Wednesday 12 September 2018

உணவில் அதிகம் உப்பு சேர்ப்பவரா நீங்கள்! எச்சரிக்கை!!!!!!!

உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன?

உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure) அல்லது இரத்தக் கொதிப்பு(Hypertension) என்பது நம் இரத்த அழுத்தம் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் அளவினை விட அதிகமாக இருப்பதே ஆகும். சில நேரங்களில் உங்களால் இதை உணர முடியும். ஆனால் தகுந்த சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால் இதயத்தின் செயல்படும் தன்மை குறைக்கப்படுகிறாது. இச்செயல் “இதய செயலிழப்பு” (Heart Failure) ஏற்படுவதற்கு வழி வகுக்கிறது.

மேலும் உயர் இரத்த அழுத்தம் மாரடைப்பு (Heart Attack) மற்றும் வாதம் (பக்க வாதம்) ஏற்படுவதற்கான வாய்ப்பினை அதிகப் படுத்துகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்குப் பின்வரும் காரணங்களால் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது என்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அவை…
புகைப் பிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றம். இரத்தம் குறைந்த அளவில் சிறுநீரகத்திற்கு எடுத்துச் செல்லப்படுதல் சிறுநீரகக் கோளாறுகளினால் பாதிக்கப்பட்டவர்கள்
அதிகக் கொழுப்பு தமனிகளில் படிவதனால் இருதய தமனிகள் சுருங்குதல்
கர்ப்பத்தடை மாத்திரைகள் உட்கொள்ளுதல் போன்றவையாகும்.

“உலகம் முழுதும் 25 முதல் 30 சதவீதத்தினர் உயர்ரத்த அழுத்தத்தால்  பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், மேற்கத்திய நாடுகளில், பாதிப்ப டைபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இந்தியாவில் 2 முதல் 3 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது’ என, ஒரு ஆரா ய்ச்சி தெரிவிக்கிறது. இந்த முடிவு கவலையளிப்ப தாக உள்ளது. காரணம், உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வராவி ட்டால், இதய பாதிப்பு, இதயம் மற்றும் சிறு நீரகச் செயலிழப்பு, ரத்த நாளங்கள் சிதைந்து போதல், கண் பார்வை பறி போதல் ஆகியவை ஏற்படும்.  நினைவுத்திறனும் குறைந்து, சீரான சிந்தனை தடைபடும். இருபது வயதை அடைந்துவிட்டாலே, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 40 வயதை அடைந்து விட்டால், ஆண்டுதோறும், ரத்த அழுத்தப் பரிசோதனையை வழக்கமாக கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம் என்பது, ரத்த நாளத்தின் மீது, இதயத்திலிருந்து வெளியேறும் ரத்தம் பாயும் வேகத்தை குறிக்கும்.


இது, இரண்டு வகையிலான அளவில் கணக்கெடுக்கப்படுகிறது. ஒன்று, இதயம் சுருங்கும் போது வெளி யேற்றப்படும் ரத்தம் ஏற்படுத்தும் அழுத்தம் (சிஸ்டோலிக்) மற்றொன்று, இதயத்தின் கீழறைகள் விரியும் போது வெளியேறும் ரத்தம் ஏற்படுத்தும் அழுத்தம் (டயஸ்டோலிக்.) அதாவது, 120/80 என்பது சீரான ரத்த அழுத்தத்தின் அளவு. 139/89 என்பது, உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுவதற்கான முந்தைய நிலை; 140 /90 என்ற அளவோ, அதற்கு மேலோ, உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டுவிட்ட நிலையை குறிக்கிறது. வயது ஏற ஏற, ரத்தக்குழாய்கள் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையை இழந்து தடித்து விடுகின்றன.

இந்த பாதிப்பு ஏற்படும் போது, சிஸ்டோலிக் அழுத்தம் மட்டும் அதிகரித்து காணப்படும். 60 வயதை தாண்டிய 70 சதவீதத்தின ருக்கு, இது போன்ற ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. வயது அதிகரிப்பு, உடல் எடை அதிகரிப்பு, பாரம்பரியமாக ரத்த அழுத்தம் ஏற்படும் தன்மை, சிறுநீரக நோய்கள், நீரிழிவு நோய், சுரப்பி நோய்கள், புகைபிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம், கார்ட்டிகோஸ்டிராய்டு, கருத்தடை மாத்திரைகள், உடல் எடை குறைப்பு மாத்திரைகள் சாப்பிடுவது ஆகியவை, ரத்த அழுத்த த்தை அதிகரிக்கும். பிறப்பி லேயே ரத்தக் குழாய்கள் சுருங்கி காணப்பட்டாலும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்.

எந்த காரணமும் இன்றி, உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டால், அதற்கு, “எசென்ஷியல் ஹைப்பர்டென்ஷன்’ என்று பெயர். இதனால் ஏற்படும் சிக்கலை தவிர்க்க, அவசியம் மருந்து உட்கொள்ள வேண்டும். “சிஸ்டோலிக்’ வகை உயர் ரத்த அழுத்த பாதிப்புக்குக் கூட மருந்து உட்கொள்ளுதல் அவசியம்.

உணவில் சேர்க்கும் உப்புக்கும், ரத்த அழுத்தத்திற்கும் தொடர்பு உண்டு. அதிக உப்பு சேர்த்து கொண்டால், உயர் ரத்த அழுத்தம் 
ஏற்படும். சிலருக்கு, சிறியளவில் உப்பு சேர்த்து கொண்டாலே, உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். மக்கள் தொகையில், 20 சதவீத த்தினர் இவ்வகையை சேர்ந்தவர்கள். சீரான உடல் நிலையில் உள்ளவர்கள் தினமும், 5 கிராம் அல்லது ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து கொள்ளலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.

நான்கு பேர் கொண்ட குடும்ப த்திற்கு, நாள் ஒன்றுக்கு, மொத்தமாக தேவைப்படும் உப்பு, 4 டீஸ்பூன் தான். உப்பு அளவை கணக் கிடும் போது, உணவில் இயற்கையாகவே உள்ள உப்பையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லா உணவிலும் – குடி நீரில் கூட, இயற்கை உப்பு உள்ளது.

எல்லா வகையான உணவு தயாரிப்பிலும், ஏதாவது ஒரு வகையான உப்பு சேர்க் கப்படுகிறது. மோனோ சோடியம் க்ளூடாமேட், சோடியம் நைட்ரைட், சோடியம் சாச்சரின், சோடியம் பைகார் பொனேட் (பேக்கிங் சோடா), சோடியம் பென்சொயேட் ஆகிய ஏதாவது ஒரு உப்பு, தக்காளி சாஸ், சோயா சாஸ், ஊறு காய் வகைகளில் சேர்க்கப்படுகிறது. 

பதப்படுத்தப்பட்ட ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி, இறைச்சியை உள்ளடக்கி செய்யப்படும் பலகாரங்கள், பர்கர், பிட்சா ஆகியவ ற்றில், அதிகளவு உப்பு சேர்க்கப்படுகிறது. ரத்த அழுத்தத்தைச் சீராக்க, நிறைய மருந்துகள் தற்போது கிடைக்கின்றன. வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு, இவ்வகையான மருந் துகளையும் சிறியளவில் உட் கொண்டு வந்தால், ரத்த அழுத்த த்தைக் கட்டுக் குள் வைத்திருக்க முடியும்.

இதற்கு சுய முயற்சி தேவை. பல மருத்துவர்களும், நோயாளிகளும், மாத்திரையின் அளவைக் கூட்டிக் கொள்வதோடு சிகிச்சை முடிந்ததாக கருதுகின்றனர். புரிந்து கொள்ளுங்கள்… வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது, மாத்திரை உட்கொள்ளும் போது ஏற்படும் பக்க விளைவுகளைக் கொண்டது அல்ல! உங்கள் உடல் எடை, சீராக இருக்க வேண்டியது அவசியம்.

உடல் எடை அதிகரிக்கும் போது, ரத்தக் குழாய்களுக்கான அழுத்தம் அதிகரிக்கும். எனவே, பி.எம்.ஐ., அளவைச் சரியாக வைத்துக் கொள்ளுங்கள். செயலற்றுக் கிடப்பவர்களின் இதயத் துடிப்பு அதி கரித்து, தேவைக்கு அதிகமான பணி செய்யும் நிலை ஏற்படும். எனவே, இதயம் சீக்கிரம் செயலிழக்கும். நடைபயிற்சி, மித ஓட்ட ப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, ஓட்டப் பயிற்சி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் மேற்கொள்ள வேண்டியது மிக அவசியம். 

6 வயது முதலே இதை துவங்கலாம். முதலில் 20 நிமிட ஓட்ட மாக துவங்கி, 18 வயது நிரம்பியவுடன், ஒரு மணி நேர ஓட்டமாக அதிகரித்துக் கொள்ளலாம். புகை பிடிப்பது, அருகில் இருப்பவர் விடும் புகையை சுவாசிப்பது, மூக்குப்பொடி போடுவது, புகையிலை மெல்வது ஆகியவை, ரத்தக் குழாய்களை பாதிக்கும் வகையிலான ரசாயனங்களை வெளியிடுகின்றன. 

இவை ரத்தக் குழாய்களை சுருக்கி விடுவதால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. உணவில் தினமும் 5 கிராமோ அல்லது அதற்கு குறைவான அளவோ, உப்பு சேர்ப்பது நல்லது. உடலில் நீர் சத்தை தக்க வைக்க இது பயன்படும். இந்த அளவை மீறினால், அதே நீரே, உடலில் தங்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும்.

பழங்கள், காய்கறிகளில் உள்ள பொட்டாசியம் சத்து, உடலில் சேரும் உப்புச் சத்தை அதிகரிக்க விடாமல் செய்கிறது. எனவே, தினமும் 4 முதல் 6 முறை பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். உணவு மூலமாக கிடைக்கும் அல்லது சூரிய ஒளி மூலம் கிடைக்கும் வைட்டமின் டி சத்து, சிறுநீரகத்தில் நொதிகளைச் சீராகச் செயல்பட வைத்து, ரத்த அழுத்தத்தை அதிகரிக்காமல் பாதுகாக்கும்.


எனினும், அதிகளவிலோ அல்லது தாறுமாறாகவோ வெயிலில் அலைய நேர்தால், ரத்த அழுத்தமும் சீரற்றதாகி விடும். மது அருந்துவது, இதயத்தை பாதிக்கிறது. ஒரே நேரத்தில் 2 அல்லது 3 கோப்பை மது அருந்தினால் கூட, ரத்த அழுத்தத்தில் மாறுபாடு தோன்றும். அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது, இதயம் நிரந்தர பாதிப்புக்கு உள்ளாகி விடும். தொடர்ந்து அதிக பதட்டத்துடன் இருந்தாலும், ரத்த அழு த்தம் அதிகரிக்கும்.

தியானம், யோகா ஆகிய வற்றின் மூலம் பதட்டத்தை தவிர்க்கலாம். பதட்டத்தை தவிர்க்க, சிலர் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, புகை பிடிப்பது, மது அருந்துவது ஆகியவற்றை மேற்கொள்கின்றனர். நீரிழிவு நோய், அதிக கொழுப்புச் சத்து சேர்வது, சிறுநீரக நோய், தூக்கமின்மை ஆகியவற்றை கட்டுப் பாட்டில் வைக்க வேண்டும்.

அவை, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் முக்கிய காரணி கள். இப்போதெல்லாம், 6 – 8 வயது குழந் தைகள் கூட, அளவுக்கு அதிக மாக உப்பு சேர்த்துக் கொள் கின்றனர். அதை ஈடு கட்டும் வகை யிலான உடற்பயிற்சிகள் செய்வதில்லை. எனவே, அவர் களின் வாழ்க்கையை முறையை, இளம் வயதிலேயே மாற்றினால், இப்பிரச்னையை தவிர்க்கலாம்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கம்:
சத்தான உணவு முறை ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தினைப் பெற மற்றுமொரு திறவு கோலாக விளங்குகிறது. உணவுகளில் கொழுப்பு (கொலஸ்ட்ரால்) குறைந்த மற்றும் சீரான சம அளவு ஊட்டச்சத்தினைக் கொண்டவற்றைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள் புரதச்சத்து நிறைந்தவை மற்றும் குறைந்த கொழுப்பு (அல்லது) கொழுப்பு இல்லாத பால் பொருட்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வழக்கமான நாள் என்பது மூன்று முழு உணவுடனும், இரண்டு அல்லது மூன்று சிற்றுண்டிகளுடனும் இருக்க வேண்டும். 

நாம் உண்ணும் உணவானது நிறமுடையதாகவும், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளுடனும் குறைந்த புரதச்சத்துடனும் உணவை நிறைவு செய்ய வேண்டும். கொட்டைகள், விதைகள், புதிய பழங்களைச் சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ள வேண்டும். உண்ணாமல் இருப்பதைத் தவிர்த்து அதற்குப் பதிலாகச் சத்து நிறைந்த பொருட்களை உண்பதே ஆரோக்கியமான உணவுமுறை ஆகும். உணவில் சோடியம் உப்பு மற்றும் செயற்கையான முறையில் வெண்மையாக்கப் பட்ட சர்க்கரை (Refined Sugar) போன்றவை உபயோகிப்பதைக் குறைக்க வேண்டும். கொழுப்புகள் அடங்கியுள்ள இறைச்சி உணவினை அறவே தவிர்க்க வேண்டும்.

காலையில் நல்ல ஆரோக்கியமான உணவினை வயிறு நிறைய உண்ணலாம். ஆனால் இரவில் அரை வயிறு உணவினை உண்டாலே போதுமானது. வயிறு நிறைய உணவினை உண்ணும்போது அவ்வுணவு செரிக்க உடல் உழைப்பினை மேற்கொள்ள வேண்டும். உணவினை ஒரு நாளைக்கு மூன்று முறை வயிறு முட்டச் சாப்பிடுவதைத் தவிர்த்து ஐந்து முறை அரை வயிறு உணவினை உண்பதே போதுமானது. உண்ட உணவு செரிமானம் அடைந்து பசி ஏற்பட்ட பிறகே அடுத்த வேளை உணவினை சாப்பிட வேண்டும். அதுவும் இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளையே சாப்பிட வேண்டும்.

குறந்த அளவு உணவு சாப்பிட வேண்டும் என்பதற்காகப் பட்டினி கிடப்பதும் தவறு. பட்டினியாக இருப்பதனால் உடலில் இரத்த அழுத்தத்தின் அளவு அதிகரிக்கிறது. அதுவும் காலை உணவைத் தவிர்க்கவே கூடாது. உண்ணும் உணவுகளை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். அப்போது தான் உணவானது இரைப்பையில் விரைவில் செரிமானம் அடையும். எந்தெந்த உணவுகளை எப்பொழுது உண்ண வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்க வேண்டும். உணவில் அரிசி வகைகளை மட்டுமே உண்ணாமல் கம்பு, சோளம் மற்றும் திணை போன்ற சிறுதானியங்களை காலை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். காய்கறிகள் மற்றும் கீரை போன்றவற்றை மதிய உணவிலும், இரவு உணவிற்கு பெரும்பாலும் இட்லி, தோசை மற்றும் இடியாப்பம் போன்ற எளிதில் செரிமானமாக்க்கூடிய உணவு வகைகளைச் சேர்க்க வேண்டும்.

காலையும் மாலையும் சிறிது நேர உடற்பயிற்சி அவசியம். அதோடு நடை பயிற்சியும் அவசியம். உணவில் அதிக அளவு காய்கற்கள், பழங்கள் மற்றும் கீரைகள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரைகளில் குறிப்பாக குப்பைக் கீரை, முருங்கைக் கீரை மற்றும் சிறுகீரை போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உண்ணும் உணவு செரிமானம் ஆவதற்குத் தேவையான ஆவதற்குத் தேவையான உடல் உழைப்பு மிகவும் அவசியம். எண்ணையில் பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், சீரணமாகத உணவுகள், காபி, தேனீர் மற்றும் உப்பு போன்றவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இரவு உணவு அருந்திய உடன் உறங்கச் செல்லக் கூடாது. இரவு உணவுக்கும் உறங்கச் செல்வதற்கும் இடையில் குறைந்தது ஒரு மணி நேரம் இடைவெளி அவசியம்.

உறக்கம் என்பது மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய வரம். ஒரு மனிதன் சராசரியாக எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். இரவு அதிக நேரம் விழித்திருக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குத் தூங்க்கச் சென்று அதிகாலையில் எழ வேண்டும். குறிப்பாகப் பகலில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் சுய இன்பத்தில் ஈடுபடுவர்களுக்கும், எந்நேரமும் காமச் சிந்தனையுடன் இருப்பவர்களும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன. எனவே இவற்றைத் தவிர்த்து மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும்.
உப்பு அதிகம் உள்ள ஊறுகாய் மற்றும் கருவாடு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.


No comments:

Post a Comment