூட்டு நோய்களின் பொதுவான வகைகள்
ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் - இது நோய்க் கிருமிகள் மற்றும் மூப்பு, மூட்டு இணைப்புகளில் அடிபடுவதால் ஏற்படுகிறது.
ருமடாய்ட் ஆர்த்ரைட்டிஸ் - உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி உடலுக்கு எதிராகவே இயங்கும்போது இந்த நோய் ஏற்படுகிறது.
செப்டிக் ஆர்த்ரைட்டிஸ் - மூட்டு இணைப்புகளை நோய்க் கிருமிகள் தாக்கும்போது ஏற்படுகிறது.
கௌட்டி ஆர்த்ரைட்டிஸ் - இது யூரிக் அமிலத்தின் படிமங்கள் மூட்டு இணைப்புகளில் படிவதால் ஏற்படுகிறது.
மன அழுத்தம் எவ்வகையான மூட்டு நோயையும் அதிகப்படுத்துவதோடு, இதுவே நோய் ஏற்படுவதற்கும் முக்கியக் காரணமாகவும் அமைவதாக ஆய்வுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
மூட்டுவலிக்கான காரணங்கள்
மூட்டுவலியை ஏற்படுவதில் ஏராளமான காரணிகள் உண்டு. எனவே, ஒரு காரணத்தினால் மட்டுமே மூட்டுவலி வரும் என கூறமுடியாது. மூட்டுவலிக்கான காரணங்களில் கீழ்க்கண்டவையும் உள்ளடங்கும்:
ருமடாய்டு ஆர்த்ரைடீஸ்
ஆஸ்டியோஆர்த்ரைடீஸ்
கீல்வாதம்
லைம் நோய்
மேகவெட்டை நோய்
உடல்பருமன்
தோல் அழிநோய் எனப்படும் லூபஸ்
பலவீனம்
மூட்டு தளர்வு
நாண் உரைப்பை அழற்சி எனப்படும் பர்ஸிடிஸ்
ஆன்கிலோஸிங் ஸ்பாண்டிலிடிஸ் எனப்படும்
எலும்பு புற்றுநோய்
மேற்கூறப்பட்ட பெரும்பாலான காரணங்களில் முக்கியமான ஒன்று ருமடாய்டு ஆர்த்ரைடீஸ் ஆகும்உண்மையில் இந்தியாவில் மூட்டுவலியை ஏற்படுத்துவதில் ருமடாய்டு ஆர்த்ரைடீஸுக்கு பெரும் தொடர்பு உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
WHO-ILAR COPCORD மிகப்பெரிய அளவில் நடத்திய ஆய்வில் ருமடாய்டு ஆர்த்ரைடீஸுடன் இந்தியாவில் வாழும் மக்களின் எண்ணிக்கை 4.25 மில்லியனாகும்
ருமடாய்டு ஆர்த்ரைடீஸ் பற்றி நாம் அறிந்துகொள்ள முற்படுவோம்.
ருமடாய்டு ஆர்த்ரைடீஸ் எனப்படும் தன் தடுப்பாற்றல் நோயானது எதிர்ப்புத்திறன் தவறாக உடல் திசுக்களை தாக்கத்துவங்கும்போது குறிப்பாக சவ்வுகள் (மூட்டு சவ்வு படலங்கள்) வீங்கும்போது ஏற்படுகிறது.
இந்த நிலையானது மூட்டுகளின் படலத்தை பாதித்து வலியுடனான வீக்கத்தை ஏற்படுத்துகிறது சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் நோய் பாதிப்பு அதிகமாகி எலும்பு அரிப்பு மற்றும் மூட்டு உருமாறும் குறைபாடு ஆகியவற்றை ஏற்படுத்திவிடும்.
நோயின் தாக்கத்தைப் பொறுத்து ருமடாய்டு ஆர்த்ரைடீஸ் உடலின் அனைத்து மூட்டுக்களையும் தாக்கக்கூடும். உடலில் உள்ள ஏராளமான மூட்டுகளில், முழங்கால் மூட்டு மிக அதிகமாக பாதிக்கப்படுவதால் ருமடாய்டு ஆர்த்ரைடீஸ் நோயாளிகள் முழங்கால் வலியால் பெரிதும் அவதிப்படுகின்றனர்.   முழங்கால் வலி கடுமையாகவும் நாள்பட்டதாகவும் இருக்கும்.  ஒவ்வொரு மாதமும் அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை என வரக்கூடும். சிலர் ஒரே மாதத்தில் பல முறை அதனால் அவதிப்படக்கூடும்.
முழங்கால் வலி ஒரு விதமான அசௌகரியத்தை ஏற்படுத்துவதோடு ஒரு நபரின் சீரான இயக்கத் திறனையும் குறைத்துவிடுகிறது. முழங்கால் வலி என்பது பொதுவாக வயதானவர்களை, முதியோர்களைத்தான் பாதிக்கும் என்றிருந்தாலும் சில சமயங்களில் இளம் வயதினரும் அந்த நிலைக்கு தள்ளப்படலாம். ஒருசிலருக்கு முழங்காலின் ஒரு பகுதியில் வலியும் சிலருக்கு முழங்கால் முழுவதுமே வலியும் இருக்கக்கூடும். பெரும்பாலானவர்களுக்கு முழங்கால் வலியில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தவேண்டியிருக்கும் . ஒரு சிலர் விரைவாகவும் குணமடைவார்கள்.
ருமடாய்டு ஆர்த்ரைடீஸ் தவிர, உடல்பருமன் மற்றும் அதிக எடை ஆகியவையும் முழங்கால் வலிக்கு காரணமாகிவிடுகிறது. உடல் எடை அனைத்தையும் தாங்கவேண்டிய இடத்தில் முழங்கால் அமைந்துள்ளது. எனவே முழங்கால் தொடர்ச்சியாக பாரத்தையும் அழுத்தத்தையும் தாங்கவேண்டியுள்ளது.  உடல் எடையினால் முழங்கால் மூட்டில் ஏற்படும் உராய்வு,  திசுக்கள் மற்றும் தசைநார்களின் தேய்மானத்திற்கு வழிவகுத்துவிடுகிறது. இது வலி மற்றும் வீக்கத்தை அளிப்பதோடு மூட்டுகளின் ஆரோக்கியத்தையும் குறைத்துவிடுகிறது.
முன்பெல்லாம் 65 வயதுக்கு மேல் எட்டிப்பார்த்த மூட்டு தேய்மானம், இப்போது 35 வயதை கடக்கும்போதே தோன்றி தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுகிறது. இதுபோன்ற வலியின்றி, நாம் நலமுடன் வாழவும் வழி உள்ளது. சரியான வாழ்க்கை முறை, உணவு முறை,உடற்பயிற்சி போன்றவைகளில் அக்கறை கொள்ள வேண்டும். அதையும் மீறி வலி வந்துவிட்டால் முறையான சிகிச்சை பெற்று மூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
 தடுக்கும் முறைகள்:
1.நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு (பச்சையாக) ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.
 2. ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
3.இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி தேன், ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினம் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
4.வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு மூட்டில் நன்கு தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.
5.இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் வைத்து சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை சாப்பிட வேண்டும். (இது ஒரு ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும்). இதை தொடர்ந்து 3 வாரங்கள் சாப்பிட வேண்டும். பிறகு 3 வாரங்கள் கழித்து மீண்டும் 3 வாரங்கள் சாப்பிட வேண்டும். இதை சாப்பிடும்போது காரமான உணவு, புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.. ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.
உணவுப் பழக்கம்
 1. வாழைப்பழம் அதிகமாக சாப்பிட வேண்டும்.
2. காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.
3. கால்சியம் அதிகம் உள்ள பால், பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும் 
தவிர்க்க வேண்டியவை காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம்.
பூசணிக்காய்: பூசணிக்காயில் கரோட்டீன் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை சாப்பிடுவதால், மூட்டுகளில் ஏற்படும் காயங்கள், வீக்கங்கள் மற்றும் வலிகள் போன்றவற்றை நாளடைவில் குணமாகும்.
தக்காளி: தவிர்க்க வேண்டிய முக்கிய பழம். தக்காளியின் விதைகளில் யூரிக் ஆசிட் அதிகம் உள்ளது. எனவே தக்காளியை அதிகம் சாப்பிட்டால், உடலில் யூரிக் ஆசிட்டின் அளவானது அதிகமாகி, வலியானது இன்னும் கடுமையாகிவிடும். எனவே இதனை தவிர்ப்பது நல்லது.
மீன்: சாப்பிடவும், மீனில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளதால், அவை உடலின் மூட்டுகளில் உள்ள காயங்களை குணப்படுத்தும். மேலும் அவை உடலில் உள்ள குருத்தெலும்பு திசுக்களை(Cartilage tissue) சாப்பிடும் உற்பத்தியை தடுத்துவிடும்.
மாட்டிறைச்சி: தவிர்க்கவும், மூட்டுகளில் வலி இருப்பவர்கள், பாஸ்பரஸ் அதிகம் உள்ள உணவுகளான மாட்டிறைச்சி போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த நேரம் உடலில் பாஸ்பரஸ் அதிகம் இருந்தால், எலும்புகளில் உள்ள நிறைய கால்சியத்தை இழக்க நேரிடும்.
க்ரீன் டீ: சாப்பிடவும், க்ரீன் டீயில் நிறைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே அவை உடலின் மூட்டுகளில் ஏற்படும் வலியின் அளவை குறைத்துவிடும். மேலும் இதில் உள்ள நிக்கோட்டின் ஒரு சிறந்த வலி நிவாரணி.
பால்: தவிர்க்கவும், பாலில் அதிகமான அளவில் ப்யூரின் இருப்பதால், அவை யூரிக் ஆசிட்டின் அளவை அதிகரிக்கும். எனவே இதனை தவிர்க்க வேண்டும்.
ஆலிவ் ஆயில்: சாப்பிடவும் , இந்த எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளதால், அவை மூட்டுகளில் எந்த பிரச்சனை இருந்தாலும் சரிசெய்யும்.
சமையல் எண்ணெய்: தவிர்க்கவும் சமையல் எண்ணெய்களான சோயா பீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய்களில் அதிகமான அளவில் ஒமேகா-6 ஃபேட்டி ஆசிட் இருக்கிறது. இந்த ஃபேட்டி ஆசிட்கள் மூட்டுகளில் காயங்கள் மற்றும் வலிகளை அதிகமாக்கும்.
பிரேசில் நட்ஸ்: சாப்பிடவும் பிரேசில் நட்ஸில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் செலினியம் அதிகம் உள்ளது. ஆகவே இவை மூட்டு வலியை குணமாக்குவதில் சிறந்ததாக உள்ளது.
கடல் சிப்பி: தவிர்க்கவும், சிப்பிகளில் ப்யூரின் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், யூரிக் ஆசிட்டின் அளவி அதிகமாகி, மூட்டுகளில் வலியும் அதிகமாகும்.
ஆரஞ்சு: சாப்பிடவும், ஆரஞ்சு பழத்தின் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளதால், அவை எலும்புகளுக்கு ஆரோக்கியத்தை தரும்.
சர்க்கரை: தவிர்க்கவும், மூட்டு வலிகளுக்கு சர்க்கரை மிகவும் கேடு விளைவிக்கும் ஒரு உணவுப் பொருள். ஏனெனில் சர்க்கரை அதிகம் சாப்பிட்டால், உடல் எடை அதிகமாவதால், மூட்டுகளில் அழுத்தம் அதிகரித்து, வலியும் அதிகமாகும்.
வெங்காயம்: சாப்பிடவும் வெங்காயத்தில் க்யூயர்சிடின் (quercetin) என்னும் கெமிக்கல் உள்ளது. இந்த கெமிக்கல் அஸ்பிரின் (aspirin) போன்றே, ஒரு சிறந்த வலி நிவாரணி.
கெஃப்பைன்: தவிர்க்கவும், கெஃப்பைன் உடலில் வறட்சியை ஏற்படுத்தி, மூட்டுகளில் வலியை அதிகரிக்கும். மேலும் அவை உடலில் உள்ள சத்துக்களை வெளியேற்றி, மூட்டுகளில் வலியை அதிகரிக்கும்.
மஞ்சள்: சாப்பிடவும், மசாலாப் பொருட்களில் மஞ்சளும் ஒன்று. அதுமட்டுமின்றி, மஞ்சள் ஒரு கிருமி நாசினி. எனவே இதில் உள்ள மருத்துவப் பொருளானது, உடலில் உள்ள காயங்களை குணப்படுத்தி, மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைத்துவிடும்.
தானியங்கள்: தவிர்க்கவும், கோதுமை, பார்லி மற்றும் ஓட்ஸ் போன்றவற்றில் சிம்பிள் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. எனவே அவற்றை சாப்பிடும் போது, அவை ஆர்த்ரிடிஸ் நோய்க்கான அறிகுறியை அதிகரிக்கும்.
செர்ரி: சாப்பிடவும், செர்ரியில் உள்ள ஆந்தோசயனின்கள், குருத்தெலும்புகள் மற்றும் ஜவ்வுகளை வலுப்படுத்த உதவும். இதனால் மூட்டு வலி இருப்பவர்கள், இதனை சாப்பிட்டால், வலியை குறைத்து, மூட்டுகளை வலுவாக்கலா,.
மது: தவிர்க்கவும், மது பழக்கத்தால் உடலில் கால்சியம் சத்துக்கள் சரியாக உறிஞ்சப்படாமல், எலும்புகளை வலுவிழக்கச் செய்யும். அதிலும் இதனை கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குடித்தால், கால்சியம் குறைபாடு ஏற்பட்டு, உடல் நிலை மோசமாகிவிடும்.
இஞ்சி: சாப்பிடவும், இஞ்சியிலும் மஞ்சளைப் போன்ற மருத்துவக் குணம் உள்ளது. எனவே மூட்டு வலிகள் இருப்பவர்கள் தினமும் இஞ்சியை சேர்த்துக் கொள்வது சிறந்த நன்மையைத் தரும்.
காய்கறிகளில் தவிர்க்க வேண்டியவை: கத்திரிக்காய், சிவப்பு குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றில் அல்கலாய்டுகள் அதிகம் இருப்பதால், அவை மூட்டுகளில் காயங்களை அதிகப்படுத்தி, குணமாகிக் கொண்டிருக்கும் மூட்டு வலியையும் குணமாகாமல் தடுக்கும். எனவே இந்த காய்கறிகள் உணவில் சேரமால் கவனம் கொள்ளவும்
மேலும் சில யோசனைகள்
•மூட்டு இணைப்புகளுக்குச் சேதம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
•உங்கள் உடல் எடை அனைத்துப் பக்கமும் சீராக இருக்கும்படி உங்கள் உடல் அமரும் நிலை மற்றும் இதர உடல் நிலைகளை அடிக்கடி மாற்றிக்கொள்ளவும்.
•கடுமையான வேலைக்குப் பிறகு நன்கு ஓய்வு எடுத்துக் கொள்ளவும்.
•உடற்பயிற்சி செய்யும் முன் அதற்கான தகுந்த ஆரம்பப் பயிற்சிகள் (warming up exercises) செய்யவும்.
யோகாவும் மூட்டு வலியும்
•மூட்டு நோய்கள் வராமல் தடுப்பதற்கும், குணப்படுத்துவதற்கும் மூட்டு இணைப்புகளை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியம். யோகாசனங்கள் மூட்டு இணைப்புகளை உறுதிப்படுத்துகிறது.
•யோகாசனங்கள் செய்பவரின் மூட்டு இணைப்புகள் அசாதாரணமான சூழ்நிலைகளிலும் இயல்பாகச் செயல்படுவதால் மூட்டு தசைகள் விறைப்படைவது குறைகிறது.
•உடலில் யூரிக் அமிலத்தின் அளவை யோகப் பயிற்சிகள் ஒழுங்குபடுத்துகின்றன. யோகப் பயிற்சிகள் மூலம் உடற்பருமன் அடைவதைத் தடுக்க முடியும்.
•யோகா மூலம் கிடைக்கும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை உடலின் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கிறது. இந்த எதிர்ப்புச்சக்தி மூட்டு வலியிலிருந்து மட்டுமல்லாமல் மற்ற நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது.
•மூட்டு நோயால் அவதிப்படுபவர்களின் வலி மற்றும் இயலாமையால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைத்து நேர்மறை உணர்வுகள் அதிகரிக்க உதவுகிறது.
•யோகப் பயிற்சிகளில் உள்ள ஒருங்கிணைக்கப்பட்ட அசைவுகள், விறைப்படைந்த மற்றும் சேதமடைந்த மூட்டு இணைப்புகளுக்கு நிவாரணம் அளிக்கின்றன.
•மேலும் சுவாசத்தை உபயோகித்துச் செய்யக்கூடிய யோகப் பயிற்சிகள், மூட்டு இணைப்புகளைப் பாதுகாக்கும் தசைகளுக்கு ஓய்வு/தளர்வு அளிக்கிறது.
•மூட்டு இணைப்புகளில் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதால், தேவையற்ற நச்சுப் பொருட்கள் நீங்கி, வலி மற்றும் விறைப்புத்தன்மை குறைய உதவுகிறது.
•மருந்து மற்றும் மருத்துவ உதவியோடு, யோகப் பயிற்சிகளையும் இணைத்துக் கொள்ளும்போது, நிவாரணம் துரிதமாகும்!
மூட்டு நோய்கள் ஒருவரின் உடற்செயல்களை முடக்கி, அன்றாடச் செயல்களுக்கும் அடுத்தவரைச் சார்ந்திருக்க நேரிடும் எனப் பலர் நினைக்கின்றனர். ஆனால் மூட்டுவலி ஸ்ட்ரோக் போல் செயல்படாது. மூட்டுவலி தாக்கும்போது, மூட்டு இணைப்புகள் மிகவும் வலிக்கலாம். ஆனால், அதற்காக அவர்களின் உடற்செயல்கள் முடக்கப்பட்டுவிட்டது என்று பொருள் அல்ல. மூட்டு நோய்கள் இருப்பினும் அவர்கள் தகுந்த உணவு மற்றும் வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்தால், வாழ்க்கையில் மற்றவர்போல் இயங்க முடியும்.

No comments:

Post a Comment