Tuesday 11 September 2018

நியாயத்தை துணிந்து செய் - மஹாகவி பாரதி

உண்மையான பக்தி இருந்தால் தான் மனோதைரியம் உண்டாகும். மனோ தைரியம் இருந்தால் உண்மையான பக்தி ஏற்படும். ஆயுள், ஆரோக்கியம், அறிவு, செல்வம் ஆகிய நான்கையும் தெய்வத்திடம் வேண்டி பெற வேண்டும். அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றிலும் தெய்வ ஒளியைக் காணலாம். தெய்வத்தின் ஒளி  கண்டால் நான்காம் நிலையான மோட்சம் கிடைக்கும்.

வாழ்க்கையில் ஒருவன் வெற்றி பெற, அவன் சம்பாதிக்கும் குணங்களில் மேலான குணம் பொறுமை. தன்னை மற, தெய்வத்தை நம்பு, உண்மை பேசு,  நியாயமான செயல்களைத் துணிந்து செய், அனைத்துஇன்பங்களையும் பெறுவாய். நம்முடைய விருப்பம் போல் உலகம் செயல்படவில்லை, தெய்வத்தின் விருப்பம் போல் தான் உலகம் இயங்குகிறது. மண்ணும், காற்றும், சூரியனும், சந்திரனும், உன்னையும் என்னையும் சூழ்ந்து நிற்கும் உயிர்களும், நீயும் நானுமே தெய்வம் என்று வேதம் கூறுகிறது.

ஒரு குழந்தைக்கு சோறு ஊட்டும் தாய்கூட, பூச்சாண்டி என்ற இல்லாத ஒன்றை இருப்பதைச் சொல்லி, குழந்தையை பயமுறுத்துகிறாள். இதன் அடிப்படையில் என்னவோ, தனது குழந் தை நன்றாக உணவு உண்டு உடல் நலமோடு வாழ வேண்டும் என்று தாய் நினைக்கிறாள். அது சரி, உடல் மட்டும் எந்த வித நோய் நொடியும் இன்றி நன்றாக வளர்ந்தால், போதுமா? குழந்தைக்கு தைரியத்தை ஊட்டி வளர்க்க வேண்டிய அந்த தாய், சோறு ஊட்டும்போது, அந்த ஒருபிடி சோற்றில், கொஞ்சம் பயத்தையும் கலந்து அல்லவா ஊட்டுகிறாள். அந்த பயம் பிஞ்சு நெஞ்சத்தில் ஆழமாக பதிந்து விடுகிறது. பின்பு அது வளர்ந்து ஆளான பிறகும் அந்த பயம் இருப்பதால்,  இருளைக் கண்டும் , ஒளியைக் கண்டும் பயந்து பயந்து நித்தம் சாகிறதே! இது எப்படி நியாயம் ஆகும்.

ஒரு மனிதன் எப்படி வளர வேண்டும்?  
எப்படி இருக்க வேண்டும்? 

எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்று முண்டாசுக் கவிஞன், மஹாகவி பாரதி, அன்றே எழுதி வைத்துள்ளானே! அதை படித்துப்பாருங்கள். அவன், மனிதனாக பிறந்தவன் எப்படி இருக்கவேண்டும் என்பதை புதிய ஆத்திச்சூடி ஒன்றை படைத்த தோடு அல்லாமல், தானும் அவ்வாறே வாழ்ந்து காட்டிய அந்த மஹாகவியின் வரிகளை படிக்கும்போதே! நமது சட்டென்றே உடலெங்கும் சிலிர்த்தெழும். அந்த மஹாகவியின் வரிகளை விதை 2 விருட்சம் உங்களுக்காக பகிர்கிறது. இதோ அந்த வரிகள் …

அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்.
இளைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன்
உடலினை உறுதிசெய்
ஊண்மிக விரும்பு
எண்ணுவது உயர்வு
ஏறுபோல் நட
ஐம்பொறி ஆட்சிக்கொள்
ஒற்றுமை வலிமையாம்.
ஓய்தல் ஒழி.
ஓளடதம் குறை.
கற்றது ஒழுகு.
காலம் அழியேல்.
கிளைபல தாங்கேல்.
கீழோர்க்கு அஞ்சேல்.
குன்றென நிமர்ந்து நில்.
கூடித் தொழில் செய்.
கெடுப்பது சோர்வு
கேட்டிலும் துணிந்து நில்.
கைத்தொழில் போற்று
கொடுமையை எதிர்த்து நில்.
கோல்கைக் கொண்டுவாழ்
கவ்வியதை விடேல்.
சரித்திரச் தேர்ச்சி கொள்
சாவதற்கு அஞ்சேல்
சிதையா நெஞ்சு கொள்.
சீறுவோர்ச் சீறு.
சுமையினுக்கு இளைத்திடேல்.
சூரரைப் போற்று
செய்வது துணிந்து செய்
சேர்க்கை அழியேல்.
சைகையில் பொருளுணர்.
சொல்வது தெளிந்து சொல்
சோதிடந் தளை யிகழ்.
சௌரியம் தவறேல்.
ஞமலிபோல் வாழேல்.
ஞாயிறு போற்று
ஞிமறென இன்புறு.
ஞெகிழ்வது அருளின்.
ஞேயம் காத்தல்செய்.
தன்மை இழவேல்.
தாழ்ந்து நடவேல்.
திருவினை வென்று வாழ்.
தீயோர்க்கு அஞ்சேல்.
துன்பம் மறந்திடு
தூற்றுதல் ஒழி.
தெய்வம் நீ என் றுணர்.
தேசத்தைக் காத்தல் செய்.
தையலை உணர்வு செய்.
தொன்மைக்கு அஞ்சேல்.
தோல்வியில் கலங்கேல்.
தவத்தினை நிதம் புரி.
நன்று கருது.
நாளெலாம் வினை செய்;
நினைப்பது முடியும்
நீதிநூல் பயில்.
நுனியளவு செல்.
நூலினைப் பகுத்துணர்.
நெற்றி சுருக்கிடேல்.
நேர்படப் பேசு.
நையப் புடை.
நொந்தது சாகும்.
நோற்பது கைவிடேல்.
பணத்தினைப் பெருக்கு.
பாட்டினில் அன்பு செய்.
பிணத்தினைப் போற்றேல்.
பீழைக்கு இடங்கொடேல்.
புதியன விரும்பு.
பூமி இழந்திடேல்.
பெரிதினும் பெரிது கேள்.
பேய்களுக்கு அஞ்சேல்.
கொய்மை இகழ்.
போர்த் தொழில் பழகு.
மந்திரம் வலிமை.
மானம் போற்று.
மிடிமையில் அழிந்திடேல்.
மீளுமாறு உணர்ந்துகொள்.
முனையிலே முகத்து நில்.
மூப்பினுக்கு இடங் கொடேல்.
மெல்லத் தெரிந்து சொல்.
மேழி போற்று.
மொய்ம்புறத் தவஞ் செய்.
மோனம் போற்று.
மௌட்டியந் தனைக் கொல்.
யவனர்போல் முயற்சிகொள்.
யாரையும் மதித்து வாழ்.
யௌவனம் காத்தல் செய்.
ரஸத்திலே தேர்ச்சிகொள்.
ராஜஸம் பயில்.
ரீதி தவறேல்.
ருசிபல வென்றுணர்.
ரூபம் செம்மை செய்.
ரேகையில் கனி கொல்.
ரோதனம் தவிர்.
ரௌத்திரம் பழகு.
லவம் பல வெள்ளமாம்.
லாகவம் பியற்சி செய்.
லீலை இவ் வுலகு.
(உ)லோக நூல் கற்றுணர்.
லௌகிகம் ஆற்று.
வருவதை மகிழ்ந்துண்.
வான நூற் பயிற்சி கொள்.
விதையினைத் தெரிந்திடு.
வீரியம் பெருக்கு
வெடிப்புறப் பேசு.
வேதம் புதுமை செய்.
வையத் தலைமை கொள்.
வௌவுதல் நீக்கு.



No comments:

Post a Comment