Monday 17 September 2018

யாருக்கு எய்ட்ஸ் வரும் ? எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸுக்கும் உள்ள வேறுபாடு என்ன?


மனித நோய்த்தடுப்புக் குறைபாட்டு வைரசால் (HIV) எய்ட்ஸ் ஏற்படுகிறது. எச்.ஐ.வி., உடலின் நோய்த்தடுப்பு மண்டல உயிரணுக்களை கொல்கிறது அல்லது சிதைக்கிறது.
இருவகையான எச்.ஐ.வி. உள்ளன: வகை 1 & வகை 2. 
இந்தியாவில் வகை 1 பரவலாகக் காணப்படுகிறது.
தொற்றுள்ளவருடன் உடலுறவு கொள்வதாலேயே பொதுவாக எய்ட்ஸ் உண்டாகிறது. எச்.ஐ.வி. தொற்றுள்ளவருக்குப் பயன்படுத்திய மருந்தூசியைப் பயன்படுத்துவதாலும், இரத்தம் செலுத்துவதாலும் இது பரவலாம்.
எய்ட்ஸ் என்பது பல நோய்களின் ஒரு கூட்டுத் தொகுப்பாகும். அது ஒரு உயிர்க்கொல்லி நோய், நோய் ஏற்பட்டுவிட்டால் குணப்படுத்த சிகிச்சை ஒன்றும் கிடையாது. ஆனால் ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து சிகிச்சை மூலம் வாழ்நாளை நீட்டிக்க செய்யலாம். எனவே எய்ட்ஸ் நோயினைப் பற்றிய விவரங்களை அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.
எய்ட்ஸ் என்ற சொல்லின் பொருள்
Acquired – A ஒரு மனிதனிடமிருந்து மற்றொருவர் பெற்றுகொள்வது
Immune – I உடலின் எதிர்ப்பு சக்தி
Deficiency – D குறைத்துவிடுதல்
Syndrome – S பல நோய்களின் கூட்டுத் தொகுப்பு
இந்நோய் முதன் முதலில் 1981 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய கண்டங்களில் வெகு வேகமாக பரவி வருகிறது. 1986 ஆம் ஆண்டு நம் நாட்டில் சென்னையில் எய்ட்ஸ் நோய் அறிகுறி உள்ளவர்கள் இருப்பதை அறிந்து நமக்கெல்லாம் அதிர்ச்சியும், அச்சமும் ஏற்பட்டது. நம் நாட்டில் இதுவரை பல லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மிக அதிகமானவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ளனர்.
எய்ட்ஸ் நோய் வருவது காரணமாக இருக்கும் கிருமியின் பெயர் எச்.ஐ.வி. இக்கிருமி மனித உடலில் புகுந்து விட்டால் அந்த உடல் இயல்பாக பெற்றிருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை முழுமையாக அழித்துவிடுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லாத காரணத்தால் காசநோய், புற்றுநோய், மூளைக்காய்ச்சல், கட்டுப்படாத வயிற்றுப்போக்கு போன்ற பல நோய்களுக்கு உட்பட்டு மனிதன் மரணத்திற்கு தள்ளப்படுகிறான்.
எய்ட்சின் முதல் அறிகுறி நச்சுக்காய்ச்சல் அல்லது சுரப்பிகளின் வீக்கமாக இருக்கும். ஆனால், சில சமயங்களில் அறிகுறிகள் தோன்றா. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பின்னரே அறிகுறிகள் தோன்றும். பொதுவாக இரத்தப் பரிசோதனை மூலம் நோய்கண்டறிதல் உறுதிப்படுத்தப்படுகிறது. இதைக் குணப்படுத்த முடியாது. ஆனால் எச்.ஐ.வி. தொற்றை எதிர்க்கவும் கட்டுப்படுத்தவும் பல மருந்துகள் உள்ளன.

யாருக்கு எய்ட்ஸ் வரும் ? எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
பல்வேறு நோய்கள் தாக்கப்பட்ட ஒருவருக்கு, அவருடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கியிருப்பதை மருத்துவ பரிசோதனை உறுதி செய்யும் பரிதாபகரமான நிலைதான் எய்ட்ஸ். எச்.ஐ.வி எனும் வைரசால்தான் எய்ட்ஸ் ஏற்படுகிறது. இது மனிதர்களின் இயற்கையான நோய் எதிர்ப்புத் தன்மையில் நிரந்தரப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
 தன்மையில் நிரந்தரப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஒருவர் எச்.ஐ.வியுடன் பல ஆண்டுகாலம் வாழ முடியும். ஆனால், அவர் உடல் நோய்களை இழக்கும் தன்மையைப் பெறும் போதுதான் எய்ட்ஸ் நோயாளியாகிறார். ஓர் ஆண்டுக்குள் அவருக்கு ஏராளமான நோய்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொற்றிக் கொள்ளும் நிலை அவருக்கு ஏற்படுகிறது.
எய்ட்சால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எச்.ஐ.வி இருக்கும். எச்.ஐ.வி தாக்கப்பட்ட அனைவரும் எய்ட்ஸ் நோயாளி என்று கூறிவிட முடியாது. ஆனால், எச்.ஐ.வி தொற்று உள்ளவர்கள் அனைவரும் எய்ட்ஸ் நோயாளியாக மாறுகிறார்கள்.எச்.ஐ.வி பாதுகாப்பற்ற உடலுறவு, பரிசோதனை செய்யப்படாத ரத்தம் மற்றும் எய்ட்ஸ் நோயாளி தாயிடமிருந்து குழந்தைகளுக்கு ஆகிய மூன்று முக்கிய வழிகளில் எய்ட்ஸ் தற்போது பரவிவருகிறது. 
எச்.ஐ.வி யால் தாக்கப்பட்டவர் 3 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டு வரை அந்நோய்க்கான அறிகுறிகள் பற்றி தெரியாமலேயே வாழ்வார்.அதே சமயம் அவர் எய்ட்ஸ் நோய்க்குரிய அறிகுறிகள் தென்படும்போதுதான் அவருக்குள் மறைந்திருந்த ஆபத்தை உணர முடியும்.
யாருக்கு எய்ட்ஸ் வரும்? எச்.ஐ.வி தொற்றுக்கு ஏதாவது அறிகுறி உள்ளதா?
இந்தியாவிலும் உலகின் பிற இடங்களிலும் எய்ட்ஸ் ராக்கெட் வேகத்தில் பரவிவருகிறது. இந்தியாவில் எல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்நோய் பரவி உள்ளது.
எச்.ஐ.வி தொற்று உள்ளவருடன் பாதுகாப்பற்ற உடல் உறவு கொள்வோருக்கு இந்த எச்.ஐ.வி தொற்றி விடுகிறது. 80 சதவீத எய்ட்ஸுக்கு காரணம் பாதுகாப்பற்ற உடல் உறவுதான். 25 வயதுக்குள் உள்ள இளைஞர்களுக்குத்தான் எய்ட்ஸ் அதிகமாக தென்படுகிறது.
அதற்கு காரணம் அந்த வயதில் அவர்கள் பாலுறவில் அதிக நாட்டமிக்கவராக இருப்பதால் பாதுகாப்பான உடல் உறவை மறந்து விடுகிறார்கள். “நீங்கள் எப்படி பட்டவராக இருந்தாலும், எங்கு வாழ்கிறவராக இருந்தாலும் எச்.ஐ.வி தொற்று பற்றிய விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்’ என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் மற்றும் யுனிசெப் கூட்டாக வெளியிட்டுள்ள கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்.ஐ.வி தொற்றியவுடன் எந்த அறிகுறியும் இருக்காது. எச்.ஐ.வி யால் தாக்கப்பட்டிருப்பதை ரத்தப் பரிசோதனை மூலம்தான் உறுதி செய்ய முடியும். 
எய்ட்ஸ் எப்படி பரவும்... எய்ட்ஸ் எப்படி பரவாது 
எய்ட்ஸ் பரவ காரணமான எச்.ஐ.வி கிருமி மூன்று வழிகளில் பரவுகிறது. என்றாலும் கூட, பாதுகாப்பற்ற உடல் உறவுதான் இன்று இந்த உலகில் ஏராளமானோருக்கு நோய்த் தொற்றை ஏற்படுத்தியிருக்கிறது. பாதுகாப்பற்ற உடல் உறவு பரிசோதனை செய்யப்படாத எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தத்தை ஏற்றுவது. பயன்படுத்திய ஊசிகளை மீண்டும் பயன்படுத்தும் போது. கருவுறும் முன் அல்லது கருவுற்ற நிலையில் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகும் பெண்ணின் சிசுவுக்கு எச்.ஐ.வி தொற்று பரவ வாய்ப்பு.
சாதாரணமாக சமூக பழக்கவழக்கங்களின் மூலம் பரவாது.
கைகுலுக்குதல், தொடுதல், கட்டியணைத்தல் மற்றும் முத்தம் மூலம் பரவாது.
பொதுக்கழிப்பறைகள் மற்றும் படுக்கை மற்றும் அவர்கள் பயன்படுத்திய உணவுப் பாத்திரங்கள் மூலம் பரவாது.
நீச்சல் குளம் மூலம் மற்றும் சலுõன் கடைகள் மூலம் பரவாது.
ஒவ்வொரு முறையும் துõய்மையாக்கப்பட்ட உபகரணங்கள் மூலம் ரத்த தானம்.
இருமல், தும்மல் மற்றும் கொசுக்கடி மூலம் பரவாது.

உலகளவில் மூன்றுகோடியே 7 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 15 வயதுக்குட்பட்ட  குழந்தைகள் 21 லட்சம் பேர். இந்தியாவில் 21 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர்.  எய்ட்ஸ் நோயளிகள் அதிகம் உள்ள நாடுகளில் தென் ஆப்ரிக்கா முதலிடம் அதில் இந்தியா மூன்றாவதாக உள்ளது. அதோடு 21 லட்சம் பேர் இந்தியாவில் எய்ட்ஸ் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 62000 இந்த ஆண்டு மரணத்தை தழுவியுள்ளனர்.
2015  ஆம் ஆண்டு எய்ட்ஸ் நோயாளிகளின் கணக்கெடுப்பின்படி  மட்டும் 1.96 சதவீதம் நோயாளிகள் அதிகரித்துள்ளனர். இந்திய அளவில்  மணிபூர் தான் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் உள்ள மாநிலம். இரண்டாவதாக ஆந்திரா. மூன்றாவதாக மிசோரம். 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆண்டு வரை எடுத்த கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகரிக்கவில்லை.
இந்த ஆண்டில் 2.2 சதவீதம் பாலியல் தொழிலாளிகளுக்கு எய்ட்ஸ் பாதிப்புள்ளது ஆண்களை பொறுத்தமட்டில்  4.3 சதவீதத்தினர் பாதித்துள்ளன. இதில் திருநங்கைகள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் அதிகபட்சமாக  7.2 சதவீதத்தினர் பாதித்துள்ளனர். 

எயிட்ஸ் அறிகுறிகள்
அறிகுறிகள் HIV பாதிப்புக்குள்ளான பலரிடம் ஆரம்பநிலையில் அதற்கான அறிகுறிகள் தெரிவதில்லை. இருந்தபோதிலும் சிலரிடம் இது “ஃப்ளு சுரமாக” (காய்ச்சல்) வெளிப்படுகிறது. அதுவும் இந்த வைரஸ் மூன்று முதல் ஆறு வாரங்களுக்குப் பிறகே தெரிகிறது.
இந்தத் தீவிர HIV பாதிப்பினால் ஏற்படும் உடல் நலக்குறைவு, காய்ச்சல், தலைவலி, உடல்சோர்வு, குமட்டல், வியர்வை (குறிப்பாக இரவு நேரங்களில் ) நடுக்கம், வயிற்றுப்போக்கு, நெறிகட்டுதல் (அக்குள், கழுத்து) போன்றவற்றினைத் தோற்றுவிக்கின்றது. இந்த அறிகுறிகள் கூட HIV தொற்றிய ஒரு சில நாட்களில் தெரிவதில்லை. மேலும் இது, ஆரம்பநிலையில் வேறு ஏதோ ஒரு வைரஸ் என்று தவறாகவே இனங் காணப்படுகிறது. எனவே ஆரம்ப நிலையில் HIV தொற்றைக் கண்டுபிடிப்பது கடினமாகும்.
தொற்று ஏற்பட்ட முதல் மூன்று மாதங்களில் வைரசின் எண்ணிக்கை கணக்கற்றுப் பெருகி, உடலின் பல பாகங்களிலும் பரவுகின்றன. குறிப்பாக மூட்டுக்களில் உள்ள இழையங்கள் இதனால் பாதிக்கப்படுகின்றன. இந்நிலையில் அத்தொற்று, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகப் பரவிவிடுகின்றது.
உடலில் உள்ள நோய் எதிர்ப்பு கலங்களான வெண் குருதித்துணிக்கை அனைத்தும் ஒன்று திரண்டு போராடத் தொடங்கும் போதுதான் HIV யின் வேகம் சற்று குறைகிறது. HIV தொற்றின் தீவிரமான அறிகுறிகள் தெரிய பல வருடங்கள் ஆகின்றன. பெரியவர்களுக்கு HIV தொற்றிய பிறகு அது வெளித் தெரிவதற்கு 10 வருடங்களுக்கும் மேல் ஆகிறது. HIV தொற்றோடு பிறக்கும் குழந்தைகளுக்கு அது தெரிய இரண்டு வருடங்கள் ஆகின்றன. இவ்வாறு அறிகுறிகள் தெரியாத நிலை மனிதருக்கு மனிதர் மாறுபடும். “எய்ட்ஸ்” வெளியில் தெரிய ஆரம்பித்த உடன் பாதிக்கப்பட்டவர் அடிக்கடி நோய் வாய்ப்படுவர். உடல் எடை குறைவு, தொடர் காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஆகியன எய்ட்ஸின் முக்கியமான அறிகுறிகளாகும். மேலும் எய்ட்ஸ் நோயாளிகள், காசநோய், பூஞ்சான் நோய் தொற்று, சில வகைப்புற்று நோய்கள், நிமோனியா போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
எய்ட்சுக்கு 3 முக்கிய கட்டங்கள் உண்டு.
குறுகியகால அறிகுறிகள், மருத்துவசெயலற்ற நிலை மற்றும் கடும் அறிகுறிகள்.
குறுகியகால அறிகுறிகள் (Acute symptoms):
எச்.ஐ.வி. வைரஸ் உடலுக்குள் புகுந்து ஓரிரு மதங்களில் பெரும்பாலானோருக்கு  நச்சுக்காய்ச்சல் போன்ற நோய் உண்டாகும். முதனிலை அல்லது குறும் எச்.ஐ.வி.தொற்று என அழைக்கப்படும் நோய் சில வாரங்கள் நீடிக்கும். ஏற்படக் கூடிய அறிகுறிகளில் அடங்குவன:
•தலைவலி
•காய்ச்சல்
•தொண்டை வலி
•தசை வலி
•சொறி
•வாய் அல்லது பிறப்புறுப்புப் புண்கள்
•வீங்கிய நிணநீர்ச் சுரப்பிகள், குறிப்பாகக் கழுத்தில்
•மூட்டு வலி
•வயிற்றுப்போக்கு
•இரவு வியர்வை

எய்ட்சு தெரிந்து கொள்ள வழி
எச்.ஐ.வி தொற்றடைந்தோர் நீண்டகாலம் செல்லும் வரை எவ்வித நோயறிகுறிகளையும் வெளிக்காட்டுவதில்லை.எனவே புறத்தே தென்படும் பண்புகளை கொண்டு அவர்களை இனம்காண முடியாது.எச்.ஐ.விதொற்றடைந்துள்ளோரை இனம்காணப்படுவதற்கு மிகச் சிறந்த முறை அவர்களது இரத்தத்தில் அடங்கியுள்ள எச்.ஐ.வி பிறபொருளெதிரிகளை இனம்காண்பதாகும். இதற்காக இரண்டு வகை இரத்தச் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
முதலாவதாக நடத்தப்படும் இரத்தச் சோதனை, எலைசா சோதனையாகும். இது இனம்காணல் பரிசோதனை எனப்படுகிறது. எலைசா சோதனையானது எச்.ஐ.விதொற்று அல்லாத பிற காரணங்கள் தொடர்பாகவும் நேர் வகை பெறுபேற்றை தர இடமுண்டு. வெஸ்டர்ன் புலொட் சோதனை இது உறுதிப்படுத்தும் சோதனையாகும். எலைசா சோதனையில் நேர் வகையை காட்டும் ஒவ்வொரு இரத்த மாதிரியும் வெஸ்டர்ன் புலொட் சோதனைக்கு உட்படுத்தப்படும். இது ஒரு சிறப்பான சோதனையாகும். இரத்த வகையில் எச்.ஐ.வி பிறபொருளெதிரி காணப்பட்டால் மாத்திரமே இச் சோதனையின் போது பெறுபேறு காட்டப்படும்.
எலைசா சோதனை, வெஸ்டர்ன் புலொட் சோதனை ஆகிய இரண்டு சோதனையிலும் நேர்(+ )வகை காணப்பட்டால் எச்.ஐ.வி பிறபொருளெதிரி உண்டு என்பது அல்லது எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளது என்பது உறுதியாகும்.
தமது பாலியல் நடத்தைகள் தொடர்பாக ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டால் அல்லது ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளதாக வைத்தியர் சந்தேகப்படுவதாக இருந்தால், மேலும் வேலை வாய்ப்புப் பெறுவதற்கோ வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெறச் செல்வதற்கோ முன் தேவையாகக் கருதப்படும் சந்தர்ப்பத்தில் இரத்தப் பரிசோதனை மேற்கொள்ளுதல் அவசியமானதாகும். அதேபோல இரத்ததானம் செய்யப்படும்போது இரத்த மாதிரி ஒவ்வொன்றிலும் எச்.ஐ.வி தொற்றுக் காணப்படுகின்றதா என்பதை அறிதல் அவசியம். இத்தகைய சந்தர்ப்பங்களில் இரத்த சோதனைகள் செய்து கொள்ளல் வேண்டும். மேலும், சுய விருப்பின் பேரிலும் ஒருவர் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளலாம். இத்தகைய இரத்த சோதனைகள் பாலியல் நோய்கள் தொடர்பான வைத்திய நிலையங்களிலும், அரசாங்க, தனியார் வைத்தியசாலைகளிலும், இரத்தப் பரிசோதனையை மேற்கொள்ளும் ஆய்வுகூடங்களிலும், விசேட இரத்த பரிசோதனைக் கூடங்களிலும் இச்சோதனைகளை செய்து கொள்ளலாம். எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக அறுவுத்தலானது மிக உறுத்துணர்வுடைய ஒன்றாக அமையக் கூடுமாதலால் சோதனைப் பெறுபேற்றை அறிந்து கொள்ளத்தக்க வகையில் அவரைத் தயார்படுத்த வேண்டியது அவசியமாகும். இரத்தச்சோதனைக்கு உள்ளானவருக்கே சோதனை தெரிவுகள் வழங்கப்படும். அதன் அந்தரங்கத் தன்மையைப் பேணுவது சுகாதார ஊழியர் ஒருவரினதும் பொறுப்பாகும். நோய் பற்றித் தீர்மானிப்பதற்காக எச்.ஐ.வி சோதனை நடத்துதல். இச் சோதனை தெரிவுகள் அதனைக் கோரிய வைத்தியருக்கு மாத்திரமே வழங்கப்படும். ஒவ்வொரு சுகாதார ஊழியரும் சோதனையின் அந்தரங்கத் தன்மையைப் பேணக்கடமைப்பட்டுள்ளனர்..

நோய் எதிர்ப்பொருட்களை உடலில் செலுத்துதல்
தாய்லாந்தில், நிலையான மருத்துவ சிகிச்சை மூலம் தங்கள் உடலின் எச்.ஐ.வி தொற்றைக் கட்டுக்குள் வைத்திருக்கும் நபர்களைக்கொண்டு, அமெரிக்க ராணுவத்தின் எச்.ஐ.வி ஆய்வுத் திட்டத்தின் (US Military HIV Research Program (MHRP)) தலைமையில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வில் சிலருக்கு சிகிச்சை எதுவும் வழங்கப்படவில்லை. சிலரின் ரத்த ஓட்டத்தில் VRC01 என்று பெயரிடப்பட்ட நோய் எதிர்ப்பொருள் செலுத்தப்பட்டது.
சிகிச்சை பெறாதவர்கள் உடலில் எச்.ஐ.வி வைரஸ் தவிர்க்க முடியாமல் திரும்பவும் தோன்றியது. சராசரியாக 14 நாட்களுக்குப் பின் அவர்களுக்கு மீண்டும் சிகிச்சை தொடரப்பட்டது.
ஆனால் அந்த நோய் எதிர்ப்பொருளை உடலில் செலுத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் சிகிச்சையைத் தொடங்கும் தேவை 26 நாட்களுக்குப் பிறகே ஏற்பட்டது.
அந்த ஆய்வில் பங்கேற்ற MHRP ஆய்வாளரான மருத்துவர் ஜிண்டானட் அனன்வோனாரிக், அதில் ஒரு விதிவிலக்கான சம்பவமும் இருந்தாதாகக் கூறினார்.
"அந்த நோய் எதிர்ப்பொருள் செலுத்தப்பட்ட நோயாளிகளில் ஒருவர் 10 மாதம் எச்.ஐ.வி-க்கு சிகிச்சை எடுக்காமல் இருந்தார். அவரின் உடலில் எச்.ஐ.வி வைரஸ் கிருமிகளின் எண்ணிக்கையும் கட்டுப்படுத்தப்பட்டு மிகவும் குறைந்த அளவே இருந்தது," என்று அவர் பிபிசி நியூஸ் இணையதளத்திடம் கூறினார்.
அந்த நபர் மூன்று வாரத்திற்கு ஒரு முறை என ஆறு மாத காலம் அந்த நோய் எதிர்ப்பொருளை அவரின் உடலில் செலுத்தப்பெற்றார்.
தப்பாக தொட்ட பக்கத்து வீட்டுப் பையன்'
அவரது செயலை சகிக்க முடியாமல் தயக்கத்தோடு அம்மாவிடம் சொன்னேன்'
அது `ரேப்' என்று சொல்ல முடியாவிட்டாலும், குறைத்து மதிப்பிட முடியாத வன்கொடுமை'
இந்தத் துறையின் ஆய்வுகள் இன்னும் தொடக்க நிலையிலேயே இருக்கின்றன. ஆனால் அதன் முடிவுகள் நோய் எதிர்ப்பொருட்களை அடிப்படையாகக்கொண்ட சிகிச்சைகள் மூலம் எச்.ஐ.வி தொற்றைக் குணப்படுத்தும் சாத்தியத்தை வெளிப்படுத்துகின்றன.
"நோய் எதிர்ப்பொருட்களைக்கொண்டு சிகிச்சை அளிப்பதை நான் உறுதியாக நம்புகிறேன். ஏனெனில், வருங்காலத்தில், அவற்றை ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே செலுத்தக்கூடிய சூழ்நிலை வரலாம்," என்று அவர் கூறுகிறார்.
அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி
விலங்குகளைக்கொண்டு செய்யப்பட்ட ஆய்வுகள் நோய் எதிர்ப்பொருட்கள் மூலம் வழங்கப்படும் சிகிச்சை, வழக்கமாக வழங்கப்படும் சிகிச்சைகளை விட, தாக்கம் நிறைந்ததாக இருப்பதையும், அக்கிருமிகளைத் தாக்குவதற்கு உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பைப் பழக்கப்படுத்துவதையும் வெளிப்படுத்தின.
குரங்குகளின் உடலில் அந்த நோய் எதிர்ப்பொருள் செலுத்தப்பட்டபோது, அவற்றின் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு அமைப்பால் அறிந்துகொள்ளக்கூடிய ஒரு "நோய் எதிர்ப்புக் கட்டமைப்பை" உருவாக்கின.
எய்ட்ஸ் - உண்மையை உலகறியச் செய்த தமிழ் மருத்துவ மாணவி
ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட சில குழந்தைகளுக்கு எய்ட்ஸ் உருவாகவில்லை: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
"அந்த நோய் எதிர்ப்பொருட்கள் செலுத்தப்பட்டது, 'டி' அணுக்கள் (T-cells) உள்ளிட்ட நோய் எதிர்ப்பு அமைப்பில் உள்ளனவற்றை எச்.ஐ.வி தொற்றுக்கு இன்னும் சிறப்பாக எதிர்வினையாற்றத் தூண்டியிருக்கலாம். குரங்குகளைக்கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், அந்தக் குரங்குகளின் உடல்கள் அவற்றை மீண்டும் சுரந்தன," என்று பிபிசியிடம் மருத்துவர் அனன்வோனாரிக் கூறினார்.
இந்த ஆய்வின் அடுத்தகட்டமாக, பரிசோதனையின்போது சேகரிக்கப்பட்ட அனைத்து ரத்த மாதிரிகளையும் சோதித்து, அந்த சிகிச்சை நோய் எதிர்ப்பு அமைப்பையும், அந்த வைரஸ் கிருமிகளையும் எவ்வாறு பாதித்தன என்பதை அறிவதாகும்.
எச்.ஐ.வி வைரஸ் தொடர்ந்து உயிரியல் மாற்றங்களுக்கு உள்ளாவதால், வருங்காலத்தில் வழங்கப்படும் சிகிச்சைகள் விரிவாக நோய்க்களைத் தடுக்கும் எதிர்பொருட்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
ஆனால் நோய் எதிர்ப்பொருட்கள் சாதாரண வேதிப்பொருட்கள் அல்ல. அவை நோய் எதிர்ப்பு உயிரியலில் சிக்கலான கூறுகளைக் கொண்டிருப்பதால் அவற்றை உற்பத்தி செய்வது மிகவும் செலவு பிடிக்கும்.
"உயிரியல் கூறுகளைக் கொண்டைவையாகவும், சிறிய மூலக்கூறுகளை உருவாக்குவதைவிட சிக்கல் நிறைந்ததாகவும் இருப்பதால், நோய் எதிர்ப்பொருட்களைத் தயாரிக்க இயல்பாகவே அதிகம் செலவாகும்," என்று அமெரிக்காவின் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அலர்ஜி அண்ட் இன்ஃபெக்ட்டிஷியஸ் டிசீசஸின் ( US National Institute of Allergy and Infectious Diseases) இயக்குனர் மருத்துவர் ஆண்டனி ஃபாசி கூறுகிறார்.
"ஆனால் சிறப்பாக வேலை செய்யக்கூடிய நோய் எதிர்ப்பொருள் ஒன்று உருவாக்கப்பட்டால், அவற்றை தயாரித்து, எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் விலையைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்பதையும் நான் உத்திரவாதமாகக் கூறுவேன்," என்கிறார் அவர்.
மருத்துவச் செயலற்றநிலை
மருத்துவச் செயலற்ற நிலையில் தொடர்ந்து நிணநீர்ச் சுரப்பிகள் வீங்கி இருக்கும். வேறு குறிப்பான அறிகுறிகள் எதுவும் இருக்காது. எனினும், உடலுக்குள் தொற்று இருந்துகொண்டே இருக்கும்.
கடும் அறிகுறிகள்
•தலைவலி
•மங்கிய சிதைந்த பார்வை
•இருமல் மற்றும் மூச்சடைப்பு
•நாக்கிலோ வாயிலோ நிரந்தர வெண்புள்ளிகள் அல்லது அசாதாரண புண்கள்
•நனைக்கும் இரவு வியர்வை
•நடுக்கும் குளிர் அல்லது பல வாரங்களுக்கு 100 F (38 C) –க்கு மேல் காய்ச்சல்
•நீடித்த வயிற்றுப்போக்கு
•தொடர்ந்து இனம்புரியாத களைப்பு
•எடை இழப்பு
•தோல் சொறிகள்

நோய்கண்டறிதல்
உமிழ்நீர், ஊனீர் அல்லது சிறுநீரில் மனித நோய்த்தடுப்புக் குறைபாட்டு வைரஸ் உள்ளதா என்று அறிய எச்.ஐ.வி. சோதனை நடத்தப்படுகிறது. அறக்கொள்கைகளுக்குத் தகுந்த மதிப்பளிக்கும் மனித உரிமை அணுகுமுறையை அடித்தளமாகக் கொண்ட நிலைமைகளின் கீழேயே எச்.ஐ.வி சோதனை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா.எய்ட்ஸ்/உலக சுகாதார நிறுவன எச்.ஐ.வி.சோதனைக் கொள்கை அறிக்கை தெரிவிக்கிறது. இக் கொள்கைகளின் படி தனிநபருக்கு எச்.ஐ.வி. சோதனை கீழ்வருமாறு நடத்தப்பட வேண்டும்:
ஆர்.என்.ஏ. சோதனைகள் வைரசை நேரடியாகவே கண்டறிகின்றன (எச்.ஐ.வி. எதிர் பொருட்களுக்குப் பதிலாக). எனவே, எதிர்பொருட்கள் உருவாவதற்கு முன்னரே, தொற்றேறி 10 நாட்களுக்குப் பின்னர் அது இரத்த ஓட்டத்தில் தோன்றிய உடனேயே எச்.ஐ.வி.யைக் கண்டறியக் கூடும். இச்சோதனைக்கு எதிர்பொருள் சோதனையை விட கட்டணம் கூடுதல். ஆகவே பொதுவாக முதற்கட்ட சோதனையில் இதைப் பயன்படுத்துவதில்லை. எதிர்பொருள் சோதனையில் நேர்மறை முடிவு கிடைத்தால் பின்கட்ட சோதனையாக அல்லது மருத்துவ நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக உங்கள் மருத்துவர் இச்சோதனையை செய்யக் கூறலாம்.
இரகசியக்காப்பு: சோதனை செய்து முடிவறிவித்தல் வரை முழு நடவடிக்கைகளும் இரகசியமாக வைக்கப்படுகின்றன. தனிநபரும், இணையரும், குடும்பமும் தங்கள் வீட்டுச் சூழலில் இருந்த வண்ணமே அந்தரங்கமாகத் தங்கள் எச்.ஐ.வி. நிலையை அறிந்து கொள்ளுகின்றனர். வீட்டு எச்.ஐ.வி. சோதனை மற்றும் ஆலோசனையில் துரித எச்.ஐ.வி. சோதனைகள் பெரும்பாலும் நடத்தப்படுவதால் 15-30 நிமிடங்களிலேயே முடிவும் கிடைத்து விடுகிறது.
•ஆலோசனையும் வழங்கப்படுகிறது (நேர்மறை முடிவு கிடைத்தவர்களுக்கு)
•சோதிக்கப்படுபவருக்கு முன்கூட்டியே அனைத்தும் கூறப்பட்டு இசைவு பெற்ற பின்னரே சோதனை நடத்தப்படும். எச்.ஐ.வி./எய்ட்சைக் கண்டறிவதில் பலவகையான சோதனைகள் நோயின் கட்டத்தை நிர்ணயிக்க மருத்துவருக்கு உதவியாய் இருக்கும். இச்சோதனைகளில் அடங்குவன:
சாளரக் காலம்
எச்.ஐ.வி. தொற்றுக்கும், எதிர்-எச்.ஐ.வி. எதிர்பொருள் தோன்றுவதற்கும் இடையில் இருக்கும் அளவிடக்கூடிய  இடைவெளிக் காலம் “சாளரக் காலம்” எனப்படும். எச்.ஐ.வி. தொற்றுக்கும், எச்.ஐ.வி. ஊனீர் மாற்றத்திற்கான அளவிடக்கூடிய எதிர்பொருள் உற்பத்தியாவதற்கும் இடையில் இருக்கும் இடைவெளிக் காலமான சாளரக் காலத்தில் எதிர்பொருள் சோதனைகள் எதிர்மறையான முடிவுகளை (எச்.ஐ.வி. இருந்தாலும் எதிர்பொருட்கள் கண்டறியப்படுவதில்லை) அளிக்கலாம்.
CD4  கணக்கிடல்
CD4 உயிரணுக்கள் ஒரு வகையான வெள்ளணுக்கள் ஆகும். எச்.ஐ.வி. இவற்றைக் குறி வைத்து அழிக்கின்றன. ஆரோக்கியமான ஒருவருக்கு 500-லிருந்து 1000 –க்கு மேல் CD4  எண்ணிக்கை வேறுபடும். ஒருவருக்கு அறிகுறிகள் இல்லை என்றாலும் எச்.ஐ.வி. தொற்று தொடர்ந்து எய்ட்சாக மாறும். அவரது CD4 எண்ணிக்கை 200-க்கும் குறையும்.
துரித அல்லது பராமரிப்பிட சோதனை: துரித சோதனை என்பது முதல்கட்டப் பரிசோதனைக்கான ஒரு நோய்த்தடுப்பு மதிப்பீடாகும். 20 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் துரித முடிவுகளை அது தருகிறது. துரித சோதனை மூலம் இரத்தம் அல்லது வாய்க்கசிவுகளில் எச்.ஐ.வி.யின் எதிர்பொருள் உள்ளதா என சோதிக்கப்படுகிறது. சாளரக் காலத்தில் (தொற்று ஏற்பட்டதற்கும் சோதனை மூலம் எதிர்பொருளைக் கண்டு பிடிப்பதற்கு முன்னும்) ஒரு நோய்த்தடுப்பு மதிப்பீடு செய்யப்பட்டால் (ஆய்வக அல்லது துரித சோதனை) சோதனையில் எதிர்பொருட்கள் காணப்படா; மாறாக ஒரு பொய்யான எதிர்மறை முடிவைக் கொடுக்கக் கூடும். நேர்மறையான எல்லா நோய்த்தடுப்பு மதிப்பீட்டிற்கும் முடிவை உறுதிசெய்ய ஒரு தொடர் சோதனை தேவைப்படுகிறது.
எலிசா (நொதியுடன் இணைந்த எதிர்பொருள் உறிஞ்சல் மதிப்பீடு) (ELISA): எச்.ஐ.வி. தொற்றைக் கண்டறிய பயன்படுத்தப்படும் ஒரு தொடர் இரத்தப் பரிசோதனையே எலிசா. ஊசி மூலம் இரத்தம் எடுக்கப்பட்டு எலிசா பரிசோதனை செய்யப்படுகிறது. எலிசா சோதனை முடிவு நேர்மறையாக இருப்பதால் மட்டுமே ஒருவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. லைம் நோய், மேகநோய், தோலழிதல் போன்ற வேறு சில நோய்களும் போலி நேர்மறை முடிவுகளுக்குக் கொண்டு செல்லலாம்.
வெஸ்டர்ன் பிளாட் (Western Blot) : ஒரு நேர்மறையான எலிசா சோதனையைத் தொடர்ந்து செய்யப்படும் வெஸ்டர்ன் பிளாட் சோதனை மூலம் எச்.ஐ.வி. தொற்று உறுதிப்படுத்தப்படுகிறது.
•ஆரோக்கியத்தைப் பற்றி நன்கு அறிந்துகொள்ள தேசிய சுகாதார இணையதளம் குறிப்பான தகவல்களைத் தருகிறது.மருத்துவத்திற்கும் நோய்கண்டறிதலுக்கும் நீங்கள் உங்கள் மருத்துவரையே அணுக வேண்டும்.

காரணங்கள்
ஒருவர் பல வழிகளில் எச்.ஐ.வி./எய்ட்சால் பாதிக்கப்படலாம்:
•இரத்த மாற்றம்: சிலருக்கு மாற்று இரத்தம் செலுத்தும்போது வைரசும் கடத்தப்படலாம்
•தொற்றுள்ள மருந்தூசிப் பகிர்வு: தொற்றுள்ள இரத்தம் கொண்ட சிரிஞ்ச் அல்லது ஊசி மூலம் எச்.ஐ.வி. கடத்தப்படலாம்.
•உடலுறவு: தொற்றுள்ள ஒருவருடன் உடல் உறவு கொள்வதன் மூலமாகவே பெரும்பாலும் எச்.ஐ.வி. கடத்தப்படுகிறது.
•தாயிடம் இருந்து சேய்க்கு: எச்.ஐ.வி. தொற்றுள்ள ஒரு கர்ப்பிணி கருவுடன் உள்ள இரத்தச் சுற்றோட்டத்தின் மூலமும், தொற்றுள்ள தாய் பாலூட்டும் போது தன் குழந்தைக்கும் வைரசைப் பரப்பலாம்.
 தடுப்புமுறை
•எய்ட்சைத் தடுப்பது ABC போன்று எளிதானதே:
•A= Abstain (தவிர்த்தல்)
B= Be faithful (உண்மை)
C= Condomise (தடுப்புறை)
•எச்.ஐ.வி./எய்ட்ஸ் பரவுவுவதைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளே தடுப்புமுறை எனப்படும். எச்.ஐ.வி. தடுப்பு நடவடிக்கைகளைத் தனிநபர்களே தங்கள் உடல்நலத்தைப் பாதுகாக்கும் பொருட்டு எடுக்க வேண்டும்:
1. மக்களிடத்தில் விழிப்புணர்வைப் பரப்புதல்
2. காப்புறை பயன்படுத்தி உடலுறவு கொள்வது எச்.ஐ.வி/எய்ட்ஸ் அபாயத்தைக் குறைக்கிறது.
3.மக்களிடத்தில், குறிப்பாக ஆபத்து அதிகம் உள்ள பகுதியினரிடம், விழிப்புணர்வை ஏற்படுத்துதல். பாலியல் தொழிலாளிகள், அவர்தம் இணையர், நரம்பூசியின் மூலம் போதை எடுப்போர், கனரக ஊர்தி ஓட்டுநர், இடம்பெயரும் தொழிலாளிகள், அகதிகள் மற்றும் கைதிகளே அபாயம் நிறைந்த பகுதியினர்.
4. பாதுகாப்பான ஊசிமருந்து: பயனுக்குப்பின் எறிந்துவிடும் ஊசிகள் எச்.ஐ.வி. தொற்றைத் தடுக்க உதவுகின்றன.
5. ஆண்குறி நுனித்தோல் அகற்றல்: ஆண்குறியின் நுனித்தோலை அறுவை மூலம் அகற்றுதல்.
6.அதிகாரபூர்வமான, அங்கீகரிக்கப்பட்ட இரத்த வங்கிகளில் இருந்து பெறப்பட்ட பாதுகாப்பான இரத்தத்தையே பயன்படுத்த வேண்டும்.
7. எச்.ஐ.வி. நேர்மறை கர்ப்பிணிப் பெண்களிடம் பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளுக்குப் பரவுவதைத் தடுப்பது எவ்வாறு என்று ஆலோசனை அளிக்க வேண்டும்.
சிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் - III – (NATIONAL AIDS CONTROL PROGRAMME-III)
தே.எ.க.தி- I & II-ன் அனுபவங்கள் மற்றும் பாடங்களின் அடிப்படையில் அமைந்ததே தே.எ.க.தி- III. இது அவற்றின் வலிமையின் மூலமே கட்டப்படுகிறது. அதன்படியே இதன் முன்னுரிமைகளும் உந்துபகுதியும் கீழ்வருபவை உள்ளடங்குமாறு வரையப்பட்டுள்ளன
•இந்த நாட்டின் 99 சதவிகிதத்துக்கு மேலான மக்களுக்கு தொற்றில்லாத காரணத்தால் தே.எ.க.தி.- III தடுப்பு முயற்சிகளுக்கே உச்சகட்ட முன்னுரிமையை அளிக்கிறது. அதே நேரத்தில், தடுப்புமுயற்சிகளை, பராமரிப்பு, ஆதரவு மற்றும் மருத்துவத்துடன் ஒருங்கிணைக்க முயற்சி செய்கிறது.
•எச்.அய்.வி. அபாயம் மிக அதிகமாய் உள்ள மக்கள் பிரிவினருக்கு, சிகிச்சைத் திட்டங்களில் அதிகமான முன்னுரிமை அளிக்கப்படும். இவர்களில், பாலியல் தொழிலாளர், ஆணோடு உடல்உறவுகொள்வோர் மற்றும் ஊசி மூலம் போதையேற்றுவோர் ஆகியோர் அடங்குவர்.  நீண்ட தூர கன ஊர்தி ஓட்டுநர்கள், இடம்பெயரும் தொழிலாளர்கள் (அகதிகள் உட்பட) மற்றும் தெருக்குழந்தைகள் ஆகியோர் சிக்சிச்சைத் திட்டங்களில் இரண்டாம் முன்னுரிமை பெறுவர்.
•பால்வினை நோய் மருத்துவம், தன்னார்வ ஆலோசனையும் சோதனையும் மற்றும் தடுப்புறைகள் போன்ற தடுப்புச் சேவைகளை அடையும் அதிக அளவு தேவையில் இருக்கும் பொதுமக்களே அடுத்த கட்ட முன்னுரிமையில் இருப்பவர்கள்.
•தே.எ.க.தி – III, மருத்துவம் தேவைப்படும் அனைவருக்கும், நோய்க்கட்டுப்பாடு மற்றும் எதிர்பாரா தொற்று மேலாண்மைக்கு உறுதி அளிக்கிறது. எதிர் நகல்வைரல் மருந்துகள் (ART) தேவையில் இருப்போருக்கு முதல் நிலை எதிர் நகல்வைரல் மருந்துகளும் (ARV) உறுதி செய்யப்படுகின்றன.
•பெற்றோரிடம் இருந்து குழந்தைக்கு நோய்பரவல் தடுப்புச் (PPTCT) சேவையின் உலகளாவிய ஏற்பாட்டின் மூலம் குழந்தைகளுக்கான நோய்தடுப்புத் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு,  குழந்தைகளுக்கான எதிர் நகல்வைரல் மருத்துவம் பெறும் வழிமுறைகள் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளன.
•தே.எ.க.தி – III, எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களின், குறிப்பாகக் குழந்தைகளின், தேவைகளை நிவிர்த்திசெய்ய அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நலத்தில் ஈடுபட்டுள்ள துறைகள் மற்றும் முகவாண்மையங்களின் மூலமாக இது நிறைவேற்றப்படும். எச்.ஐ.வியின் தாக்கத்தைக் குறைப்பதற்காக, ஊட்டச்சத்து, வருவாய் ஈட்டும் வழிவகைகள், மற்றும் பல நலச்சேவைகளை வழங்கும் நலச்சேவை முகவாண்மையங்களில் இருந்தும் உதவி பெறப்படுகின்றது.
•உளசமூகவியல் ஆதரவு, வெளிக்களச் சேவைகள், பரிந்துரைப்பு, மற்றும் நோய்த்தணிப்பு பராமரிப்பு ஆகியவற்றை வழங்கும் சமூகப் பராமரிப்பு மையங்களில் முதலீடு செய்ய தே.எ.க.தி – III  திட்டமிட்டு வருகிறது.
•தீர்மானிக்கும் சமூகப்பொருளாதார காரணிகள் ஒருவரை பலவீனப்படுத்தி எச்.ஐ.வி. தொற்று அபாயத்தை ஏற்படுத்தலாம். பெண்கள், இளைஞர் குழுக்கள், தொழிற்சங்கங்கள் போன்ற பாதிக்கப்படக் கூடியவர்களைப்  பாதுகாக்கும் அமைப்புகளோடு இணைந்து தே.எ.க.தி – III பணியாற்றி அவர்களது செயல்பாடுகளில் எச்.ஐ.வி.. தடுப்பு முறைகளையும் ஒன்றிணைக்கும்.
பலதரப்பட்ட பங்குதாரர்களை ஈடுபடுத்தி ஒரு பல்துறை எதிர்வினையை உருவாக்க,  முன் நடத்திச் செல்வதும் இணைந்து பணியாற்றுவதுமே முக்கிய அணுகுமுறைகள் ஆகும். தடுப்பு, பரமரிப்பு, ஆதரவு, மருத்துவம், சேவை வழங்குதல் ஆகியவற்றில் தனியார், சமூக அமைப்புகள், எச்.ஐ.வி./எய்ட்சோடு வாழும் மக்களின் ஒருங்கிணைப்புகள் மற்றும் அரசு துறைகள் யாவும் ஆற்ற வேண்டிய முக்கிய பங்கு உள்ளது. இத்திட்டத்தின் நோக்கங்களை வென்றெடுக்க  முன்னேற்றும் பங்குதாரர்களின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஆதாரங்கள் முழுமையும் ஒன்று குவிக்கப்பட வேண்டும்.
இலக்குகளும் நோக்கங்களும்
நோக்கம் 1 : புதிய தொற்றை 50 சதவிகிதமாகக் குறைத்தல் ( தே.எ.க.தி. III –ன் 2007 அடிப்படை)
நோக்கம் 2: எச்.ஐ.வி./எய்ட்சோடு வாழும் அனைவருக்கும் விரிவான பரமரிப்பு, ஆதரவு மற்றும் மருத்துவம்.
உட்கூறுகள்
உட்கூறு 1: அதிக அபாயத்திலுள்ள குழுக்களையும் பலவீனமான மக்களையும் மையப்படுத்தி தடுப்புச் சேவைகளைத் தீவிரப்படுத்துதலும் ஒருங்கு குவித்தலும்
திட்டத்தின் தடுப்புச் சேவைகளைப் பெற்று இதுவரை பயன்படுத்தாத எளிதில் சென்றடைய முடியாத மக்கள் குழுக்களை அடைவதையும் அதிக அபாயத்தில் இருக்கும் குழுக்களை முற்றிலும் பாதுகாப்புக்குள் கொண்டு வருவதையும் நோக்கமாகக் கொண்டு இக் கூறு இலக்கடிப்படை மருத்துவத் தலையீட்டை ஆதரிக்கும்.
ஒரு சில மக்கள் குழுக்களிடையில் ஏறுமாறாக அதிக அளவில் தொற்று பரவல் இருப்பதை நாட்டின் நோய் பாதிப்புப் போக்கு காட்டுகிறது. ஆண்டு காவல் கண்காணிப்புத் தரவு (2003-2005) ஆய்வு ஒன்று, பெண் பாலியல் தொழிலாளர்கள், ஆண்களோடு உடலுறவு கொள்ளும் ஆண்கள், ஊசி மூலம் போதை ஏற்றுவோர் ஆகியோரிடம் ஏறுமாறாக அதிக அளவில் எச்.ஐ.வி. தொற்று இருப்பதைக் காட்டுகிறது. பொதுமக்களிடம் நோய்பரவல் 0.88 விழுக்காடும், பெண் பாலியல் தொழிலாளர்களிடம் 8.44 விழுக்காடும், ஊசி மூலம் போதை ஏற்றுவோரிடம் 10.16 விழுக்காடும், ஆண்களோடு உடலுறவு கொள்ளும் ஆண்களிடம் 8.74 விழுக்காடும், பால்வினை நோய் மருத்துவமனைக்கு வருகிறவர்களிடம் 5.66 விழுக்காடும் உள்ளது. ஆகவே, நாட்டில் அதிக ஆபத்தில் இருக்கும் குழுக்களிடம் எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரவலைக் கட்டுப்படுத்தத் தீவிரமான மருத்துவத் தலையீடுகள் தேவை.
மேலும் இக்கூறு, இணைக்கும் மக்கள் தொகை எனப்படும், இடம்பெயர்வோர் மற்றும் கன ஊர்தி ஓட்டுநர் போன்றோருக்கு உதவி செய்யும். உட்கூறு 1 ல் கீழ்வரும் இரு துணைக்கூறுகள் உள்ளன.
1.1  அதிக ஆபத்து குழுவினரிடையில் (HRG) இலக்கடிப்படை மருத்துவத் தலையீட்டை (TIs)  முழுமைப்படுத்துதல் (Scaling up coverage of TIs among HRG)
இந்தத் துணைக்கூறில் அடங்கும் மருத்துவத் தலையீடுகள்: (i) பாதுகாப்பான நடவடிக்கைகளை அதிகரிக்க நடத்தை மாற்றங்களுக்கான தலையீடு, சோதனை, ஆலோசனை, மருத்துவத்தைக் கடைபிடித்தல், பிற சேவைகளைக் கேட்டுப்பெறுதல் ஆகியவற்றுக்கான ஏற்பாடு; (ii) அதிக ஆபத்துள்ள குழுக்களுக்கு காப்புறை பயன்படுத்தலை ஊக்குவித்து வழங்கி ஒவ்வொரு உடலுறவின் போதும் உபயோகிக்க வைத்தல் (iii) நோயாளிகள் மருத்துவத்தைக் கடைபிடிப்பதை அதிகரிக்க சேவை மையங்களில் ஆலோசனை வழங்குதல், இணையர் பரிந்துரைப்பு மற்றும் மேலாண்மைக்கு அழுத்தம் கொடுத்து ஆபத்தைக் குறைக்க ஆலோசனை ஆகியவற்றை உள்ளடக்கிய உடலுறவு மூலம் பரவும் தொற்று சேவைக்கான ஏற்பாடுகள் அல்லது பரிந்துரைப்பு (iv) ஊசி மூலம் போதை ஏற்றுவோருக்கு ஊசியும் சிரிஞ்சும் மாற்றித்தருதலோடு ஓப்பியம் மாற்று சிகிச்சையை அனைவருக்கும் எட்டச் செய்தல். மேலும், ஐந்து ஆண்டுகளில், 25 மாநில பயிற்சி மையங்களின் இயக்கச் செலவுகளுக்கும், பங்கு பெறுவோர் பயிற்சி செலவுகளுக்கும் நிதியுதவி அளிப்பதையும் இத்துணைக்கூறு உள்ளடக்கியுள்ளது.
1.2 பிற பலவீனமான மக்கள் கூட்டத்தை முற்றிலுமாக சென்றடைதல் (Scaling up of interventions among other vulnerable populations)
இந்தத் துணைக்கூற்றில் உள்ளடங்கிய செயல்பாடுகள்: (i) கடக்கும் முனைகளிலும் பணியிடங்களிலும் இடம்பெயரும் மக்கள் குழுக்கள் மற்றும் கன ஊர்தி ஓட்டுநர்களின் தொற்றாபத்தை மதிப்பிடுதலும் எண்ணிக்கையை அளவிடுதலும் (ii) ஆபத்து மற்றும் பலவீனம், தடுப்புமுறைகள், கிடைக்கும் சேவைகளும் அவற்றின் இடங்களும், பாதுகாப்பான நடவடிக்கைகளை அதிகரித்தல், சேவைகளைக் கேட்டுப்பெறுதலோடு சமூக ஒதுக்கத்தைக் குறைத்தல் ஆகியவை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க நடத்தை மாற்றத் தகவல் தொடர்புகள்; (iii) சமூக விற்பனை உள்ளடக்கிய பல்வேறு வழிமுறைகளில் காப்புறை பயன்பாட்டை ஊக்குவித்து வழங்குதல்; (iv) சோதனை, ஆலோசனை, மற்றும் உடலுறவால் பரவும் தொற்றுக்கான மருத்துவ சேவைகளுக்கு பொது மற்றும் அரசுசாரா அமைப்புகளான உள்ளூர் நிறுவனங்களோடு ஒருங்கிணைப்பை உருவாக்குதல்; (v)  இடம்பெயர்வோர் சென்றடையும் இடங்களில் “சமனர் ஆதரவுக்குழுக்களையும்” “பாதுகாப்பான இயங்கிடங்களையும்” உண்டாக்குதல்;  (vi)  ஊசிமூலம் போதை ஏற்றுவோரின் இணையருக்கு தேவையின் அடிப்படையில் பாலின புரிதல் கொண்ட சேவைகளை ஏற்படுத்துதல்; (vii) பலவீனமான மக்கள் கூட்டத்தின் வலைப்பின்னலை, மையங்களோடு உள்ள தொடர்புகளை வலுப்படுத்தியும், குறிப்பாக, ஆபத்தைக் குறைக்கும் காப்புறை பயன்படுத்துதல் போன்ற ஆலோசனைகள் வழங்கியும் வலுப்படுத்துதல்.
உட்கூறு 2: (அ) பொது மக்களுக்கும் (ஆ) அதிக ஆபத்துள்ள குழுக்களுக்கும், நடத்தை மாற்றத்தையும் தேவைகளைக் கேட்டுப்பெறுவதையும் குறிக்கோளாக வைத்து, தகவல் கல்வி தொடர்பு  (IEC) சேவைகளை விரிவாக்குதல்
தகவல் கல்வி தொடர்பு, தே.எ.க.திட்டத்தின் ஒரு முக்கியமான கூறாகும். ஆலோசனை, பரிசோதனை, எதிர்-நகல் வைரல் மருத்துவம், உடலுறவால் பரவும் தொற்று மருத்துவம் மற்றும் காப்புறை பயன் ஊக்குவித்தல் ஆகியவற்றை விரிவுபடுத்திய பின், தேவைகளைக் கேட்டுப்பெறுதலை ஊக்குவிக்கும் பிரச்சாரமே தே.எ.க.தி-IV ன் தகவல்தொடர்பு உத்தியாக தொடர்ந்து விளங்கும். அனைத்துத் தடுப்பு முயற்சிகளுக்கும் தகவல் கல்வி தொடர்பே முக்கிய கூறாக தொடருவதோடு கீழ்க்கண்டவையும் அதில் அடங்கும்
•ஆபத்து அதிகமுள்ள குழுக்கள். பலியாகக்கூடிய குழுக்கள் மற்றும் அணுகமுடியாத மக்கள்கூட்டங்களுக்கு நடத்தை மாற்றத் தகவல் தொடர்பு உத்திகள்
•பொதுமக்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும், விழிப்புணர்வை அதிகப்படுத்துதல்.
உட்கூறு 3:  விரிவான பராமரிப்பு, ஆதரவு மற்றும் மருத்துவம்
தேவையுள்ள அனைவருக்கும் விரிவான எச்.ஐ.வி பராமரிப்பை தே.எ.க.தி-IV நடைமுறைப்படுத்துவதோடு, எச்.ஐ.வி/எய்ட்சால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கூடுதல் உதவிகள் கிடைக்க வகை செய்யும். மிகப்பரந்த மருத்துவ வசதி வலைப்பின்னல்களோடு அதிக தொடர்பும் இணக்கமும், எச்.அய்.வி.யோடு வாழும் மக்கள் மற்றும் சமூகக்குழுக்களிடம் இருந்து ஒத்துழைப்புடன் ஆதரவும் எதிர்நோக்கப்படுகிறது. அதிதரம் வாய்ந்த மருத்துவம், பின்சேவைகள், வெற்றிகரமான தடுப்பு, வெளிவட்டத்தில் இருக்கும் சுகாதாரப் பராமரிப்பாளர்களோடு சிறந்த தொடர்புகள் ஆகியவற்றை வழங்க  கூடுதல் தலைசிறந்த மையங்களையும் தரம் உயர்த்தப்பட்ட எதிர்-நகல்வைரல் மருத்துவம் மற்றும் சேவை மையங்களையும் அமைத்தல்.
 கொள்ளைநோய் முதிர்ச்சியடைந்து வருகின்ற நிலையில் இரண்டாவது கட்ட எதிர்-நகல்வைரல் மருத்துவம், தருணத்தொற்று மேலாண்மைக்கு அதிக தேவை ஏற்படும். தே.எ.க.தி. IV இத்தேவைகளைப் போதுமான அளவுக்கு சந்திக்கும். எச்.ஐ.வி./எய்ட்சின் விரிவான பராமரிப்பு, ஆதரவு மற்றும் மருத்துவம் மற்றவற்றிற்கு இடையில் பின்வருவனவற்றையும் உள்ளடக்கும் என்று முன்மொழியப்பட்டுள்ளது:  (i) இரண்டாம் நிலையுடன் கூடிய எதிர்-நகல்வைரல் மருத்துவம் (ii) தருணத்தொற்று மேலாண்மை  (iii)  தொடர்புடைய துறைகள்/அமைச்சகங்களோடு கூடிய இணைப்புகள் மூலமாக சமூகப் பாதுகாப்பு கிடைக்கச் செய்தல். இத் திட்டம் பொது-தனியார் பங்கெடுப்புக்கான வாய்ப்புகளை ஆராயும். சுகாதாரப் பராமரிப்பு அமைப்பு உட்பட அனைத்து நிலைகளிலும் இத்திட்டம் செயல்பாட்டை அதிகரித்து  சமூக ஒதுக்கத்தையும் புறக்கணிப்பையும் குறைக்கும்.
உட்கூறு 4:  நிறுவனத் திறனை வலுப்படுத்தல்
தேசிய அளவில் காணப்படும் இக்கொள்ளை நோயின் பின்வாங்கும் போக்கை பலப்படுத்தி இந்தியாவின் அனைத்து  முக்கிய மாவட்டங்களுக்கும் கொண்டு செல்வதே தே.எ.க.தி-IV  ன் குறிக்கோளாகும். களநிலை செயல்பாடுகளை அதிகத் தரத்தோடும், தக்க சமயத்திலும், பலனளிக்கும் வகையிலும் நடைமுறைப் படுத்துவதையும், திட்டங்களின் எதிர்பார்க்கும் முடிவுகளைக் கொண்டு வருவதையும் உறுதிப்படுத்த மாநில மற்றும் மாவட்ட நிலைகளில் நிகழ்ச்சிகளைத் திட்டமிடுதலும் நிர்வாகப் பொறுப்புகளும் வலிமைப்படுத்தப்படும்.
ஆண்டு செயல் திட்டங்கள் சான்றுகளையும், அந்தந்தப் பகுதிகளின் தேவைகளையும் அடிப்படையாகக் கொண்டும், தே.எ.க.தி - IV ன் நோக்கங்களோடு இயைபுடையதாகவும் இருப்பதை உறுதிசெய்ய திட்டமிடும் செயல் முறைகளும் அமைப்புகளும் மேலும் வலுப்படுத்தப்படும். சாத்தியமான இடங்களில் எல்லாம் பிற துறைகளுடன் ஒருங்குழைப்பையும் ஒருங்கிணைப்பையும் அதிகரித்து கொள்ளைநோய் கட்டுப்பாட்டு முயற்சிகளை மேம்படுத்துவதற்கு தே.எ.க.தி – IV ல் அதிக முன்னுரிமை அளிக்கப்படும். நடப்பில் உள்ள பொது சுகாதார சேவை அமைப்புகளுடன் எச்.ஐ.வி. சேவைகளை பலகட்டங்களாக ஒன்றிணைத்தல், விநியோகம் மற்றும் தரக்கட்டுப்பாட்டு நுட்பங்களை முறைப்படுத்தல், அரசு மற்றும் அரசு சாராத நிறுவனங்கள் மற்றும் வலைப்பின்னல்களின் திறனைக் கட்டுதல் ஆகியவை இதில் அடங்கும்.
உட்கூறு 5:  உத்திசார் தகவல் மேலாண்மை அமைப்புகள் (SIMS)
சான்றடிப்படையிலான திட்டமிடுதல், திட்ட கண்காணிப்பு, திட்ட பலன்களை கணக்கிடல் ஆகியவற்றை ஆதரிக்க, உத்திசார் தகவல் மேலாண்மை அமைப்புகளை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. அவைகள் அனைத்து மட்டங்களிலும் உறுதியாக அமைக்கப்படும். கொள்ளைநோயின் தடமறிதல், நோயுறுதலை ஆராய்தல், தொற்று நிகழிடங்களை இனங்காணுதல், தொற்றால் உண்டாகும் பளுவைக் கணக்கிடல் ஆகியவற்றை மையமாக வைத்து கண்காணிப்பு அமைப்பு மேலும் வலிமைப் படுத்தப்படும். திட்டத்தின் வளர்ந்துவரும் தேவைகளுக்கு ஏற்ப  ஆய்வு முதன்மைகள் மாற்றியமைக்கப்படும். மேலும், சிறந்த முறையில் திட்டம் மற்றும் ஆய்வுத் தரவுகளைப் பயன்படுத்திக் கொள்வதற்காக,  தே.எ.க.தி. IV,  சான்றுகளை ஆவணப்படுத்தி, நிர்வாகித்து, பரப்பும். தொடர்புடைய, அளக்கவும் சரிபார்க்கவும் கூடிய குறிகாட்டிகள் அடையாளங் காணப்பட்டு தகுந்த முறையில் பயன்படுத்தப்படும்.
தடுப்பதற்கான சேவைகள் (Services for Prevention)
இந்தியாவில் எச்.ஐ.வி. கொள்ளை நோய் அதிக ஆபத்தில் இருக்கும் குழுக்களிடம் (பாலியல் தொழிலாளர்கள், ஆண்களோடு உடலுறவு கொள்ளும் ஆண்கள், ஊசி மூலம் போதை ஏற்றுவோர், பாலியல் தொழிலாளர்களின் வாடிக்கையாளர்) அதிகம் உள்ளது. இருந்தாலும் பொது மக்களுக்கும் தொற்று பரவி வரும் சான்றுகள் உள்ளன. நாட்டின் மூன்றில் ஒரு பங்கு மாவட்டங்களில் அதிகமாக எச்.அய்.வி. பரவியுள்ளது.
தொற்றைக் கட்டுப்படுத்த தே.எ.க.தி. III , எச்.ஐ.வி/எய்ட்ஸ் தடுப்பு, பரமரிப்பு, ஆதரவு, மருத்துவம் ஆகியவற்றில் முயற்சியை ஒருமுகப்படுத்துகிறது. இத் திட்டத்தின் கீழ், எச்.ஐ.வி./எய்ட்சோடு தொடர்புடைய அனைத்து சேவைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு துணை மாவட்டங்களுக்கும் சமுதாய நிலைக்கும் கொண்டு வரப்பட்டன. ஆயினும், நோய் பரவலைப் பொருத்தே எந்தப் பகுதியிலும் சேவைகள் கிடைக்கும். இதற்குக் காரணம் இந்தியாவில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் பன்முகத் தொற்றியல் இயல்பைக் காட்டுவதே. அதிக தொற்றுப் பரவலான ஒரு சதவிகிதத்துக்கும் மேலாக பொது மக்கள் தொகையில் சில மாவட்டங்களிலும், குறைவாகப் பிறவற்றிலும் காட்டுகிறது.
மாவட்ட அளவில் அடைப்படை சேவைகள் (Core Services at District level)
வெவ்வேறு பகுதியின் குறிப்பான தேவைகளைக் கணக்கில் கொண்டும், நிறைவளிக்கும் சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகள் கிடைப்பதைப் பொருத்தும் கவனத்துடன் சேவைத் தொகுப்புகளை வழங்க வேண்டும். அதிக அளவில் தொற்றுள்ள மாவட்டங்களில் முழு அளவிலான தடுப்பு, ஆதரவு, மற்றும் குணப்படுத்தும் சேவைகள் மருத்துவக் கல்லூரிகளிலும் மாவட்ட மருத்துவ மனைகளிலும் கிடைக்கும். உடலுறவால் பரவும் தொற்றுகளுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்துதல் அடங்கிய எச்.ஐ.வி/எய்ட்ஸ் தடுப்பு சேவைகள், எச்.ஐ.வி தொற்று அல்லது பாதிப்பு உற்றவர்களுக்கு சமூக உளவியல் ஆலோசனையும் ஆதரவும், எச்.ஐ.வி./எய்ட்சோடு வாழ்பவர்களுக்கு தருணத்தொற்று மேலாண்மையும் எதிர்-நகல்வைரல் மருத்துவமும்,  பெற்றோரிடம் இருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று  பரவுவதைத் தடுக்க ஆலோசனையும் சோதனை வசதிகளும், சிறப்பு குழந்தை எச்.ஐ.வி. பராமரிப்பு மற்றும் மருத்துவம், அறுவை, காதுமூக்குதொண்டையியல், கண்ணோயியல் போன்றவற்றிற்கு சிறப்பு மருத்துவர் பரிந்துரை ஆகிய சேவைகளை இம்மருத்துவ மனைகள் வழங்குகின்றன.
சமுதாய நல மையங்கள் அடைப்படை சேவைகளை வழங்குகின்றன (CHCs give Basic Services)
சமூக நல மையங்களும், ஆரம்ப சுகாதார மையங்களும் இத்திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. காப்புறைகள் மூலம் நோய்தடுப்பு, எச்.ஐ.வி.க்கு ஆலோசனையும் பரிசோதனையும் (தகவல் தொடர்பு தொழில்நுட்ப மையங்கள்), பெற்றோரிடம் இருந்து குழந்தைக்கு பரவுவதைத் தடுத்தல், உடலுறவால் பரவும் நோய் மருத்துவமும் குணப்படுத்துதலும், தருணத்தொற்றுக்கள் மேலாண்மை ஆகியவற்றை இவை ஊக்குவிக்கும்.
சிறந்த சேவைகளை எட்ட சமுதாயம் சார் அமைப்புகள் (CBOs for better Service Outreach)
சமனர் ஆதரவு சேவைகளிலும் எச்.ஐ.வி./எய்ட்சோடு வாழ்வோருக்கு வீட்டில் பராமரிப்பு அளிப்பதிலும் முக்கிய பங்காற்றும் அரசு சாரா அமைப்புகள்/சமுதாயம் சார் அமைப்புகளோடு எச்.ஐ.வி. சேவை அளிக்கும் மருத்துவமனைகள் இணைக்கப்படுகின்றன. எச்.ஐ.வி. நேர்மறை பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளை தொடர்ந்து கவனித்தும், சமுதாய அளவில் ஆதரவளித்தும், மாவட்ட அளவில் சேவைகளைக் கொண்டு சென்றும் சமுதாயம் சார் அமைப்புகள் பணிபுரிகின்றன.
பராமரிப்பும் ஆதரவும் (Care and Support)
தொற்றின் கட்டத்தைப் பொருத்து, எச்.ஐ.வி. நேர்மறை மக்களுக்கான பராமரிப்பு, ஆதரவு மற்றும் மருத்துவம் வேறுபடும். எச்.ஐ.வி. பாதிப்புற்ற ஒருவர் முதல் சில ஆண்டுகளுக்கு எந்த அறிகுறியையும் வெளிக்காட்டமல் இருக்கலாம். ஆறு அல்லது எட்டு ஆண்டுகளுக்குப் பின் அது வெளிப்படும். நோய்த்தடுப்பு ஆற்றல் குறைந்து வரவர  ஒருவருக்குப் பல தருணத்தொற்றுக்கள் ஏற்படும் வாய்ப்புண்டு. இக்கட்டத்தில், மருத்துவ சிகிச்சையும் சமூக உளவியல் ஆதரவும் தேவை. உடனடி நோய்கண்டறிதலையும் தருணத்தொற்றுக்கான மருத்துவத்தையும் பெறும் எய்ட்சோடு வாழும் மக்கள் நீண்ட தரமான  வாழ்க்கையைப் பெற முடியும்.
தே.எ.க.தி – II ல் குறைந்த செலவிலான பராமரிப்பு, ஆதரவு மற்றும் பொதுவான தருணத்தொற்றுக்களுக்கான மருத்துவம் அளிப்பதில் கவனம் செலுத்தப்பட்டது. ஏழைகளுக்கு எதிர்-நகல்வைரல் மருத்துவம் எளிதாகவும், மலிவாகவும் கிடைப்பதை மேலும் மேம்படுத்துவதோடு, தனிநபருக்குக், குறிப்பாக, இக்கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டுள்ள விளிம்புநிலைப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும், சமூக உளவியல் ஆதரவளித்துக் குடும்ப மற்றும் சமுதாய பராமரிப்பை வலுப்படுத்தவும், பரிந்துரைக்கப்பட்ட எதிர்-நகல்வைரல் மருத்துவத்தைக் கடைபிடிப்பதை மேம்படுத்தவும், இக்கொள்ளை நோயோடு தொடர்புடைய ஒதுக்கத்தையும் புறக்கணிப்பையும் கையாளவும் தே.எ.க.தி - III  திட்டமிடுகிறது.
இந்நோக்கத்தை அடைய அதிக மற்றும் மிதமான நோய்பரவல் உள்ள இடங்களில் திட்ட காலத்தில் (2007-2012) 350 சமுதாய பராமரிப்பு மையங்களை எச்.ஐ.வி/எய்ட்ச் நோயுடன் வாழ்வோரோடு இணைந்து அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மையங்கள் மாவட்டங்களின் கொள்ளை நோயியல் மற்றும் எச்.ஐ.வி/எய்ட்சுடன் வாழ்வோர் பளுவின் அடிப்படையில் அமைக்கப்பட்டு அருகில் உள்ள எதிர்-நகல்வைரல் மருத்துவ மையங்களோடு இணைக்கப்படும். மருந்துகளை உட்கொள்ளுதல், ஊட்டச்சத்து தேவைகள், மருத்துவ உதவி, தொடர் பராமரிப்புக்கான பரிந்துரை மற்றும் வெளிக்கள தொடர்பு, சமூக ஆதரவு, சட்ட ரீதியான சேவைகள் ஆகியவற்றிற்கான ஆலோசனைகளை இம்மையங்கள் அளிக்கும். இலக்கடிப்படையிலான மருத்துவத் தலையீடுகள் மற்றும் சமுதாய பரமரிப்பு மையங்களுக்கும் இடையில் இணைப்பு ஏற்படுத்துவதின் மூலம் மாநில எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சங்கங்கள் ஆபத்துள்ள குழுக்கள் மையத்தை அணுகுவதை உறுதி செய்யும்.
அந்தந்தப் பகுதிகளில் தொடர்புகளை வலிமைப்படுத்துவதின் மூலமாக மருந்துகளை ஒழுங்காக உட்கொள்ளும் பழக்கத்தை அதிகப்படுத்தவும் (> 95 விழுக்காடு) எதிர்-நகல் வைரல் மருத்துவத்தைக் கடைபிடிக்கச் செய்யவும் தே.எ.க.தி. III  முயற்சி மேற்கொள்ளும். பராமரிப்பு, ஆதரவு மற்றும் மருத்துவத்திற்கான இந்த அணுகுமுறை  எச்.ஐ.வி, தொற்று விழிப்புணர்வையும் உருவாக்கும். ஆகவே, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின், இந்தியாவில் எச்.ஐ.வி./எய்ட்ஸ் நோய்நிகழ்வுகளைக் கட்டுப்படுத்தி ஒழிக்கும் பணியை வெற்றிகரமாக்குவதில் தே.எ.க.தி.- III  ன்   இப்பணி முக்கிய பங்கு வகிக்கும்.
குழந்தைகளுக்கான பராமரிப்பும் ஆதரவும் (Care and Support for Children)
ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 50,000 குழந்தைகள் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதுவரையில், இக்குழந்தைகளுக்கான பராமரிப்பு மற்றும் ஆதரவுக்கு கிடைக்கும் பிரதிபலன் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. எச்.ஐ.வி. ஆபத்துள்ள குழந்தைகளுக்கு ஆரம்ப கட்ட நோயறிதல் மற்றும் மருத்துவம், சுகாதார அமைப்பின் ஒவ்வொரு நிலையிலும் குழந்தைகள் எச்.ஐ.வி. பராமரிப்புக்கான விரிவான வழிகாட்டுதல்கள்,  எச்.ஐ.வி. நேர்மறியாக இருக்கும் குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்கும் ஆலோசகர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்க சமூகத் துறை திட்டங்களுடன் இணைப்பு, எதிர்-நகல்வைரல் மருத்துவத்திற்கும் தொடர்ந்து கண்காணிக்கவும்  வெளிக்களப் பணி மற்றும் போக்குவரத்து மானியம், ஊட்டச்சத்து, கல்வி, மனமகிழ்ச்சி மற்றும் திறன்மேம்பாட்டு ஆதரவு, நிறுவன, குழந்தை பராமரிப்பு, மற்றும் சமுதாயம் சார் பராமரிப்பு அமைப்புகளில் குறைந்தபட்ச பரமரிப்பு மற்றும் பாதுகாப்பு அளவுகோல்களை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் தே.எ.க.தி. III இதை மேம்படுத்தத் திட்டம் இடுகிறது.

VIII.  எச்.ஐ.வி./ எய்ட்சைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
கே: எச்.அய்.வி. என்றால் என்ன?
பதில்: எச்.ஐ.வி. (மனித நோய்த்தடுப்புக்குறைபாடு வைரஸ்) எய்ட்சை உண்டாக்குகிறது. மருந்தூசிகளைப் பகிர்ந்துகொள்ளுதல், உடலுறவு ஆகியவற்றினால் இரத்தத்தின் வழியாக இந்த வைரஸ் ஒருவரில் இருந்து இன்னொருவருக்குப் பரவுகிறது. மேலும்,  தொற்றுள்ள ஒரு கர்ப்பிணிப்பெண் குழந்தைப்பேறு மற்றும் தாய்ப்பாலின் மூலம் குழந்தைக்கு நோயைப் பரப்புகிறார். எச்.ஐ.வி. உடலுள் ஏறிய ஒருவரைத் தொற்று உள்ளவர் என்று அழைக்கிறோம். இவர்களில் பெரும்பாலோனோருக்கு எய்ட்ஸ் ஏற்படுகிறது.

கீழ்வரும் உடல்பாய்மங்கள் எச்.ஐ.வி.யைப் பரப்புவது நிரூபிக்கப்பட்டுள்ளது:
•இரத்தம்
•விந்து
•பெண்ணுறுப்பு கசிவு
•தாய்ப்பால்
•இரத்தம் உள்ள பிற உடல் பாய்மங்கள்

சுகாதாரப் பணியாளர்களுக்கு வைரசைப் பரப்பக்கூடிய  பிற உடல் பாய்மங்கள் வருமாறு:
•மூளையையும் தண்டுவடத்தையும் சூழ்ந்திருக்கும் மூளைத்தண்டுவடப் பாய்மம்.
•எலும்பு மூட்டுகளைச் சூழ்ந்திருக்கும் மூட்டுறைப்பாய்மம்.
•கருவைச் சூழ்ந்திருக்கும் பனிக்குடத்திரவம்.
கே: எய்ட்ஸ் என்பது என்ன? எய்ட்சை உண்டாக்குவது எது?
பதில்: எய்ட்ஸ் என்பது பெறப்பட்ட நோய்தடுப்புக்குறைபாடு நோய்த்தாக்கம் ஆகும். எச்.அய்.வி. தொற்றுள்ள ஒருவருக்கு, நோய்க்கட்டுப்பாட்டு மையம் வரையறுத்துள்ள எய்ட்ஸைக் குறிக்கும் நோய்கள் எதுவும் காணப்பட்டால் எய்ட்ஸ் என்று நோய்கண்டறிவிக்கப்படுகிறது. எய்ட்ட்ஸ் நேர்மறையான ஒருவருக்குக் கடுமையான நோய் எதுவும் இல்லை என்றாலும் சில இரத்தப்பரிசோதனைகளைக் கொண்டு (சி..டி.4+ கணக்கிடல்) எய்ட்ஸ் என நோய் கண்டறியப்படும்.
ஒரு எச்.ஐ.வி. நேர்மறை முடிவு கிடைப்பதனால் மட்டுமே ஒருவருக்கு எய்ட்ஸ் இருப்பதாக அர்த்தமில்லை. சில மருத்துவ அளவுகோல்களைக் கொண்டு ஒரு மருத்துவரே எய்ட்சைக் கண்டறிகிறார் (உ-ம்: எய்ட்சை சுட்டிக்காட்டும் ஒரு நோய்).
சில நோய்களை எதிர்த்துப் போராட முடியாத நிலைக்கு நோய்த்தடுப்பு மண்டலத்தை எச்.ஐ.வி. தொற்று பலவீனமாக்குகிறது. இத்தகையத் தொற்றை தருணத்தொற்று என அழைக்கின்றனர். ஏனெனில், பலவீனம் அடைந்த நோய்த்தடுப்பு மண்டலம் அளிக்கும் நோய்க்குள்ளாகும் தருணத்தை இவை பயன்படுத்திக் கொள்ளுகின்றன.
எய்ட்ஸ் உள்ளவர்களுக்கு பிரச்சினைகளையோ அல்லது உயிருக்கு ஆபத்தான நிலையையோ உண்டாக்கும் பல தொற்றுக்களைப் பொதுவாக ஓர் ஆரோக்கியமான நோய்த்தடுப்பு மண்டலம் கட்டுப்படுத்திவிடும். கடுமையான நோயைத் தடுக்க அல்லது மருத்துவம் அளிக்க மருத்துவத் தலையீடு அவசியம் என்ற அளவுக்கு  எய்ட்ஸ் உள்ளவரின் நோய்த்தடுப்பு மண்டலம் பலவீனம் அடைந்துவிடுகிறது.
கே: எச்.அய்.வி. எங்கிருந்து வந்தது?
பதில்: இதைப்பற்றி நமக்குத் தெரியவில்லை. அறிவியல் அறிஞர்கள் எச்.ஐ.வி.யின் தோற்றம் குறித்து பல கோட்பாடுகளை வைத்திருக்கின்றனர். ஆனால் எதுவுமே நிரூபிக்கப்படவில்லை. காங்கோ மக்கள்நாயகக் குடியரசின் கின்ஷாஷாவில் 1959-ல் சேகரிக்கப்பட்ட ஒருவரின் இரத்த மாதிரியில் முதன்முதலில் எச்.ஐ.வி. கண்டுபிடிக்கப்பட்டது (இவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது தெரியவில்லை). இந்த இரத்த மாதிரியை மரபியல் சோதனை செய்தபோது எச்.ஐ.வி.-1, 1940 களின் பின்பகுதியில் அல்லது 1950 களின் முற்பகுதியில் ஒரு தனி வைரசை மூலமாகக் கொண்டு தோன்றி இருக்கவேண்டும் எனத் தெரிகிறது.
1970 களின் நடுப்பகுதி வரை இந்த வைரஸ் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் இருந்ததா எனத் தெரியவில்லை. 1979-1981-ல் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க்கில் உள்ள சில ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களின் மத்தியில் ஓர் அரிய வகையான நிமோனியா, புற்றுநோய் மற்றும் பல நோய்கள் தோன்றுவதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். ஆனால் இவை ஆரோக்கியமான நோய்த்தடுப்பு மண்டலம் உள்ளவர்களிடத்தில் காணப்படவில்லை.
ஆரோக்கியமானவர்களிடம் காணப்படும் தருணத்தொற்றுக்கள், காப்போசிக் கழலை, மற்றும் நிமோசிஸ்டிஸ் காரினி நிமோனியாவை விவரிக்க பொது சுகாதார அலுவலர்கள் 1982-ல்  “பெறப்பட்ட நோய்த்தடுப்புக்குறைபாடு நோய்த்தாக்கம்” அல்லது எய்ட்ஸ் என்ற சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கினர். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் எய்ட்ஸ் நோயாளிகளை கண்டறியும் பணி அதே ஆண்டில் தொடங்கியது.
எய்ட்சுக்குக் காரணமான வைரசை 1983-ல் அறிவியலாளர்கள் தனிமைப்படுத்தினர். ஓர் அனைத்துலக அறிவியலாளர் குழு முதன் முதலில் அந்த வைரசுக்கு HTLV-III/LAV (human T-cell lymphotropic virus-type III/lymphadenopathy-associated virus) என்று பெயரிட்டது. பின்னர் இது எச்.அய்.வி. என மாற்றப்பட்டது.
15 ஆண்டுகளாக நடைபெற்று வரும் அறிவியல் ஆராய்ச்சியின் முடிவாக, உடலுறவு அல்லது போதை ஊசி மூலமாக எச்.ஐ.வி. தொற்று  ஏற்படுகிறது என அறியப்படுகிறது. எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு எய்ட்ஸ் உருவாகிறது.
கே: எய்ட்சை உருவாக்க எச்.ஐ.விக்கு எவ்வளவு காலம் ஆகும்?
பதில்: 1992-ல் இருந்து நடை பெற்று வரும் ஆய்வுகள் எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்களில் பாதிப்பேருக்கு 10 ஆண்டுகளுக்குள் அது எய்ட்சாக மாறுகிறது எனக் கணக்கிட்டுள்ளது. இது நபருக்கு நபர் வேறுபடுவதோடு, ஒருவரின் ஆரோக்கிய நிலை மற்றும் உடல்நலத்தோடு தொடர்புடைய நடத்தைகள் போன்றவற்றை உள்ளடக்கிய பல காரணிகளைப் பொறுத்தும் உள்ளது.
இன்று, நோய்த்தடுப்பு மண்டலத்தை எச்.ஐ.வி. பலவீனப்படுத்தும் வேக விகிதத்தைக் குறைக்கும் மருத்துவங்கள் உள்ளன. பிற நோய்களைப் போன்றே, ஆரம்ப கட்ட நோய்கண்டறிதலே பலவிதமான மருத்துவங்களுக்கும் தடுப்பு சுகாதார பராமரிப்புக்கும் அடிப்படையாகும்.
கே: ஏன் எய்ட்ஸ் கொள்ளைநோய் மிகவும் ஆபத்தானது எனக் கருதப்படுகிறது?
ஒருவரை ஆக்கபூர்வமான நிலையில் இருக்கும்போது எய்ட்ஸ் பாதித்து அகால மரணத்தை நோக்கி வழி நடத்துவதால், முழு குடும்பங்கள், சமுதாயங்கள் மற்றும் நாடுகளின் சமூகப்-பொருளாதார வடிவங்கள் பாதிப்படைகின்றன. மேலும், எய்ட்ஸ் குணப்படுத்த முடியாத ஒன்று என்பதாலும்,  பெரும்பாலும் உடலுறவின் மூலம் பரவுவதாலும், உடலுறவுப் பழக்க வழக்கம் தனிப்பட்ட ஒன்று என்பதாலும், இப்பிரச்சினைகள் கையாளக் கடினமானவை ஆகும்.
கே: உடலுறவின் மூலம் பாதிக்கப்படுவதை நான் எவ்வாறு தவிர்க்க முடியும்?
பதில்: உடல் உறவைத் தவிர்ப்பதன் மூலமும், பாதிக்கப்படாத ஒரே இணையுடன் உடலுறவு வைத்துக்கொள்வதன் மூலமும் அல்லது பாதுகாப்பான உடலுறவு மூலமாகவும் நீங்கள் எச்.ஐ.வி. தொற்றைத் தவிர்க்கலாம். பாதுகாப்பான உடலுறவு என்பது சரியான முறையில் காப்புறை பயன்படுத்துவதும் ஊடுறுவல் அற்ற உடலுறவும் ஆகும்.
கே: எச்.ஐ.வி.யில் இருந்து குழந்தைகளையும் இளைஞர்களையும் எவ்வாறு பாதுகாக்கலாம்?
உடலுறவுப் பழக்கங்களில் ஈடுபடும் பருவத்திற்கு முன்னரே, குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும், எச்.ஐ.வி. தொற்றைத் தடுப்பது எவ்வாறு என்று அறிந்து கொள்ளும் உரிமை உள்ளது. சில இளைஞர்கள் இளம் வயதிலேயே உடலுறவில் ஈடுபடுவது உண்டு என்பதால் அவர்கள் காப்புறை பற்றியும் அது எங்கு கிடைக்கும் என்பதையும் தெரிந்திருக்க வேண்டும். எச்.ஐ.வியை எவ்வாறு தவிர்ப்பது என்பதையும், எச்.ஐ.வி./எய்ட்சோடு வாழ்வோரோடு பரிவோடும் பாரபட்சம் இன்றியும் சகிப்புத் தன்மையோடும் பழகுவது குறித்தும் குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டும். இதற்குப் பொறுப்பு பெற்றோரும் பள்ளிகளுமே.
கே: மருந்தூசிகள் எச்.ஐ.வி.தொற்றைப் பரப்ப முடியுமா?
பதில்: ஆம். எச்.ஐ.வி. உள்ள இரத்தத்தால் ஊசிக்கருவி மாசடைந்திருந்தால். தவிர்க்க முடியாத நிலையிலேயே ஊசி மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். மருந்தூசி இட வேண்டும் என்றால், ஊசியையும், செலுத்தியையும் கிருமியகற்றப்பட்ட பொதியில் இருந்து நேரடியாக எடுக்க வேண்டும். அல்லது தகுந்த முறையில் கிருமியகற்றப்பட வேண்டும். சுத்தம் செய்யப்பட்ட ஊசியையும் செலுத்தியையும் 20 நிமிடங்கள் கொதிக்கும் நீரில் இட்டு வைத்தபின் அவை மறுபயனுக்கு தயாராக இருக்கும். போதை மருந்தை ஊசி மூலம் ஏற்றுபவர்கள் பிறர் பயன்படுத்திய கருவிகளைப் பயன்படுத்தக் கூடாது.
கே: பச்சை குத்துதல் அல்லது காது குத்துதல் பற்றி?
பதில்: பச்சைகுத்துதல், காதுகுத்துதல், அக்குபங்சர் மற்றும் சில பல் வேலைகளுக்குப் பயன்படும் கருவிகள் தொற்றகற்றப்பட்டு பாதுகாப்புப் பெற்றிருக்க வேண்டும். பொதுவாக, இன்றியாமையாத தேவை இல்லை என்றால் தோலில் துளையிடும் எந்த முறைகளையும் அனுமதிக்க வேண்டாம்.
கே: எச்.ஐ.வி./எய்ட்சுக்கு மருத்துவம் எதுவும் உண்டா?
பதில்: AZT, DDL , DDC போன்ற தற்போது உரிமம் பெற்றுள்ள எதிர்-நகல் வைரஸ் மருந்துகள் யாவுமே குறுகிய கால செயல்திறன் பெற்றவை. இம்மருந்துகளுக்கான விலையும் அதிகம். கடுமையான எதிர்விளைவுகள் கொண்டவை. மேலும் ஒரே மருந்தை பயன்படுத்தும் போது விரைவில் வைரஸ் மருந்தெதிர்ப்பை உருவாக்கிக் கொள்கிறது. இதனால் கூட்டு மருந்துகள் வலியுறுத்தப்படுகின்றன. புரோட்டீஸ் தடுப்பான்கள் என்னும் புதிய மருந்துகள் இதில் அடங்கும். ஆனால், இதனால் சிகிச்சையின் செலவு இன்னும் அதிகமாகியுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் தற்போதைய கொள்கை வைரஸ் எதிர்ப்பு மருந்துகளைப் பரிந்துரைக்கவில்லை. மாறாகக், காசநோய் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற எச்.ஐ.வி.யோடு இணைந்த தருணத்தொற்றுக்களைக் கையாளும்  மருத்துவ மேலாண்மையை  வலுப்படுத்த அறிவுறுத்துகிறது. எச்.ஐ.வி./எய்ட்சோடு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும், வாழ்நாளை நீடிப்பதிலும் சிறந்த பராமரிப்புத் திட்டங்கள் பலனளிக்கின்றன என்பது உறுதியாகிறது.
கே: முன்னர் இல்லாத ஒரு நோய் திடீரென எவ்வாறு இருக்க முடியும்?
பதில்: எய்ட்சை உலகளாவிய கொள்ளை நோயாகப் பார்த்தால் அது புதியது போலவும் திடீரெனத் தோன்றியதாகவும் காணப்படுகிறது. ஆனால் அதை ஒரு நோயாகவும் அதை உருவாக்கும் வைரசையும் நோக்கினால் நமக்கு வேறு ஒரு காட்சி புலப்படுகிறது. நோயும் வைரசும் புதியன அல்ல என்பதைக் காண்கிறோம். கொள்ளை நோயாகப் பரவுவதற்கு முன்னாலும் அவை இருந்தன. வைரசுகள் சிலசமயம் மாற்றம் அடைகின்றன என்பது நமக்குத் தெரியும். ஒரு காலத்தில் மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்காத வைரசுகள் பின்னர் மாற்றமடைந்து தீங்கு உண்டாக்கலாம். எய்ட்ஸ் கொள்ளை நோய்க்கு முன்னர் எச்.ஐ.வி. க்கும் இதுவே நிகழ்ந்திருக்கலாம்.
வைரஸ் அதிவேகமாகப் பரவுவதே புதியதாகும். கொள்ளை நோயாக தொடங்குவதற்குப் பல்லாண்டுகளுக்கு முன் இந்த வைரஸ் தனி மக்கள் குழுக்கள் மத்தியில் இருந்திருக்கும் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர். பின்னர் சூழ்நிலை மாறியது. மக்கள் அதிகமாகவும் அடிக்கடியும் பயணம் செய்ய ஆரம்பித்தனர். பெரிய நகரங்களில் குடியமர்ந்தனர். அவர்களது வாழ்க்கை முறை மாறியது. பாலியல் நடத்தைகளும் மாறின.  உடலுறவின் மூலம் வைரசால் பரவி இரத்தத்தை மாசடையச் செய்ய முடிந்தது. வைரஸ் பரவப் பரவ ஏற்கெனவே இருந்த நோய் புதிய கொள்ளை நோயாக மாறியது.
கே: எச்.ஐ.வி. தொற்றுள்ள ஒருவருடன் பணியாற்றுவது பாதுகாப்பானதா?
பதில்: ஆம். பணியாற்றுவதனால் பெரும்பாலான பணியாளர்களுக்கு வைரஸ் பரவும் ஆபத்தில்லை. இரத்த மாற்றம் அல்லது உடலுறவின் மூலமே வைரஸ் முக்கியமாகப் பரவுகிறது. பெரும்பாலான மக்களின் பணியில் இரத்தம் அல்லது  பாலியல் பாய்மங்களோடு தொடர்பு ஏற்பட வழியில்லையாதலால் பெரும்பாலான பணியாளர்கள் பாதுகாப்பாகவே உள்ளனர்.
கே: பாதிக்கப்பட்ட ஒருவருடன் ஒவ்வொரு நாளும் நெருக்கமான உடல் தொடர்புடன் இருப்பதால் என்ன நேரிடும்?
பதில்: இதில் ஆபத்து ஒன்றுமில்லை. அலுவலகத்தில் நீங்கள் எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்களுடன் ஒரே தொலை பேசியைப் பகிர்ந்து கொள்ளலாம், கூட்டமான ஓர் அலுவலகத்தில் அருகருகே நின்று பணிபுரியலாம், ஒரே கோப்பையில் தேனீரைப் பகிர்ந்து அருந்தலாம். இவைகளினால் தொற்று பரவும் ஆபத்தில்லை. அழுக்கும் வியர்வையும் படுவதனாலும் உங்களுக்குத் தொற்று உண்டாகாது.
கே: பணியில் யாருக்கு ஆபத்துள்ளது?
பதில்: வைரசுள்ள இரத்தத்தோடு தொடர்பு ஏற்படும் வாய்ப்புள்ளவர்களுக்கே ஆபத்துள்ளது. சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், பல்மருத்துவர்கள், செவிலியர், ஆய்வகத் தொழில் வல்லுநர் மற்றும் சிலர். இவர்கள் வைரசுள்ள இரத்தத்தோடு உடல்தொடர்பு ஏற்படா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உதாரணமாகக் கையுறை பயன்படுத்துதல்.
கே: எச்.ஐ.வி. தொற்றுள்ள பணியாளர் ஒருவரை பணியாற்ற அனுமதிக்கலாமா?
பதில்: தொற்றுள்ள ஒரு பணியாளர் ஆரோக்கியமாக இருந்தால் பிற பணியாளர்களைப் போன்றே அவரையும் நடத்த வேண்டும். எய்ட்ஸ் அல்லது எய்ட்சோடு தொடர்புடைய நோயுள்ள  ஒருவரைப் பிற நோயுள்ள பணியாளரைப் போன்றே நடத்த வேண்டும். எச்.எய்.வி தொற்றை மட்டுமே காரணமாகக் கொண்டு  ஒரு பணியாளரை வேலைநீக்கம் செய்ய முடியாது.
கே: எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்ட பணியாளர் அதை நிர்வாகிக்கு அறிவிக்க வேண்டுமா?
பதில்: தொற்று ஏற்பட்ட அல்லது ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிற ஒருவர் நிர்வாகம், சக ஊழியர்கள், தொழிற்சங்கங்கள் அல்லது வாடிக்கையாளர்களால் பாரபட்சமாக நடத்தப்படுவதில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும். பணியாளர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள தொற்றைப் பற்றி நிர்வாகத்திற்கு அறிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எய்ட்சைப் பற்றிய சரியான தகவலும் கல்வியும் ஊழியர்களுக்குக் கிடைக்குமானால், எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டுள்ள ஒருவரின் உரிமைகளைப் பாதுகாப்பதைப்பற்றி புரிந்து கொள்ளும் பணியிடச்சூழல் உருவாகும் வாய்ப்புண்டு.
கே: பணியமர்த்தியவர் பணியாளருக்கு எச்.ஐ.வி. சோதனை நடத்த வேண்டுமா?
பதில்: பணியாளர்களுக்கு எச்.ஐ.வி.சோதனை செய்ய அவசியமில்லை. நீங்கள் ஓர் எச்.ஐ.வி. தொற்றுள்ள பணியாளர் என்றும் உங்களுக்கு பணி செய்யும் அளவுக்கு உடல்நலம் உள்ளது என்றும் கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் வேலையைப் பொறுத்த வரையில் தொற்றைப் பற்றிய தகவல் தனிப்பட்டது. அது வெளிப்பட்டால் உங்களைக் குறிவைத்து பாரபட்சம் காட்டப்படலாம். எய்ட்சோடு தொடர்புள்ள ஒரு நோய், ஒரு குறிப்பிட்ட வேலைக்கு உங்களைத் தகுதியற்றவர் ஆக்கினால், வேறு நீடித்த நோயால் பாதிக்கப்பட்டவர் எவ்வாறு நடத்தப்படுவாரோ அவ்வாறே  நீங்களும் நடத்தப்பட வேண்டும். பொருத்தமான இன்னொரு வேலையைப் பொதுவாக நிர்வாகம் வழங்கும். உலகின் பல்வேறு பகுதிகளில் நிர்வாகிகள் இப் பிரச்சினைகளை இன்னும் கூடுதல் மனிதாபிமானத்தோடு அணுகத் தொடங்கிவிட்டனர். நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்கங்களிடம் இருந்து ஆலோசனைகளைப் பெறவேண்டும்.
கே: உங்களுக்கு ஏற்கெனவே எச்.ஐ.வி.பாதிப்பு இருந்தால் என்ன செய்வது? உங்களால் இன்னும் பயணம் செய்ய முடியுமா?
பதில்: உங்களுக்கு ஏற்கெனவே எச்.ஐ.வி. பாதிப்பு இருந்தால் பயணத்தைத் திட்டமிடும் முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும். சில குடியேற்ற அதிகாரிகள் எச்.ஐ.வி. தொற்றில்லை என்று சான்றிதழ் கேட்கலாம். உங்கள் பயண ஆலோசகர் அறிவுரை வழங்குவார்.
கே: “முக்கியமாக எய்ட்ஸ் வளரும் நாடுகளுக்கு ஒரு பிரச்சினை.” அல்லது “இல்லை, உண்மையில் எய்ட்ஸ் வளர்ந்த நாடுகளுக்கு ஒரு பிரச்சினை”. இதில் எந்தக் கூற்று மிகவும் சரியானது.
பதில்: பிறரை, பிற மக்களை அல்லது பிற நாட்டையே எய்ட்ஸ் பாதிக்கிறது என்றே பலரும் கூற விரும்புவார்கள். பெரிய நோய்களை,  உதாரணமாக, மலேரியாவை வெப்ப மண்டலப் பகுதிக்கும், இதய நோய்களை தொழில்மயமான நாடுகளுக்கும் இணைத்துப் பேசும் பழைய வடிவங்களை எய்ட்ஸ் உடைத்துவிடுகிறது. வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளையும், குளிர்ந்த மற்றும் வெப்பமான நாடுகளையும் எய்ட்ஸ் பாதிக்கிறது. மனிதர்கள் வாழ்ந்து உடலுறவு கொள்ளும் எல்லா இடங்களிலும் எய்ட்ஸ் பரவுகிறது.
கே: வெவ்வேறு நாடுகளின் எய்ட்ஸ் பிரச்சினைகள் ஒன்றுக்கொன்று எவ்விதம் தொடர்புடையன?
பதில்: அவை மூன்று விதங்களில் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. முதலாவது, ஒவ்வொரு நாட்டிலும், உடலுறவின் மூலம், இரத்தத்தின் வழி பரவும் ஒரு வைரசினாலேயே எய்ட்ஸ் எப்போதும் பரவுகிறது. ஆகவே, எல்லா நாடுகளிலும் அது பரவ மக்களின் ஒரு குறிப்பிட்ட செயல் தேவைப்படுகிறது.
இரண்டாவதாக, மக்கள் தங்கள் பாலியல் நடவடிக்கைகளை மாற்றுவதன் மூலமும், மாற்றப்படும் இரத்தத்தை சோதிப்பதன் மூலமும், ஊசியையும் செலுத்தியையும் கிருமியகற்றுவதன் மூலமும் எல்லா நாடுகளிலும் எய்ட்சை தடுத்துவிடலாம்.
மூன்றாவதாக, எய்ட்சை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்தும் ஒன்றிணைந்த நடவடிக்கைகளில் பெரும்பாலான நாடுகள் இணைந்து வருகின்றன. அனைவருக்குமே தீர்க்க வேண்டிய அடிப்படைப் பிரச்சினை ஒன்றே. உதாரணமாக, கொடையளிக்கப்பட்ட இரத்தம் சோதிக்கப்பட வேண்டும். மேலும், வைரசைக் கண்டறிய எளிமையான, நம்பகரமான, மலிவான சோதனைகள் எல்லோரும் பயனடையத் தக்க வகையில், கிடைக்க வேண்டும். உலகளாவிய இணைந்த நடவடிக்கை மூலமே அத்தகைய சோதனைகள் பரவலாக மலிவாகக் கிடைக்க முடியும்.
கே: ஒருவருக்கு எச்.ஐ.வி/ தொற்று இருப்பதனால் அவருக்கு எய்ட்ஸ் இருக்கிறது என்று அர்த்தமா?
பதில்: இல்லை. எச்.ஐ.வி.ஓர் அசாதாரணமான வைரஸ். ஏனெனில், ஒருவருக்குத் தொற்று ஏற்பட்ட பின்னும் பல ஆண்டுகளுக்கு அவர் நல்ல ஆரோக்கியத்தோடு திகழ முடியும். ஆனால் வைரஸ் படிப்படியாகப் பெருகி நோய்களை எதிர்த்துப் போராடும் உடலின் ஆற்றலை அழித்து விடுகிறது.
எச்.ஐ.வி. தொற்றுள்ள யாவருக்குமே எய்ட்ஸ் ஏற்படுகிறதா என்பது உறுதியாகத் தெரியவில்லை.  எச்.ஐ.வி. இருக்கும் பெரும்பாலானோர்க்கு கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் உண்டாகும் வாய்ப்புள்ளது. ஆனால் இது பல ஆண்டுகளுக்குப் பின்னரே ஏற்படும். எச்.ஐ.வி. உள்ள ஒருவர் அதை அறியாமலே பிறருக்கு வைரசைப் பரப்ப முடியும்.
கே: ஆண் நுனித்தோல் அகற்றல் எச்.ஐ.வி. தொற்றுக்கு எதிரான பாதுகாப்பை அளிக்கும் என்பது உண்மையா?
பதில் ஆம். ஆண் குறியின் தண்டு அல்லது நுனிப்பகுதியை விட நுனித்தோலின் உட்பகுதி மென்சவ்வால் ஆனது. எனவே எளிதில் காயமடையக் கூடியது. இதில் அதிக அளவு வலியுணர்வு உயிரணுக்கள் உள்ளன. இவற்றை எச்.ஐ.வி. குறிவைத்துத் தாக்கும். ஒரே சூழலில் கர்ப்பப்பை வாய் உயிரணுக்களோடு ஒப்பிடும்போது எச்.ஐ.வி-1 க்கு நுனித்தோல் மென்சவ்வு 7 மடங்கு அதிக ஆபத்துக்கு உள்ளாகக் கூடியது என்று அண்மையில் சிக்காகோவில் நடந்த ஆய்வு கண்டுபிடித்துள்ளது.
கே: வாய்வழி பால்வினை பாதுகாப்பற்றதா?
வாய்வழிப் பால்வினையால் (ஒருவர் இன்னொருவரின் பாலுணர்வுப் பகுதிகளை முத்தமிடுதல், நக்குதல், சப்புதல்) தொற்றுக்கான வாய்ப்புகள் ஓரளவுக்கு இருக்கவே செய்கிறது. உதாரணமாக, தொற்றுள்ள ஒருவரின் ஆண்குறியை இன்னொருவர் சப்பும் போது தொற்றுள்ள பாய்மம் வாய்க்குள் செல்லும். இரத்தக் கசிவுள்ள ஈறுகளோ நுண் வாய்ப்புண்களோ இருந்தால் வைரஸ் அவற்றின் வழி இரத்தத்துக்குள் செல்லும். இதே போன்று தொற்றுள்ள பால்வினைப்  பாய்மம் பெண்ணுறுப்பில் இருந்து இணையின் வாய்க்குள் சென்றாலும் இதே நிலை ஏற்படலாம். ஆனால் வாய்வழி பால்வினையால் மட்டுமே தொற்று ஏற்படுவது மிகவும் அரிதானதாகத் தோன்றுகிறது.
கே: உமிழ்நீர் போன்ற உடல் பாய்மங்களால் எய்ட்ஸ் ஏற்படுமா?
பதில்: உமிழ்நீர், மலம், சிறுநீர், கண்ணீர் போன்ற உடல் பாய்மங்களில் சிறு அளவு எச்.ஐ.வி. காணப்படுகின்றன. ஆனால் இந்த உடல் பாய்மங்களின் மூலம் எச்.ஐ.வி. பரவும் என்பதற்கு சான்றில்லை.
கே: எனக்கு ஆபத்து இருக்கிறதா?
பதில்: எச்.ஐ.வி. இருக்கும் ஒருவரை அறியும் வரை தமக்கு அந்நோய் வர வாய்ப்பில்லை என்றே பலரும் நினைக்கின்றனர். ஆனால், யாவருக்கும் நோய் உண்டாகும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது. உங்களது தற்போதைய முந்திய பாலியல், போதை (இரத்த மாற்றம்) நடத்தைகளை நோக்கி உங்கள் எச்.ஐ.வி. ஆபத்தை அறிந்து கொள்ளலாம். பின்னால் ஏற்படக் கூடிய எச்.ஐ.வி தொற்றை எவ்வாறு தவிர்ப்பது என்பதையும் நீங்கள் கணிக்கலாம்.
கே: எனக்கு எச்.ஐ.வி. தொற்று இருந்தால் அதை எவ்வாறு கண்டறியமுடியும்?
“எச்.ஐ.வி. எதிர்பொருள் சோதனை” என்ற இரத்த சோதனை மூலமாகவே உங்களுக்கு வைரஸ் உள்ளதா என்பதை உறுதியாக அறிய முடியும். சிலர் இதை “எச்.ஐ.வி.சோதனை” அல்லது “எய்ட்ஸ் சோதனை” என்று அழைப்பர். ஆனால் இதை வைத்து மட்டுமே உங்களுக்கு எய்ட்ஸ் இருக்கிறதா என்று கூறிவிட முடியாது. உங்களுக்கு வைரஸ் உள்ளதா என்பதையும் அதை முன்விவரித்தபடி பிறருக்குப் பரப்ப முடியுமா என்பதையும் எச்.ஐ.வி. சோதனை கூறும். இச்சோதனை உங்களது இயல்பான இரத்தச் சோதனையில் அடங்காது. குறிப்பிட்டுக் கூற வேண்டும். இது ஒரு துல்லியமான சோதனையாகும்.
சோதனை நேர்மறை என்றால் உங்களுக்கு எச்.ஐ.வி. இருக்கிறது என்றும் சிறப்பு மருத்துவ பராமரிப்பு நன்மையளிக்கும் என்றும் அர்த்தம். மேலும் சோதனைகள் உங்கள் நோய்த்தடுப்பு மண்டலம் எவ்வளவு தூரம் வலிமையாக இருக்கிறது என்பதையும் மருந்துகள் மூலம் சிகிச்சை தேவையா என்பதையும் தெரிவிக்கும். சிலரது நோய்த்தடுப்ப் மண்டலம்  நீண்ட காலம் வலிமையாக இருக்கும். சிலருக்குக் கடுமையான நோய்களும் எய்ட்சும் விரைவாக உருவாகும். மக்கள் ஏன் எச்.ஐ.வி. தொற்றால் வெவ்வேறு விதமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்று அறிவியலாளர்களுக்குத் தெரியவில்லை. உங்கள் சோதனை எதிர்மறையாகவும், சோதனைக்கு முன் ஆறு மாதம் வரை எச்.ஐ.வி. தொற்றுக்கான ஆபத்து எதையும் நீங்கள் எதிகொள்ளவில்லை என்றால் உங்களுக்கு எச்.ஐ.வி. தொற்று இல்லை என்பது உறுதி. பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் நோயின்றி வாழலாம்.
கே: நான் எச்.ஐ.வி. சோதனை செய்ய வேண்டுமா?
சிலருக்கு எச்.ஐ.வி. எதிர்பொருள் சோதனை செய்வது அச்சந்தரும் முடிவாக இருக்கலாம். பாதுகாப்பான பால்வினைகளில் ஈடுபட்டு வந்தாலும் சிலர் ஆறு மாதத்துக்கு ஒருமுறை சோதனை செய்து கொள்கிறார்கள். எந்தக் காரணமாக இருந்தாலும் எச்.ஐ.வி. எதிர்பொருள் சோதனை செய்து கொள்வது சிறந்த ஆலோசனையாகும். சில வேளைகளில் சோதனை மேற்கொள்ளுவதே பாதுகாப்பான முறையில் பால்வினை உறவுகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு புதிய ஒரு உறுதியை அளிப்பதாகும்.
எச்.ஐ.வி. சோதனை செய்து கொள்வதால் உங்கள் எச்.ஐ.வி. நிலை மாறாது என்பது முக்கியமாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகும். உங்களுக்கு எச்.ஐ.,வி. இருக்கிறதா அல்லது இல்லையா என்பதையே அது காட்டுகிறது. தற்போது இருக்கும் புதிய சிகிச்சைகளினால் ஆரம்பத்தில் கண்டறிவதன் மூலம் உங்கள் வாழ்க்கை காலம் அதிகமாகலாம்.
கீழ்க்காணும் கேள்விகளைக் கேட்பதன் மூலம் உங்களுக்கு எச்.ஐ.வி. தொற்று அபாயம் இருக்கிறதா என்று அறிந்துகொள்ளலாம்:
•நீங்கள் எப்போதாவது பெண்குறி, வாய் அல்லது ஆசனவாய் மூலம் பாதுகாப்பற்ற பால்வினை செயலில் ஈடுபட்டதுண்டா? (உ-ம். காப்புறை இல்லாமல் உடலுறவு,  மரப்பால் தடுப்பி இன்றி வாய் மூலம் பால்வினை).
•போதை மருந்து அல்லது ஊக்கமருந்து அல்லது தோலில் துளையிட ஊசியைப் பகிர்ந்து கொண்டீர்களா?
•பால்வினை நோய் அல்லது விரும்பாத கர்ப்பம் உண்டானதுண்டா?
•இரத்த மாற்று அல்லது இரத்தப் பொருட்களை ஏப்ரல் 1985 முன்னர் பெற்றதுண்டா?
சோதனைக்கு முன்னும் பின்னும் கிடைக்கும் ஆலோசனை மூலம் எச்.ஐ.வி.பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளவும், உங்களுக்குள்ள ஆபத்து பற்றியும், தொற்றை தவிர்ப்பது குறித்தும் அறிந்து கொள்ளவும் முடியும்.
கர்ப்பம் தரிக்கத் திட்டமிடும் அல்லது ஏற்கெனவே கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணாக இருந்தால் சோதனை செய்து கொள்வது நல்லது. தாயிடம் இருந்து குழந்தைக்குத் தொற்று பரவுவதைக் குறைக்கும் சில சிகிச்சைகள் உள்ளன.
கே: எனக்கு எச்.ஐ.,வி. நேர்மறையாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
பதில்: எச்.ஐ.வி. சோதனை உங்களுக்கு நேர்மறையாக இருந்தால், கீழ் வருபவற்றைக் கருத்தில் கொள்ளவும்:
எச்.ஐ.வி. தொற்றுக்கான ஒரு முழுமையான மருத்துவ சோதனைக்காகவும், மருத்துவம் பற்றிய ஆலோசனையைப் பெறவும், ஆரோக்கியத்தைப் பேணுவதற்காகவும் ஒரு சுகாதாரப் பராமரிப்பு வல்லுநரை அணுகவும். காசநோய் மற்றும் பிற பால்வினை நோய்களுக்கான சோதனை செய்துவிடீர்களா என்பதையும் உறுதி செய்யவும். பெண்களுக்கு இதில், ஒரு முறையான பெண்ணோயியல் சோதனையும் அடங்கும்.
உங்கள் பால்வினை இணையரிடம் எச்.ஐ.வி. ஆபத்தைப் பற்றிக் கூறவும். உங்களுக்கு அருகில் உள்ள சுகாதாரத் துறையில் இருக்கும் இணையர் அறிவிக்கை திட்டம் உங்களுக்கு உதவக் கூடும்.
பிறருக்குத் தொற்று பரவாமல் இருக்க இப்பகுதியில் பேசப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும் (உ-ம்: எப்போதும் காப்புறை பயன்படுத்தல், பிறரோடு ஊசி பகிர்ந்து கொள்ளாமல் இருத்தல்).
மேலும் கூடுதலாக எச்.ஐ.வி. உங்களுக்கு பரவாமல் இருக்க எச்சரிக்கையாய் இருங்கள்.
போதை, மது தவிர்க்கவும். ஊட்டச்சத்து உட்கொள்ளவும். களைப்பையும் மனவழுத்தத்தையும் தவிர்க்கவும்.
முடியக்கூடிய போதெல்லாம் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் இருந்தும் குடும்பத்தினரிடம் இருந்தும் ஆதரவைக் கேளுங்கள். வல்லுநர் ஆலோசனை கேட்பது பற்றி எண்ணிப்பாருங்கள்.
இதே போன்ற அனுபவத்தைக் கடந்து வரும் ஆதரவுக் குழுவைக் கண்டு பிடியுங்கள்.
இரத்தம், பிளாஸ்மா, விந்து, உடல் உறுப்புகள் அல்லது திசுக்களை கொடையளிக்க வேண்டாம்.
கே:எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஏன் முடிவில் இறந்து போகின்றனர்?
பதில்: எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எச்.ஐ.வி. அல்லது எய்ட்சால் இறப்பதில்லை. உடலில் எச்.ஐ.வி. ஏற்படுத்தும் விளைவுகளாலேயே மரணம் அடைகின்றனர். நோய்த்தடுப்பு மண்டலம் பலவீனம் அடைவதால், சாதாரணச் சளியில் இருந்து புற்று நோய் வரை பல தொற்றுகளால் உடல் பாதிப்படைகிறது. உண்மையில் இந்தத் தொற்றுக்களே, எதிர்த்துப் போராடும் ஆற்றலை உடல் இழந்து விடுவதால், ஒருவரை நோய்வாய்ப்பட வைக்கின்றன. இறுதியில் அவர் மரணம் அடைகின்றனர்.
கே: எனக்கு எச்,ஐ,வி, தொற்று உள்ளது என்று எவ்வாறு கூற முடியும்? அறிகுறிகள் என்ன?
பதில்: உங்களுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டுள்ளது என்பதைத் தீர்மானிக்கும் ஒரே வழி அதற்கான சோதனை செய்வது கொள்வதுதான். உங்களுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டுள்ளதை அறிகுறிகளை வைத்துக் கூற முடியாது. எச்.ஐ.வி. தொற்று ஏற்படும் பலருக்குப் பல ஆண்டுகளுக்கு அறிகுறிகள் எதுவும் வெளிப்படாது.

எச்.ஐ.வி. தொற்றின் எச்சரிக்கும் அறிகுறிகளாக பின்வருவனவற்றைக் கூறலாம்:
•விரைவாக எடை இழத்தல்
•வறட்டு இறுமல்
•தொடர் காய்ச்சல் அல்லது அதிகமான இரவு வியர்வை
•அதிகமான, காரணம்புரியாத களைப்பு
•அக்குள், அரை, அல்லது கழுத்தில் நிணநீர் சுரப்பி வீக்கம்
•ஒரு வாரம் வரை நீடிக்கும் வயிற்றுப் போக்கு
•நாக்கு, வாய், அல்லது தொண்டையில் வெண்புள்ளிகள் அல்லது அசாதாரண மருக்கள்
•மூச்சுக்குழல் அழற்சி (நிமோனியா)
•தோல், வாய், மூக்கு, அல்லது கண்ணிமைகளில் சிவப்பணு, பழுப்பு, இளஞ்சிவப்பு, செம்பழுப்பு கொப்புளங்கள்
•ஞாபக மறதி, மனவழுத்தம் போன்ற நரம்புக் கோளாறுகள்

ஆயினும், இவ்வறிகுறிகள் இருப்பதாலேயே ஒருவருக்கு தொற்று இருப்பதாகப் பொருளல்ல. இவை ஒவ்வொன்றும் வேறு நோய்களுடனும் தொடர்புள்ளவைகளே. எச்.ஐ.வி. தொற்றுக்கான சோதனை செய்து கொள்வதே ஒரே வழி என மீண்டும் வலியுறுத்தப் படுகிறது.
கே: தொற்று ஏற்பட்டிருக்கக் கூடிய சாத்தியக்கூறுக்குப் பின் எச்.ஐ.வி. சோதனை செய்து கொள்ள நான் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?
பதில்: எச்.ஐ.வி. தொற்றைக் கண்டறிய பொதுவாகச் செய்யப்படும் சோதனை உண்மையில் எச்.ஐ.வி.யை எதிர்த்துப் போராட உடல் உருவாக்கும் எதிர்பொருள் உள்ளதா என தேடுகிறது. தொற்று ஏற்பட்டு மூன்று மாதங்களுக்குள் பெரும்பான்மையோருக்கு கண்டறியத்தக்க எதிர்பொருள் உண்டாகிறது. சராசரி 25 நாட்கள். அரிதாக, ஆறு மாதம் வரை கூட ஆகலாம். இக்காரணத்தால்தான் இறுதி சாத்தியத் தொற்றிற்குப் பின் (பாதுகாப்பற்ற பெண்குறி, வாய் பால்வினை அல்லது ஊசி பகிர்வு) ஆறு மாதம் கழித்து சோதனை செய்ய வேண்டும் என்று நோய் கட்டுப்பாட்டு மையம் (CDC) தற்போது பரிந்துரைக்கிறது. கண்டறியத்தக்க எதிர்பொருள் உருவாக மிகவும் அரிதாகவே ஆறு மாதத்திற்கு மேற்பட்ட காலம் தேவைப்படலாம்.
கே: சோதனையில் எனக்கு எச்.ஐ.வி. எதிர்மறையாக இருந்தால் எனது இணையருக்கும் எதிர்மறை என்றுதான் பொருளா?
பதில்: இல்லை. உங்களுடைய சோதனை உங்கள் நிலையை மட்டுமே வெளிப்படுத்துகிறது. உங்களுடைய எதிர்மறையான முடிவு உங்கள் இணையருக்கு எச்.ஐ.வி. இருக்கிறதா இல்லையா என்பதை வெளிப்படுத்தாது. தொடர்பு கொள்ளும் போதெல்லாம் தொற்று ஏற்படும் என்றில்லை. எனவே, நீங்கள் எச்.ஐ.வி. சோதனை செய்து கொள்வது உங்கள் இணையருக்குத் தொற்று இருக்கிறதா என்பதை அறியும் வழி அல்ல.
கே: ஆசனவாய் பால்வினையின் மூலம் எனக்கு எச்.ஐ.வி. ஏற்படுமா?
பதில் ஆம். ஆசனவாய் பால்வினையின் மூலம் இணையர் இருவருக்குமே எச்.ஐ.வி. தொற்று ஏற்படும் வாய்ப்புண்டு. தொற்றுள்ள ஒருவரின் இரத்தம், விந்து, விந்துமுன்கசிவு, அல்லது பெண்குறி கசிவு ஆகியவற்றில் எச்.ஐ.வி. காணப்படலாம். குதத்தின் உட்படலம் மென்மையாக இருப்பதால் வைரஸ் எளிதில் உடலுள் புகும். ஆகவே ஆசன வாய் பால்வினையின் போது விந்துவை உள்வாங்குபவருக்கு ஆபத்து அதிகம். எனினும், ஆண்குறியை தொற்றுள்ளவரின் உள்செலுத்துபவருக்கும் ஆபத்து உள்ளது. ஏனெனில்  ஆண்குறியின் நுனிதுவாரம் வழியாக அல்லது ஆண்குறியில் இருக்கும் சிறு வெடிப்புகள் அல்லது புண்கள் வழியாக வைரஸ் உட்புகலாம்.
காப்புறை அணியாமல் ஆசனவாய் உறவு கொள்ளுவதும் ஆபத்தான முறையே. ஆசன வாய் உறவை தேர்பவர்கள் மரப்பால் காப்புறை பயன்படுத்த வேண்டும். பெரும்பாலும் காப்புறை நன்கு வேலை செய்யும். ஆனால் பெண்குறி உறவை விட ஆசன உறவில் காப்புறை கிழியும் ஆபத்து அதிகம். எனவே, காப்புறை அணிந்தாலும் ஆசனவாய் உறவு ஆபத்து நிறைந்தது. நீர் அடிப்படையான உராய்வுநீக்கியை பயன்படுத்தும் போது காப்புறை கிழியும் அபாயம் குறைகிறது.
கே: மருந்தூசி ஏன் எச்.ஐ.வி. ஆபத்து நிறைந்தது?
பதில்: ஒவ்வொரு முறையும் நரம்பூசி இடும்போது இரத்தம் ஊசியிலும் செலுத்தியிலும் செல்ல வாய்ப்புள்ளது. வைரசுள்ள ஒருவரின் இரத்தத்தில் எச்.ஐ.வி. இருக்கும் வாய்ப்புண்டு. இரத்தம் படிந்த செலுத்தியை அல்லது ஊசியை இன்னொருவர் பயன்படுத்தும் போது (சிலவேளை நேரடி செலுத்தி பகிர்தல் எனப்படும்) தொற்றுள்ள இரத்தம் நேரடியாக இரத்த ஓட்டத்துக்குள் செலுத்தப்படும் பெரும் அபாயம் உண்டு.
மேலும் மருந்துக் கருவிகளை பகிர்ந்து கொள்ளுதலும் எச்.ஐ.வி. தொற்று ஆபத்துடையதே. மருந்து கரைசலில் தொற்றுள்ள இரத்தம் பின்வருமாறு கலக்கப்படலாம்:
•மருந்து தயாரிக்க தொற்றுள்ள இரத்தம் கொண்ட செலுத்திகளை பயன்படுத்த
•நீரை மறுபடியும் பயன்படுத்தல
•குப்பி மூடிகள், கரண்டிகள் அல்லது பிற கொள்கலன்களை மறுபடியும் பயன்படுத்துதல் (மருந்தை நீரில் கரைத்து மருந்துக் கரைசலை சூடாக்கப் பயன்படுத்தப்படும் ”கரண்டிகள்” மற்றும் “குக்கர்கள்”
•ஊசியை அடைத்துக்கொள்ளும் துகள்களை வடிகட்ட உதவும் சிறு பஞ்சு அல்லது சிகரெட் ஃபில்டர்களை மீண்டும் பயன்படுத்துதல்
தெரு விற்பனையாளர்கள் பயன்படுத்திய செலுத்திகளை மறுவுறை செய்து கிருமியகற்றியவைகளாக விற்று விடலாம். தோலில் குத்துதல், ஊக்கமருந்து செலுத்துதல் போன்ற எந்த ஒன்றுக்கும் ஊசியையும் செலுத்தியையும் பகிர்ந்து கொள்ளுதல் எச்.ஐ.விக்கும் பிற இரத்தம் வழி பரவும் தொற்றுகளுக்கும் வழிவகுக்கும் அபாயம் உள்ளது என்பதை அறிவது முக்கியமானதாகும்.
கே: ஒரு மருத்துவர் அல்லது பல்மருத்துவரின் அறையில் இருக்கும் நோயாளிக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்படும் அபாயம் உண்டா?
பதில்: சுகாதாரப் பராமரிப்பு அளிக்கும் இடங்களில் எச்.ஐ.வி.பரவும் அபாயம் உண்டு என்றாலும் அது மிகவும் அரிதானதே. உலகளாவிய பாதுகாப்பு முறைகளை உள்ளடக்கிய தொற்று கட்டுப்பாட்டு வழிமுறைகளை கவனமாக நடைமுறைப்படுத்தும் போது மருத்துவ அல்லது பல்மருத்துவ அலுவலகங்களில் எச்.ஐ.வி. தொற்று ஏற்படும் சாத்தியக் கூறுகள் இல்லை என்று மருத்துவ வல்லுநர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.
1990-ல் எச்.ஐ.வி. தொற்றிருந்த ஒரு பல்மருத்துவர் மருத்துவத்தின் போது தமது சில நோயாளிகளுக்கு தொற்றைப் பரப்பியதாக நோய்க்கட்டுப்பாட்டு மையம் அறிவித்தது. எச்.ஐ.வி. பாதிப்புள்ள அவரது நோயாளிகளுக்கு தொற்று அவரிடம் இருந்தே பரவியது என்பதை வைரல் டி.என்.ஏ. தொடர் காட்டியது. இப்பரவல் எவ்வாறு ஏற்பட்டது என்பதை நோய்க்கட்டுப்பாட்டு மையத்தால் விளக்க முடியவில்லை.
எச்.ஐ.வி. தொற்றுள்ள 63 சுகாதார சேவை வழங்குநரின் 22000 நோயாளிகளில் செய்யப்பட்ட சோதனைகளின் மூலம் சுகாதார அமைப்பில் சேவை வழங்குநரிடம் இருந்து நோயாளிக்கு நோய் பரவலுக்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
கே: விளையாட்டின் போது எச்.ஐ.வி. தொற்று பரவலாம் என்று நான் கவலைப்பட தேவை உண்டா?
பதில்: விளையாட்டுகளில் ஈடுபடும்போது எச்.ஐ.வி. தொற்று பரவியதாக ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் எதுவும் இல்லை. இரத்தக் கசிவு ஏற்படும் அளவில் உடல் தொடர்பு உள்ள விளையாட்டுகளில் மிகக் குறைந்த அளவிலான தொற்று பரவல் அபாயம் இருக்கலாம்.
விளையாட்டின் போது இரத்தக் கசிவு யாருக்காவது ஏற்பட்டால், உடனடியாக அவர் வெளியேற்றப்பட்டு, கிருமிநாசினியால் புண்ணைக் கழுவி கட்டு இட்ட பின்னரே அவர் விளையாட்டைத் தொடர அனுமதிக்கபடலாம். இரத்தக் காயம் ஏற்படாத விளையாட்டுகளில் எச்.ஐ.வி. தொற்றுக்கான எந்த அபாயமும் இல்லை.
கே: வைரல் பளு சோதனையில், எது அதி வைரல் பளு என்றும், எது குறைந்த வைரல் பளு என்றும் கருதப்படுகிறது? இச் சோதனைகள் எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன?
பதில்: இரத்த ஓட்டத்தில் எவ்வளவு வைரஸ் இருக்கின்றன என்பதை வைரல் பளு சோதனை அளக்கிறது. இவை முற்றிலும் புதிய சோதனைகள். கட்டணமும் மிக அதிகம். காப்புறுதி குழுமங்கள் இச்சோதனைகளின் கட்டணத்தை உள்ளடக்கலாம் அல்லது அடக்காமலும் போகலாம். 10000-க்குக் கீழான எண்ணிக்கை குறைந்தது என்று கருதப்படுகிறது. 100, 000 –க்கு மேலான முடிவு மிக அதிகம் என்று எண்ணப்படுகிறது. சில எதிர்வைரஸ் மருந்துகள் எவ்வளவு சிறப்பாகச் செயலாற்றுகின்றன என்பதை அறிய முக்கியமாக இச்சோதனைகள் பயன்படுகின்றன. வைரல் பளு அதிகமாக இருந்தால் உங்கள் மருத்துவர் இன்னொரு மருந்து சிகிச்சைக்கு மாறுவது குறித்து எண்ணுவார். தொடர்ந்து சோதனை முடிவுகளின் போக்கு ஒப்பிடப்பட்டு வந்தால் இச்சோதனைகளின் பயன் சிறப்பானதாக இருக்கும். போகப்போக வைரல் பளு அதிகரித்து வந்தால் மருந்து சிகிச்சையில் மாற்றம் தேவைப்படும்.
வைரல் பளு குறைந்து கொண்டு வந்தால் எதிர்வைரல் மருந்துகள் வினைபுரிகின்றன என்று பொருள். ஆகவே, ஒரு தடவை சோதனை மேற்கொள்வதற்குப் பதிலாக தொடர்ந்து செய்து வந்தால் பயனுள்ள தகவல்கள் கிடைக்கும். இருப்பினும், இந்தச் சோதனையின் அடிப்படையில் மட்டுமே எதிர்வைரல் சிகிச்சையை நிர்ணயிக்கக் கூடாது. எதிர்வைரல் சிகிச்சை எவ்விதம் செயல்புரிகிறது என்பதை அறிய பிற சோதனைகளும் (CD4 போன்றவை) முக்கியம். 10,000 – 100, 000 வரையிலான சோதனை முடிவின் விளைவுகள் என்ன என்பது இதுவரை அறியப்படவில்லை. எனவேதான், வைரல் பளு சோதனை முடிவுகளின் போக்கு மிகவும் முக்கியமானவை ஆகும்.
கே: எச்.ஐ.வி.க்கு தடுப்பூசி உண்டா?
பதில்: உலகளாவிய இந்தக் கொள்ளைநோயைக் கட்டுப்படுத்த, பலனளிக்கும் பரவலான ஒரு தடுப்பு மருந்தே வல்லுநர்களின் நீண்ட கால நம்பிக்கை ஆகும்.
உலகில் எச்.ஐ.வி வைரசோடு வாழ்வோர் பெரும்பாலும் சுகாதாரத்துக்கென மிகக் குறைந்த அளவில் பணம் ஒதுக்கீடு செய்யக்கூடிய நாடுகளிலேயே இருக்கின்றனர். வேறு வகையில் சொல்வதென்றால், எச்.ஐ.வி. சோதனை, காப்புறை, பால்வினை தொற்று சிகிச்சை மற்றும் தடுப்புக்கு நடைமுறையில் பணமே இல்லை என்றுதான் கூறமுடியும். இந்நிலையில் தடுப்பு மருந்து என்பது மிகவும் செலவு பிடிக்கும் ஒன்றாகும்.
பலனளிக்கும் பாதுகாப்பான தடுப்பு மருந்தை உருவாக்குவது மிகவும் கடினமான சவால் என நிருபிக்கப்படுள்ளது. பல முன்னணி ஆய்வாளர்கள் இப்பிரச்சினை குறித்து ஆய்ந்து வருகின்றனர். ஆனால் வெற்றி எப்போது கிட்டும் என்று யாருக்கும் தெரியாது.
கே: எச்.ஐ.வி-1 மற்றும் எச்.ஐ.வி.-2 ற்கு இடையிலான வேறுபாடு என்ன?
பதில்: இரண்டு வகையான எச்.ஐ.வி. க்கள் தற்போது எச்.ஐ.வி-1 மற்றும் எச்.ஐ.வி.-2 என்று அறியப்பட்டுள்ளன. உலக அளவில் எச்.ஐ.வி-1 பரவலாக உள்ளது. இரண்டு வகையுமே, உடலுறவாலும் குருதி மூலமும், தாயில் இருந்து சேய்க்கும், பரவுகின்றன. இரண்டையும் உண்டாக்கும் எய்ட்சிலும் எந்தவித வேறுபாடும் இல்லை. இருப்பினும் எச்.ஐ.வி-2 எளிதாகப் பரவுவதில்லை. மேலும், தொற்று ஏற்பட்டு நோயாக மாறும் காலம் எச்.ஐ.வி-2 ல் அதிகமாகும்.
கே: இந்தியாவில் முதல் எய்ட்ஸ் நிகழ்வு எப்போது அறிவிக்கப்பட்டது?
ப. முதல் எய்ட்ஸ் நிகழ்வு தமிழ்நாட்டின் சென்னையில் இருந்து 1986 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
கே: அறிவிக்கப்பட்ட எச்.ஐ.வி. தொற்று எண்ணிக்கைக்கும் கணிக்கப்பட்டுள்ள எண்ணிக்கைக்கும் இடையில் ஏன் இவ்வளவு வேறுபாடு காணப்படுகிறது?
பதில்: எச்.ஐ.வி. ஒரு நீண்ட காலத் தொற்றாகும். தருணத் தொற்றாகவும், பிற நோயறிகுறிகளாகவும் அது வெளிப்பட 5-9 ஆண்டுகள் ஆகலாம். இக்கால கட்டத்தில் தொற்றுள்ள ஒருவருக்கு அறிகுறிகள் எதுவும் இருப்பதில்ல; அவர் மருத்துவ மனைக்கு வந்து எச்.ஐ.வி. நிலையை அறிவதும் இல்லை.
கே: எச்.ஐ.வி./எய்ட்ஸ் நோயாளிகளைத் தாக்கும் பொதுவான தருணத்தொற்றுக்கள் எவை?
பதில்: எச்.ஐ.வி./எய்ட்ஸ் நோயாளிகளைத் தாக்கும் பொதுவான தருணத்தொற்றுக்கள் வருமாறு
•காசநோய் (நுரையீரல்/புற நுரையீர
•சள்ளை நோய்
•சீதசன்னி
•ஒரணுஒட்டுண்ணி நோய்
•கிரிப்டோகாக்கோசிஸ்
•கிரிப்டோஸ்போர்டியல் வயிற்றுப்போக்கு
•சைட்டோமெகோலோ வைரஸ் தொற்று
•பி.மார்னெஃபியா தொற்று (நாட்டின் வட கிழக்குப் பகுதியில் ஏற்படும் ஒரு பூஞ்சைக்காளான் தொற்று)

எச்.ஐ.வி.-காசநோய்
கர்ப்பிணிகளுக்கு சோதனை
கே: ஒரு குழந்தைக்கு எச்.ஐ.வி.சோதனை நடத்தலாமா?
பதில்: ஆம். ஆனால், குழந்தைக்கு தொற்று உள்ளதா என்று நிச்சயமாகக் கூற முடியாது. இதற்குக் காரணம் இந்தச் சோதனை எச்.ஐ.வி. எதிர்பொருள் இருக்கிறதா என்பதை அறியவே; எச்.ஐ.வி. உள்ள எல்ல தாய்க்கும் எச்.ஐ.வி. எதிர் பொருள் இருக்கவே செய்யும். தொற்றில்லாத குழந்தைகள் 18 மாதங்கள் ஆன பிறகே எதிர்பொருளை இழக்கும். எனினும், பெரும்பாலான குழந்தைகளுக்கு தொற்றுள்ளதா இல்லையா என்பதை 3 மாதங்கள் ஆனவுடன் இன்னொரு சோதனை மூலம் (பி.சி. ஆர். சோதனை) அறியலாம். இந்த பி.சி.ஆர். சோதனை எச்.ஐ.வி. சோதனையை விட நுட்பமானது. பெரியவர்களுக்கான பொதுவான எச்.ஐ.வி. சோதனையில் இதைப் பயன்படுத்துவதில்லை. இது எதிர்பொருளை அல்ல; நேரடியாக எச்.ஐ.வி.யையே கண்டறிகிறது.
கே: என்னென்ன நன்மைகள் ஏற்படலாம்?
பதில்: ஒரு கர்ப்பிணிக்கு முடிவு நேர்மறையாக இருந்தால் அவர் எச்.ஐ.வியை கர்ப்பப்பையிலோ பிறப்பிலோ குழந்தைக்குக் கடத்தும் ஆபத்தைக் குறைக்கும் மருந்துகள் தற்போது உள்ளன. “எலெக்டிவ் சிசேரியன் செக்ஷன்” முறையில் குழந்தைப்பேற்றை நடத்துவதால் குழந்தைக்குத் தொற்று ஏற்படும் அபாயம் குறைக்கப்படுகிறது.
தாய்ப்பால் ஊட்டுவதே குழந்தைக்குப் பொதுவாக நல்லது. ஆனால், தாய்க்கு எச்.ஐ.வி. இருந்தால் தாய்ப்பால் தொற்று ஆபத்தைக் கூட்டும். தாய்க்கு எதிர்மறையான முடிவு கிடைத்தால் ஐயம் தீர்ந்து போகும்.
கே: என்னென்ன பாதகங்கள் ஏற்படக்கூடும்?
பதில்: தங்களுக்கு எச்.ஐ.வி. தொற்று இருக்கிறது என்பதையும், தன்னால் குழந்தைக்குத் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என்பதையும் சில கர்ப்பிணிகளால் தாங்க முடியாது.
எச்.ஐ.வி. உள்ள ஒரு பெண்ணும் கர்ப்பிணியாகி குழந்தை பெற இயலும். கர்ப்பிணியாக இருப்பது அவருக்கு எய்ட்ஸ் உருவாகும் ஆபத்தை அதிகரிக்காது. ஆனாலும்  சில மருத்துவர்கள் எய்ட்ஸ் இருக்கும் ஒரு பெண்ணை கர்ப்பம் கடுமையான நோயாளி ஆக்கலாம் என்று எண்ணுகிறார்கள்.
காப்புறை இன்றி உடலுறவு கொள்ளும் போது ஒரு பெண்ணின் தொற்றில்லாத இணையருக்கும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எச்.ஐ.வி. நேர்மறையாக உள்ள பெண் தனது குழந்தைக்கு தொற்று ஏற்பட்டால் எவ்வாறு சமாளிப்பது என்றும் எண்ணிப் பார்ப்பார். சமீபத்தில் தொற்று ஏற்பட்ட பெண்ணுக்கும், எய்ட்ஸ் உள்ள பெண்ணுக்கும் தொற்றுள்ள குழந்தையே பிறக்கும் வாய்ப்புண்டு என்று சில மருத்துவர்கள் கருதுகின்றனர்.
கே: இன்னும் பிறக்காத தன் குழந்தைக்கு ஒரு தாய் எவ்வாறு எச்.ஐ.வியை எவ்வாறு பரப்புகிறார்?
பதில்: எச்.ஐ.வி. தொற்றுள்ள ஒரு தாய் கருப்பையில் இருக்கும் தன் குழந்தைக்கு இரத்தத்தின் மூலம் தொற்றைப் பரப்ப முடியும். தாய்க்கு சமீபத்தில் தொற்று ஏற்பட்டிருந்தால் அல்லது எய்ட்சின் இறுதிக் கட்டத்தில் இருந்தால் குழந்தைக்கு ஆபத்து அதிகம். தாயின் குருதியோடு தொடர்பு ஏற்படும் பிறப்பின் போது தொற்று பரவலாம். தாய்ப்பாலினாலும் ஓரளவுக்கு தொற்று பரவும் வாய்ப்புண்டு.
கே: அனைத்து கர்ப்பிணிகளுக்கும் சோதனை நடத்தப்படுகிறதா?
பதில்: அனைத்து கர்ப்பிணிகளுக்கும் பொதுவாக எச்.ஐ.வி. சோதனை செய்யப்படுவதில்லை. சில மகப்பேறு மருத்துவ மனைகளில் அவர்களாகவே சோதனை செய்கின்றனர். சிலவற்றில் பெண்கள் கேட்டால் மட்டுமே செய்வார்கள். ஒரு பெண்ணின் விருப்பம் இன்றி சோதனை நடத்தப்படுவதில்லை. ஒரு பெண் மகப்பேற்று மருத்துவமனையில் உள்ள ஏற்பாடுகளைப் பற்றி அறியவில்லை என்றால் அவர் மருத்துவரையோ செவிலியரையோ எச்.ஐ.வி.சோதனை பற்றி கேட்கலாம்.
கே: நீங்கள் சோதனையைப் பெறும்போது என்ன நடக்கிறது?
பதில்: எச்.ஐ.வி. சோதனையை செய்யும் முன் ஒரு பெண்ணுக்கு யாராவது ஒருவருடன் சோதனையைப் பற்றியும் அதன் முடிவின் முக்கியத்துவம் பற்றியும் பேசுவதற்கான வாய்ப்பை அளிக்க வேண்டும். பின் அப்பெண் சோதனை வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்வார். சோதனை செய்து கொண்டால் எப்போது வந்து முடிவைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மருத்துவமனையில் கூறப்படும். இதற்கு சில நாட்கள் அல்லது ஒரு வாரம் ஆகலாம்.
இச் சோதனைக்காக சிறிதளவு இரத்தம் ஒருவரின் கரத்தில் இருந்து எடுக்கப்படும். கர்ப்பிணிகளுக்குக் கூடுதலாக இரத்தம் அளிக்க வேண்டியதில்லை. ஏனெனில் பிற சோதனைகள் செய்யப்படும் போதே இச்சோதனையும் செய்யப்படும்.
இச்சோதனையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனாலும் தொற்று ஏற்பட்டு சோதனையில் கண்டறியப்படும் அளவுக்குப் போதுமான எதிர்பொருட்கள் இரத்தத்தில் உருவாக ஏறக்குறைய மூன்று மாதங்கள் ஆகலாம். இதனால்தான் பெரும்பாலானோர்க்கு தொற்றுக்கான சாத்தியம் நிகழ்ந்தபின் சோதனைக்காக மூன்று மாத காலம் காத்திருக்கும் படி ஆலோசனை வழங்கப்படுகிறது.
ஒரு பெண்ணுக்கு சோதனை முடிவுகளை அளித்த பின் யாராவது ஒருவருடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் அளிக்க வேண்டும். முடிவின் படி அப் பெண் பாதிக்கப்பட்டிருந்தாலும் இல்லையென்றாலும் இது முக்கியம் ஆகும்.
கே: ஒரு பெண்ணுக்கு சோதனை முடிவு நேர்மறையாக இருந்தால் என்ன நேர்கிறது?
பதில்: ஒரு பெண்ணுக்கு நேர்ர்மறையான் முடிவு கிடைதால் அவர், அடுத்து என்ன நேர்கிறது என்பதை ஒரு மருத்துவர் அல்லது முது செவிலியரோடு பேசி திட்டமிட்டு தொடர் பின் சோதனைகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும். அவரது குழந்தைக்கு தொற்று ஏற்படும் அபாயத்தைக் குறைக்க அவருக்கு சிறப்பு மருத்துவப் பராமரிப்பு அளிக்கப்படும்.
எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட சில பெண்கள் குழந்தையைப் பெற்றுக் கொள்ள தீர்மானிப்பார்கள். சிலர் கலைத்து விட எண்ணுவார்கள். கர்ப்பத்தைக் கலைப்பது தனிப்பட்டதும் கடினமானதுமான முடிவாகும். கலைக்கும் முடிவு எடுப்பவர்களுக்குக் குழந்தையின் இழப்பு குறித்த சோகத்தைத் தீர்க்க காலம் தேவைப்படும். எச்.ஐ.வி. உள்ள சிலர் எதிர்காலத்தில் குழந்தைப் பேறு வேண்டும் எனில் அதைப்பற்றியும் சிந்திக்க வேண்டி இருக்கும்.
மேற்பார்வையும் மதிப்பீடும் & ஆய்வுக் கண்காணிப்பு
கே: எச்.ஐ.வி. காப்பு கண்காணிப்பு என்றால் என்ன?
பதில்: எச்.ஐ.வி.காப்பு கண்காணிப்பு என்பது ஒரு நோய்விபரவியல் கருவி ஆகும். இதன் மூலம், காப்புக் குழுக்கள் எனப்படும் இனங்காணப்பட்ட  தொற்று ஆபத்துள்ள குழுக்களில் இருந்து முன்வடிவமைக்கப்பட்ட அளவில் மாதிரிகள் காலப்போக்கில் சேகரிக்கப்படுகின்றன. இந்த மாதிரி அளவுகள் இதே போன்ற ஆபத்தும் தன்மைகளும் கொண்ட பெரும் குழுக்களைக் குறிக்கின்றன.
கே: எச்.ஐ.வி. காப்பு கண்காணிப்பில் “பெயர்தொடர்பின்மை” என்றால் என்ன?
பதில்: காப்பு கண்காணிப்பில் பெயர்தொடர்பின்மை என்றால் இரத்தம் பொதுவாக வேறு ஒரு நோக்கத்திற்காக சேகரிக்கப் படும், ஆனால், முடிவு எந்த ஒரு தனிநபரோடும் இணைக்கப்படுவதில்லை. முழு நடவடிக்கையிலும் பங்கேற்புக் கோடலைக் குறைக்க (participation bias) இந்த முறை கையாளப்படுகிறது.
கே: எச்.ஐ.வி. காப்புக் கண்காணிப்பு மருத்துவ அடிப்படையில் ஆனதா அல்லது சமுதாய அடிப்படையில் ஆனதா?
பதில்: மாதிரித் தேர்வில் ஒரு பக்கக் கோடலைத் தவிர்க்க தொடர் மாதிரி சேகரிப்பு முறை கையாளப்படுகிறது. இது முற்றிலும் ஒரு மருத்துவ அணுகு முறையே.
கே: எச்.ஐ.வி. காப்பு கண்கானிப்பின் பயன் என்ன?
எச்.ஐ.வி. காப்புக் கண்காணிப்பு தரவுகள். காலமுறைப் போக்கைப் புரிந்துகொண்டு கண்காணிக்கவும், மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் உள்ள பல்வேறு தொற்றாபத்துள்ள குழுக்களிடம் எச்.ஐ.வி. பரவியுள்ள நிலையை அறிந்து கொள்ளவும், பல்வேறு சிறு மக்கள் கூட்டங்களில் எச்.ஐ.வி. பளுவைக்  கணக்கிடவும் பயன்படுத்தப்ப் படுகின்றன.
தகவல், கல்வி மற்றும் தகவல்தொடர்பு
கே: எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் விளம்பரத்தோடு ஒப்பிடும்போது எய்ட்சைப் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளது. பணமெல்லாம் எங்கு செல்கிறது?
பதில்: தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின், தகவல், கல்வி மற்றும் தகவல்தொடர்பு (ஐ.இ.சி.) பிரச்சாரம் இரண்டு நிலைகளில் செயல்படுத்தப் படுத்தப்படுகிறது: தேசிய மற்றும் மாநில அளவுகள்.  பெரும்பாலும் இச்செயல் பாடுகள் மாநிலங்களின் பொறுப்பில் விடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநில சங்கமும் தேவைக்கு ஏற்ப நிதியைப் பயன்படுத்திக்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றன. ஐ.இ.சி-க்கு ஒதுக்கப்படும் நிதியைப் பற்றிய பேச்சு அதிகம் என்றாலும், நாட்டின் அளவையும் பிரச்சினையின் பூதகாரத்தையும் ஒப்பிடும்போது  நிதி மிகக் குறைந்ததே.  தேசிய பிரச்சாரத்திற்கு 10 கோடி அளவில் நிதி  ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பால் தேசிய அளவில் இது இயக்கப்படுகிறது.
கே: அச்சத்தை உருவாக்கும் கரடுமுரடான  அணுகுமுறையில் எய்ட்ஸ் செய்தி பிரச்சாரப்படுத்தப் படுகிறது. பல்வேறு தரப்பட்ட மக்களையும் சென்றடைய வேண்டிய  செய்திகளை உருவாக்க தே.எ.க.அ. கையாளும் முறை என்ன?
பதில்: அச்சமூட்டுவதை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறை அனைத்துப் பிரச்சாரச் செய்திகளிலும் முற்றிலும் கைவிடப்பட்டு விட்டன. பிரச்சாரத்தின் ஆரம்ப கட்டத்தில் இவ்வணுகு முறை சற்றே பயன்படுத்தப் பட்டாலும், அதைக் கைவிட்டு நாட்களாகின்றன. தே.எ.க.அ. ஒரு முறையைக் கையாளுகிறது. இதன்படி, புகழ்பெற்ற ஊடகத்துறை சார்ந்தவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட குழு தேசிய அளவில் பிரச்சாரத்திற்கான உள்ளடக்கத்தையும் உத்திகளையும் தீர்மானிக்கிறது. அமைச்சகத்தால் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதரக் கணக்கீடு மற்றும் நடத்தைக் கண்காணிப்புக் கணக்கீடுகளின் படி நடத்தப்பட்ட ஆய்வு, மக்கள் மத்தியில் இருக்கும் அறிவுநிலையை அறிய பயன்படுத்தப்படுகிறது. கிடைக்கும் நிதியாதாரத்தின் அடைப்படையில் செய்திகளைப் பரப்ப தகுந்த ஊடகம் பயன்படுத்தப் படுகிறது.
கே: எய்ட்ஸ் பிரச்சாரம் அதிக அளவு நிதியாதரங்களுடனும் பிரபலங்களுடனும் தொடர்புடையதாகக் காணப்படுகிறது. மறாக, வைரஸ் பரவல் கட்டுக்கடங்காமல் உள்ளது. ஏன்?
பதில்: புகழ்பெற்றவர்கள் ஒரு பொருளை (சமூகம் அல்லது வணிகம் சார்ந்தது) பிரபலப்படுத்தும் போது அது பரவலான கவனத்தை ஈர்த்து ஏற்றுக்கொள்ளப் படுகிறது என்பது காலங்காலமாக விளம்பர உலகில் சோதித்து அறியப்பட்ட ஒன்றாகும். எய்ட்சைத் தடுப்பது தனிநபரின் நடத்தை மாற்றத்தையும் அவர்கள் பாதுகாப்பான  பால்வினை பழக்கவழக்கங்களை தழுவிக்கொள்வதையும் பொருத்தது. யாரைக் குறி வைத்து இப்பிரச்சாரம் நடத்தப் படுகிறதோ அவர்களிடம் இருந்து மிகவும் கடினமான பதில்வினை எதிர்பார்க்கப்படுகிறது. இது நாளெடுக்கக் கூடியது எனினும் நாம் இன்னும் கடினமாகவும் உழைக்க வேண்டும். தே.எ.க.அமைப்பிடம்  இருக்கும் குறைந்த நிதியாதாரத்தை கருத்தில் கொண்டு இதுவரை பங்குகொண்ட பிரபலங்கள் எல்லாம் இலவசமாகவே சேவையை அளித்து வந்துள்ளனர். ஊடக நிகழ்ச்சிகள் தகுந்தவாறு இடம் பெற்றும். உத்திகளை பயன்படுத்தியும் வந்தாலும் பலர் பார்க்கும் படியும் அமைய வேண்டும். இளைஞர்கள் போன்ற இலக்கில் உள்ள குழுக்கள் பங்கு பெற அவர்களை உற்சாகப்படுத்தவும் வேண்டும்.
கே: எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் பொதுவாக நகர்ப்புறங்களையே கவனம் செலுத்துவதும் கிராமப்புறங்கள் ஒதுக்கப்படுவதும் ஏன்?
பதில்: தகவல், கல்வி, தகவல்தொடர்பு பிரச்சாரத்தில் பல ஊடக ஊர்திகள் கிராமப் புறங்களிலும் செய்தியைப் பரப்ப பயன்படுத்தப் படுகின்றன. நகர மற்றும் கிராமப் புறங்களில் கிடைக்கும் தூரதர்ஷன் மற்றும் வானொலியில் விளம்பரம் செய்ய பெரும்பகுதி நிதி செலவிடப்படுகிறது. தொலைக்காட்சி, வானொலி மற்றும் பிற ஊடகங்களை விட ந்திகமாக மக்களை சென்றடைகிறது என்று சமீபத்திய கணக்கீடு காட்டுகிறது. மக்கள் ஊடகம் தவிர தனிநபர் தொடர்பு முறைகளும் நகர குடிசைப் பகுதிகளிலும் கிராமப் பகுதிகளிலும் பயன்படுத்தப் படுகின்றன.
அரசுசாரா அமைப்புகள் (NGOs)
கே: அரசுசாரா அமைப்புகளைத் தெரிந்தெடுப்பதில் ஊழல் நடைபெறும் வாய்ப்பிருப்பதால், உண்மையான அரசுசாரா அமைப்புகளை தேர்ந்தெடுப்பதை தே.எ.க.அமைப்பு எவ்வாறு உறுதிசெய்ய இயலும்?
பதில்: அரசு சாரா அமைப்புகளின் முன்மொழிவுகளை அழைப்பதில் தே.எ.க.அ. வெளிப்படையான முறையைக் கடைபிடிக்கிறது. செய்தித் தாள் விளம்பரத்தின் மூலம் பெறப்படும் முன்மொழிவுகள் அரசு சாரா அமைப்பினரும் பங்குபெறும் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவால் ஆய்வு செய்யப்படுகின்றன. கருப்புப் பட்டியலில் உள்ள அ.சா.அமைப்புகள் புறக்கணிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்ட பணிசான்றுள்ள அமைப்புகளே கணக்கில் எடுக்கப்படுகின்றன. ஆவணங்கள் மட்டுமன்றி, இடத்திற்கே சென்று ஆய்வு நடத்தப்பட்டு இலக்கில் உள்ள சமுதாயம் வாழ் பகுதியில் உள்ளதா என்றும் உறுதி செய்யப்படுகிறது. இறுதித் தேர்வு, செயலாளரால் (சுகாதாரம்) தலைமை தாங்கப்படும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகங்களின் செயற்குழுவால் நடத்தப்படும்.
கே: போதுமான அளவுக்கு அ.சா.அமைப்புகள் உள்ளன. ஆனால் பணியின் தரம் எவ்வாறு உள்ளது? பணியாற்றாத அமைப்புகளை தே.எ.க.அமைப்பு எவ்வாறு கட்டுப்படுத்துகிறது?
பதில்: தே.எ.க.அமைப்பிடம் சிறந்த மேற்பார்வை மற்றும் மதிப்பீட்டுத் திட்டம் உள்ளது. அது அ.சா.அமைப்புகளின் அனைத்துக் கட்ட செயல்பாடுகளையும் கட்டுப்படுத்த வல்லது. குறைந்தபட்ச தர அளவுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இணக்கத்தை உறுதிப்படுத்தத் தேவையான திறனும் கட்டமைக்கப்பட்டுள்ளது. என்.ஜி.,ஓக்களின் உள்ளேயே மதிப்பீட்டு முறைகள் உள்ளன. மட்டுமன்றி தேவையான படிவத்தில் காலமுறையான அறிக்கைகளும் பெறப்படுகின்றன. பிற அமைப்புகளின் பணியாட்களுடன் இணைந்த மா. எ.க.க. அதிகாரிகளின் குழுவும் முறையாக கள ஆய்வு செய்து என்.ஜி.ஓக்களின் சுய அறிக்கைகளை ஆய்வுசெய்கின்றன. ஏற்கெனவே பெற்ற நிதிக்கான தணிக்கை அறிக்கைக்குப் பின்னரே புதிதாக நிதி அளிக்கப்படுகிறது. மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை என்.ஜி.ஓவின் செயல்பாடு ஒரு வெளி முகவாண்மையத்தால் மதிப்பீடு செய்யப்படுகிறது.
கே: ஏன் என்.ஜி.ஓ. பணி பெரும்பாலும் இலக்குடனான தலையீடுகளுக்கு மட்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது? இதனால் ஆபத்துள்ள குழுக்கள் இனங்காணப்பட்டு மேலும் களங்கம் ஏற்பட வாய்ப்புண்டல்லவா?
பதில்: எச்.ஐ.வி.பரவலைத் தடுக்க இலக்குடனான தலையீடு என்பது தே.எ.க.தி-II ன் மிகவும் முக்கியமான உத்தியாகும். பிறரை விடவும் ஆபத்தான நடத்தைகளில் ஈடுபடும் சில குழுக்கள் வைரசைக் கொண்டு திரிவது என்பது அறிந்த ஒன்றே. வணிகப் பாலியல் தொழிலாளிகள், ஊசிமூலம் போதையேற்றுவோர், கன ஊர்தி ஓட்டுநர், புலம்பெயர்ந்தோர் போன்றோர் சமூகத்தில் மிகவும் விளிம்புநிலைப் பட்டோர் ஆகும். நடத்தை மாற்றத்தை மட்டும் போதிக்கும் அரைவேக்காடான தலையீடுகள் இக்குழுக்களுக்குத் தேவையில்லை. நடத்தை மாற்றத் தகவல்தொடர்பு முக்கியமே. ஆனால் அதனுடன் பால்வினை மூலம் பரவும்நோய் சிகிச்சை, காப்புறை வழங்குதல், தகுந்த சூழலை உருவாக்குதல் போன்ற சேவைகளையும் சேர்த்து அளிக்க வேண்டும். இவைகள் யாவுமே தே.எ.க. அமைப்பின் இலக்கடிப்படை தலையீட்டின் முக்கிய கூறுகளே.
இக்குழுக்களைத் தகுந்த உணர்வு முறையில் அணுகினால், அவர்கள் முடங்கிக்கிடக்கும் தங்கள் கூட்டுக்குள் இருந்து  வெளிவந்து அதன் மூலம் களங்கத்தைக் குறைக்க முடியுமென்று கருதப்படுகிறது.
கே: பல என்.ஜி.ஓக்கள் தங்கள் செயல்பாடுகளுக்காகத் துன்பறுத்தப்படுகின்றன. அதைக் குறித்து தே.எ.க.அ. என்ன செய்கிறது?
பதில்: என். ஜி.ஓக்கள் பொதுவாக காவல் துறையினரால் துன்புறுத்தப் படுகின்றனர். சட்டம் ஒழுங்குத் துறையை விழிப்புணர்வு அடைய வைக்கும் போதுமான முயற்சிகள் நடைபெறாத மாநிலங்களில் இது உண்மையே. சில அதிகாரிகளின் அத்து மீறல்களை தே.எ.க.அ. விருப்பு வெறுப்பின்றி கண்டித்து வந்தாலும் அது காவல்துறையைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டதல்ல. தே.எ.க.அ. தன் பங்குக்கு அனைத்து மட்டங்களிலும் உள்ள காவல் துறையினருக்கு ஆலோசனை வழங்கும் ஒரு விரிவான திட்டத்தை வகுத்துள்ளது. தற்காலத் தேவைகளின் சூழலுக்கு ஏற்ப இந்திய குற்றவியல் சட்டத்தின் தொடர்புள்ள பகுதிகளைத் திருத்த முடியுமா என்ற முயற்சியும் நடை பெறுகிறது.
கே: செயல்படும் என்.ஜி.ஓக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து தே.எ.க.அமைப்பு என்ன செய்கிறது?
பதில்: வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு நிலைகளில் என்.ஜி.ஓ. இயக்கம் இயங்கி வருகிறது. ஒரு சில மாநிலங்களில் ஈடுபாடுடைய என்.ஜி.ஓ. குழுக்கள் இருக்கும் அதே வேளையில் வேறு சில மாநிலங்களில் நம்பிக்கையான என்.ஜி.ஓக்களைப் பற்றி பேச முடிவதில்லை. பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் ஒரு சில என்.ஜி.ஓக்களே உள்ளன; அவையும் பெரும்பாலும் நம்பத்தக்க வகையில் இல்லை. இப்பணி சவால் நிறைந்ததும் சிக்கல் நிறைந்ததுமாகும். இது தொடர்ந்து நடைபெறும் ஒரு செயல்பாடாகும். என்,ஜி, ஓவின்  திறனைக் கட்டுதல் தீவிரமாக செய்யப்பட வேண்டிய ஒன்று. மாநில அரசுகள், அரசுக்கும் குடிமக்கள் சமுதாயத்திற்கும் இடையில் நம்பிக்கையைக் கட்டும் சூழலை உருவாக்கி நீண்டநாள் பங்குறவை உறுதிசெய்ய வேண்டும்.
ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் சோதனை மையம்
கே: ஐ.சி.டி.சி. என்றால் என்ன? (What is ICTC?)
பதில்: ஐ.சி.டி.சி. என்பது ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் சோதனை மையம் ஆகும்.
கே: எச்.ஐ.வி./எய்ட்சை தடுப்பதில் ஐ.சி.டி.சி.யின் பங்கு என்ன?
பதில்: எச்.ஐ.வி. சிக்கல் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு பராமரிப்பையும் ஆதரவையும் அளிக்க வேண்டியதும், பாதிக்கப்படாதவர்களுக்கு எச்.ஐ.வி. தொற்றை தடுப்பதுமாகிய பிரச்சினைகள் மேலும் தீவிரம் அடைகின்றன. எச்.ஐ.வி.தடுப்பு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளில் தேவைப்படும் பலதரப்பட்ட தலையீடுகளில் முக்கியமான நுழைவுப் புள்ளியாக ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் சோதனை மையம் தற்போது நோக்கப்படுகிறது. இது மக்கள் தமது எச்.ஐ.வி. ஊனீர் நிலையை அந்தரங்கமாகவும் தக்க சூழ்நிலையிலும் அறிந்து அதனை ஏற்றுக் கொண்டு எச்.ஐ.வி.தொற்றால் உருவாகும் மனவழுத்தத்தைக் கையாளவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. எச்.ஐ.வி.பரவலைத் தடுப்பதில் ஒரு மலிவான தலையீடாக இருப்பதால் ஐ.சி.டி. எச்.ஐ.வி. பரவல் தடுப்பு திட்டத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாற வேண்டும்.
ஐ.சி.டி.யின் சாத்தியமான நன்மைகள் வருமாறு:
•பராமரிப்புக்கும் மருத்துவத்திற்கும் கிடைக்கும் ஆரம்பகட்ட அணுகல்
•எச்.ஐ.வி/எய்ட்ஸ் பற்றிய உண்மைத் தகவல்களைத் தருவதும் தவறான கருத்துக்களைக் களைவதும்
•அச்சத்தையும் களங்கத்தையும் ஆலோசனை மூலம் குறைப்பது
•எச்.அய்.வி./எய்ட்சோடு வாழ்வோருக்கு உகந்த சூழலை உருவாக்குவது.
•உணர்வுபூர்வமான ஆதரவு
•எச்.ஐ.வி.யோடு தொடர்புடைய மனக்கலக்கத்தைக் கையாள சிறந்த திறன்
•சிறந்த ஊட்டச்சத்து ஆலோசனைகளின் மூலம் சுகாதார நிலை மேம்பாடு
•பாதுகாப்பான பால்வினை நடவடிக்கைகளைத் தொடங்க அல்லது பேணவும் நடத்தை மாற்றத்திற்கும் ஊக்கமளித்தல்.
•எச்.ஐ.வி.தொடர்பான நோய்களைத் தடுத்தல்
•மருந்துகள் தொடர்பான நடத்தையை ஊக்குவித்தல்
•பாதுகாப்பான குருதிக்கொடை
•எதிர்கால பரவலையும் பராமரிப்பயும் கருத்தில் கொண்டு எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவரை வாழ்க்கைத் துணைவர்/இணையர் முறைக்கு ஊக்குவித்தல்.
கே: ஐ.சி.டி.சி.யின் அமைப்புமுறை என்ன?
பதில்: ஐ.சி.டி.சி. என்பது எச்.ஐ.வி. மாதிரி ஒன்றை சோதிக்கும் இடம் மட்டும் இல்லை; அதைவிட அதிகமானது. ஓர் உண்மையான அல்லது சாத்தியமான எச்.ஐ.,வி. தொற்றோடு தொடர்புடைய உணர்ச்சிபூர்வமான மற்றும் சமூக பிரச்சினைகளைப் பற்றி பயிற்சி பெற்ற ஆலோசகரும் பிரச்சினையோடு வருபவரும் அந்தரங்கமாகக் கலந்தாலோசிப்பதை ஒரு அடிப்படைக் கூறாகக் கொண்டது. சமூக உளவியல் மனவழுத்தத்தைக் குறைப்பதும், ஆலோசனைக்கு வருபவருக்கு முடிவுகளை எடுக்க தகவல் மற்றும் உதவிகளை அளிப்பதும் ஐ.சி.டி.சி.யின் நோக்கமாதலால் அதற்கு தனிமையான அமைதியான சூழல் தேவை.
அந்தரங்கமான சூழலை உருவாக்கவும், மனந்திறந்து பேசவும், தனிப்பட்ட நம்பிக்கையை அளிக்கவும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி அடைப்புகள் உருவாக்கப்படுகின்றன.
சிறந்த வகையில் செயல்பட ஒவ்வொரு ஐ.சி.டி.சிக்கும் இரண்டு பயிற்சி பெற்ற ஆலோசகர்களும் ஒரு ஆய்வக தொழில்நுட்ப வல்லுனரும் அளிக்கப்படுகின்றனர்.
சோதனைக்குப் பின்னான ஆலோசனை வழங்க அதே நாளில் எச்.ஐ.வி. சோதனை முடிவுகளை அளிக்க உதவியாக இந்த மையங்களுக்குத் துரித எச்.ஐ.வி. சோதனைக் கருவிப்பெட்டி வழங்கப்படுகிறது அல்லது முன்குறித்த நாளில் ஆலொசனைக்காக அதே ஆலோசகரையே ச்ந்திக்கும் படி அறிவுரை வழங்கப்படுகிறது.
காத்திருப்பு வசதிகள், பயிற்சி பெற்ற ஆய்வக வல்லுநர்கள், ஐ.சி.டி.சியின் அலுவலர்களுக்கு பயிற்சி, இரு பயிற்சி பெற்ற ஆலோசகர்கள், ஒரு ஆய்வக தொழில்வல்லுநர் ஆகியோர் ஒவ்வொரு ஐ.சி.டி.சிக்கும் வழங்கப்படுகின்றனர்.
தரமான சேவைகளை ஐ.சி.டி.சி. வழங்குவதை உறுதி செய்ய, ஆலோசகர்களையும் ஆய்வக வல்லுநர்களையும்  பணியமர்த்தம் செய்வதற்கு முன்னரே சிறந்த ஆசிரியர்களையும் வல்லுநர்களையும் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த செயல்பாட்டாளர்களுக்கு ஒருங்கமைவுப் பயிற்சிகளும் நடத்தப்படுகின்றன.
கே: ஐ.சி.டி.சிக்களைப் பயனர் சாதகம் ஆக்க என்ன செய்யப்படுள்ளது?
பதில்: சேவைகள் பயனாளிகளுக்கு உதவியாக இருக்கும்படி கீழ்வரும் முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன:
•ஐ.சி.டி.சி.கள்  எளிதாக அணுகும் வகையில் பெரும்பாலும் வெளிநோயாளிப் பகுதியிலேயே அமைந்துள்ளன.
•எச்.ஐ.வி. சோதனைக்கு முன் வட்டார மொழிகளில் விளக்கம் அளித்து ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே சோதனை மேற்கொள்ளப் படுகிறது. ஆலோசனைக்கு வருபவரிடம் ஒப்புதல் பெறும் முன்னர் எச்.ஐ.வி.சோதனையின் தன்மை மற்றும் விளைவுகளைப் பற்றி கூறப்படுகிறது. கட்டாயப்படுத்தி சோதனை செய்யக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டாலும் அது வாடிக்கையாளரின் விருப்பத்திற்கே விடப்படுகிறது. 
•ஆலோசகர்கள் ஒரு மையத்தில் இருந்து இன்னொன்றுக்கும், ஒவ்வொரு நாளும் மாற்றப்படக் கூடாது. ஏனெனில் வாடிக்கையாளருக்கும் ஆலோசகருக்கும் இடையில் இருக்கும் தொடர்பு மிகவும் முக்கியமானதாகும்.
•போதுமான அளவுக்குக் காப்புஐ.சி.டி.சி.கள்  எளிதாக அணுகும் வகையில் பெரும்பாலும் வெளிநோயாளிப் பகுதியிலேயே அமைந்துள்ளன.
•எச்.ஐ.வி. சோதனைக்கு முன் வட்டார மொழிகளில் விளக்கம் அளித்து ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே சோதனை மேற்கொள்ளப் படுகிறது. ஆலோசனைக்கு வருபவரிடம் ஒப்புதல் பெறும் முன்னர் எச்.ஐ.வி.சோதனையின் தன்மை மற்றும் விளைவுகளைப் பற்றி கூறப்படுகிறது. கட்டாயப்படுத்தி சோதனை செய்யக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டாலும் அது வாடிக்கையாளரின் விருப்பத்திற்கே விடப்படுகிறது.றைகள் ஆலோசனை மையத்தில் இருப்பில் இருக்கும். ஐ.சி.டி.சி.க்கு வருபவர்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் வெளியில் காப்புறைக் கிடைக்கும் தகவல்கள் அளிக்கப்படும்.
•பால்வினை மூலம் பரவும் தொற்று, மகப்பேறு மற்றும் கிராம குழந்தை நல மருத்துவ மனைகளோடு ஆலோசனை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
•என்.ஜி.ஓக்கள், சமுதாய அடிப்படையிலான அமைப்புகள், மருத்துவ மனைகள், எய்ட்சோடு வாழ்வோரின் வலைப்பின்னல்கள் ஆகியவற்றின் ஆலோசனையுடன் பரிந்துரை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
•ஆலோசகர்கள் தரமான ஆலோசனைகளை வழங்கும் வண்ணமாகவும், மனச்சோர்வு அடையாதவாறும் அவர்களுக்கு போதுமான பயிற்சியும், தொடர் ஆதரவும், மேற்பார்வையும் உறுதிசெய்யப்படுகிறது.
•சோதனையில் ஊனீர் நேர்மறை முடிவு பெற்றவர்களுக்கு சமூக ஆதரவுக்காகவும், தொடர் ஆலோசனைக்காகவும், என்.ஜி.ஓ. தொடர்பு வலியுறுத்தப்படுகிறது.
•ஐ.சி.டி. சேவைகளை மேம்படுத்தும் புதிய வழிகளைக் கண்டறிந்து அவற்றை எளிதில் கிடைக்குமாறு செய்வதே முனைப்பும் முயற்சியும் ஆகும்.
•கீழ்வரும் சேவைகளை இணைத்து அதனை மேலும் வாடிக்கையாளருடன் நட்புணர்வோடும் சேவையை அடிப்படையாகக் கொண்டதாகவும் மாற்ற அழுத்தம் தரப்படுகிறது:
•பெற்றோரிடம் இருந்து குழந்தைக்குப் பரவல் தடுப்பு மையங்களில் எதிர் நகல்வைரல் மருந்துகள்
•எச்.ஐ.வி-காசநோய் இணைத்தொற்றிற்கு எதிர்-காசநோய் மருத்துவம்
•பால்வினையால் பரவும் தொற்றுக்கும் தருணத் தொற்றுக்கும் இலவச மருத்துவம்
•எய்ட்சோடு வாழும் நோயாளிகளுக்கு இடையில்தொடர் சேவைகளும் வலைப்பின்னல்களும்.
இரத்தப் பாதுகாப்பு (Blood Safety)
கே: தேசிய இரத்தக் கொள்கை உள்ளதா?
பதில்: ஆம். தன்னார்வத்துடனும் இலவசமாகவும் தொடர்ந்தும் குருதிக் கொடை அளிப்போரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட பாதுகாப்பான, தரமான இரத்தம் போதுமான அளவிலும் எளிதாகவும் கிடைப்பதை உறுதி செய்ய ஒரு தேசிய இரத்தக் கொள்கை உருவாக்கப்பட்டு தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.
கே: இரத்தம் எந்தெந்தத் தொற்றுக்களுக்காகச் சோதிக்கப்படுகிறது?
பதில்: மருந்துகள் மற்றும் ஒப்பனைப்பொருள் சட்டம் ஐந்து பெரும் தொற்றுக்களுக்காக இரத்தம் சோதிக்கப்பட வேண்டும் என்று கட்டாயமாக்கியுள்ளது. அவைகளாவன: எச்.ஐ.வி., கல்லீரலழற்சி பி, கல்லீரலழற்சி சி, மேகநோய், மற்றும் மலேரியா.  இரத்தத்தின் ஒவ்வொரு அலகும் இத்தொற்றுகளுக்காகச் சோதிக்கப்படுகிறது.
கே:இரத்த வங்கிகளில்  “சேவைக் கட்டணம்” என்பது எதைக் குறிக்கிறது?
பதில்: இரத்தத்திற்காக எந்த ஒரு இரத்த வங்கியும் கட்டணம் வசூலிக்க முடியாது. எனினும், இலவசமாகக் கொடையாளரிடம் இருந்து பெற்ற இரத்தத்தில் இருந்து தொற்றுக்களை நீக்கவும், அதில் குறைந்த பட்ச தர அளவீடுகளை உறுதிப்படுத்தவும் சில செயல்முறைகள் தேவைப்படுகின்றன. சேமித்து வைக்கவும், செலுத்தப்படுபவரின் இரத்த வகையை சோதிக்கவும் வேண்டியுள்ளது. இவற்றிற்கும் மேலாக, இரத்த வங்கியின் கட்டுமானப் பராமரிப்பு, சம்பளம் போன்றவை நோயாளிக்கு பாதுகாப்பான இரத்தம் வழங்கும் செலவை அதிகரிக்க வைக்கிறது. இச்செலவுகளை வாடிக்கையாளரிடம் இருந்து இரத்த வங்கிகள் திரும்பிப் பெற முயற்சி செய்கின்றன.
கே: ஓர் அலகு இரத்தத்திற்கு ஒரே அளவான சேவைக் கட்டணம் எதுவும் நிர்னயிக்கப்பட்டுள்ளதா?
பதில்: நாட்டின் எப்பகுதியிலும் செயல்படும் இரத்த வங்கிகள் வசூலிக்க வேண்டிய சேவைக் கட்டணம் பற்றிய வழிகாட்டுதலை தேசிய இரத்த மாற்றுக் கழகம் உருவாக்கி அது தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பால் சுற்றுக்கு விடப்பட்டுள்ளது. அந்த வழிகாட்டுதல் படி எந்த ஒரு இரத்த வங்கியும் ஓர் அலகு இரத்தத்திற்கு  500 ரூபாய்க்கு மேல் கட்டணம் விதிக்கக்கூடாது என்று குறிப்பிடுகிறது. ஆயினும் இது ஒரு வழிகாட்டுதலே தவிர சட்டபூர்வமானது அல்ல.
கே: தேசத்தின் இரத்தப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தோடு உச்ச நீதிமன்றத்தின் 1996 ஆம் ஆண்டு தீர்ப்பை ஒட்டி தேசிய இரத்த மாற்றக் கழகம் அமைக்கப்பட்டது. இதனுடைய முக்கிய நோக்கம் தொழில் ரீதியாக இரத்தம் வழங்குவோரைப் படிப்படியாக ஒழித்து தன்னார்வ குருதிக் கொடை மேல் கவனம் செலுத்துவதுதான். இக் கொள்கை எவ்வளவு தூரம் வெற்றி பெற்றுள்ளது? இந்நாட்டில் தன்னார்வமாகத் தரப்படும் இரத்தத்தின் அளவு எவ்வளவு?
பதில்: தேசிய இரத்த மாற்றக் கழகத்தை மத்தியிலும், மாநில இரத்த மாற்றக் கழகங்களை ஒவ்வொரு மாநிலத்திலும் யூனியன் பிரதேசங்களிலும் அமைத்த உடன் முதல் வேலையாக 1998 ஜனவர் 1-ஆம் தேதியில் இருந்து பணம் கொடுத்து இரத்தம் சேகரிக்கும் முறைக்குத் தடை விதிக்கப்பட்டது. வணிக மற்றும் தனியார் இரத்த வங்கிகளால் இரத்தத்தைப் பயன்படுத்துவோர் ஏமாற்றப்படாமல் தடுக்கப் பல கடுமையான நடவடிக்கைகள் தேசிய இரத்த மாற்றக் கழகத்தால் எடுக்கப்பட்டன. தன்னார்வ குருதிக்கொடை மூலம் இரத்தத்தைச் சேகரிக்க மாநில இரத்த மாற்றக் கழகத்திற்கு தே.இ.மா, கழகத்தால் நிதி அளிக்கப்பட்டது.  தகவல், கல்வி, ஊக்கப்படுத்துதல், ஆள்சேர்த்தல், தக்கவைத்தல் ஆகிய விழிப்புணர்வு  திட்டங்கள் மூலம் தன்னார்வக் கொடை ஊக்குவிக்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தன்னார்வக் குருதிக்கொடையாளர் மூலம் சேகரிக்க வேண்டிய இரத்தத்திற்கு ஆண்டு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. அது தொடர்ந்து தே.எ.க.அமைப்பால் மறு பரிசீலனை செய்யப்பட்டது.
கே: இரத்த வங்கிகள் வழங்கும் இரத்தம் பாதுகாப்பானதா
பதில்: ஆம். தே.எ.க.அ,மைப்பின் தேசிய இரத்தப் பாதுகாப்பு திட்டத்தின் படி, இரத்தத்தை இரத்த வங்கிகள் மாற்று சிகிச்சைக்காக அளிக்குமுன், ஒவ்வொரு அலகு இரத்தத்தையும், வகை, குறுக்கு ஒப்பீடு, மற்றும் எச்.ஐ.வி., மேகநோய், கல்லீரல் அழற்சி பி மற்றும் சி, மலேரியா நோய்களுக்காக சோதித்தல் ஆகியவற்றை தகுந்த வகையில் ஆற்ற வேண்டும். இவ்வசதிகளை அனைத்து அரசு மற்றும் செஞ்சிலுவை சங்கம் போன்ற அறக்கட்டளை இரத்தவங்கிகளுக்கும் தே.எ.க.அமைப்பு வழங்கியுள்ளது.
கே:இரத்தக் கொடை அளிப்பதன் மூலம் ஒருவருக்கு எச்.ஐ.வி. தொற்றுமா?
பதில்: இல்லை. இரத்த சேகரிப்புக்காகப் பயன்படுத்தப் படும் எல்லா பொருட்களும் கிருமி அகற்றப்பட்டதும், வேலை முடிந்ததும் எறியப்படுவதுமாக இருப்பதால் இது சாத்தியமே இல்லை. இரத்தம் அளிப்பது உன்னதமானது. ஆரோக்கியமான அனைவரும் இரத்தம் அளிக்கத் தாமாகவே முன் வர வேண்டும்.
கே:யார் இரத்தம் அளிக்க முடியும்?
பதில்: 18-60 வயதும், 45 கி.கி. மேல் எடையும், 100 க.செ.மீட்டருக்கு 12.5 கிராம் அல்லது அதற்கு மேல் இரத்தப்புரதமும் கொண்ட ஆரோக்கியமான எவரும் குருதிக்கொடை அளிக்கலாம்.
கே:இரத்த வங்கிகளில் சோதனை நடத்தப்படுவது உண்டா?
பதில்: ஆம். மாநில உணவு மற்றும் மருந்துப் பொருள் நிர்வாகத்தின் மருந்து ஆய்வாளர்கள் உரிமம் அளித்தால் மட்டுமே இரத்த வங்கிகள் செயல்பட முடியும். மருந்துகள் மற்றும் ஒப்பனைப் பொருள் சட்டம் சட்ட ரீதியான ஒரு சட்டகத்தை அளிக்கிறது. ஈரண்டுகளுக்கு ஒரு முறை புதிப்பிக்கக் கூடிய உரிமம் உரிய ஆய்வுக்குப் பின் இரத்த வங்கிகளுக்கு அளிக்கப்படுகிறது. யாவரும் பார்க்கும் வண்ணம் இவ்வுரிமத்தை ஒவ்வொரு இரத்த வங்கியும் கட்சிப்படுத்த வேண்டும்.
பராமரிப்பும் ஆதரவும்
கே: எய்ட்ஸ் நோயளிகளுக்குத் தனிப்பிரிவு அவசியமா?
பதில்: தே.எ.க.அ. எய்ட்ஸ் நோயாளிகளுக்குத் தனிப்பிரிவை ஆதரிப்பதில்லை. பிற நோயாளிகளைப் போலவே எய்ட்ஸ் நோயாளிகளையும் நடத்த வேண்டும் பாரபட்சம் காட்டக் கூடாது.
கே:மருத்துவ மனையில் சோதனை நடத்தவேண்டுமானால் நோயாளியின் ஒப்புதல் தேவையா?
பதில் ஆம். எப்போதெல்லாம் எச்.ஐ.வி. சோதனை செய்யப்படுகிறதோ அப்போதெல்லாம் நோயாளியின் ஒப்புதலைப் பெற வேண்டும். நினைவற்றிருக்கும் நோயாளின் உறவினரிடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டும்.
கே:பராமரிப்பு மற்றும் ஆதரவில் ஒருங்கிணைந்த பராமரிப்பு மற்றும் சோதனை மையத்தின் (ஐ.சி.டி.சி) முக்கியத்துவம் என்ன?
பதில்: எச்.ஐ.வி./எய்ட்ஸ் பராமரிப்பு மற்றும் உதவிக்கு  ஐ.சி.டி.சி. ஒரு நுழைவுப் புள்ளியாகும். ஒருவர் எப்போது வேண்டுமானாலும் சென்று சோதனை செய்து கொள்ளலாம். சோதனை நேர்மறையாக இருந்தால் ஆலோசனையும் மருத்துவதற்கான பரிந்துரையும் அளிக்கப்படும்.
கே:எய்ட்ஸ் நோயாளிகளுக்கு எதிர் நகல்வைரல் சிகிச்சை அளிக்க அரசு கருதுகிறதோ?
பதில் சிகிச்சைக்கு ஆகும் அபரிதமான கட்டணத்தைக் கருத்தில் கொண்டு அரசு இதுவரை எதிர்வைரல் சிகிச்சை அளிக்கக் கருதவில்லை. பிறப்புக்கு முன்னான சிகிச்சை குணம் அளிக்காது. நோயாளியின் ஆயுளை நீடிக்கும். மருந்துகளை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.
கே:எச்.ஐ.வி./எய்ட்ஸ்/எஸ்.டி.டி தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஆரம்ப சுகாதாரப் பராமரிப்போடு ஒருங்கிணைக்க எடுக்கப்ப்ட்டு வரும் முயற்சிகள் எவை?
பதில்: ஆரம்ப சுகாதாரப் பராமரிப்போடு ஒருங்கிணைத்தல் முன்னுரிமை வாய்ந்தது.  ஏனெனில் பேண்தகைமையை உறுதிப்படுத்த வேண்டியது இன்றியமையாதது ஆகும். எச்.ஐ.வி./எய்ட்ஸ் பராமரிப்பையும் எஸ்.டி.டி. தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டையும் நடைமுறைப்படுத்தியதே ஒருங்கிணைந்த அணுகுமுறைக்கு இரு எடுத்துக்காட்டுகளாகும். உதாரணமாக, நிறுவன, சமுதாய மற்றும் வீட்டு நிலைகளுக்கு இடையில் இணைப்புகளை ஏற்படுத்தும் வகையில் ஒரு தொடர் எச்.ஐ.,வி/எய்ட்ஸ் பராமரிப்பு ஆரம்ப சுகாதரப் பராமரிப்பின் பகுதியாக முன்னெடுக்கப்படுகிறது. எஸ்.டி.டி. தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டைப் பொருத்த வரையில், வளர்ந்து வரும் உலகில், நோய்த்தாக்க அணுகு முறையில் எஸ்.டி.டியைக் கண்டறிவது மிகவும் பொருத்தமானது. ஏனெனில் அதற்கு ஆய்வகச் சோதனை தேவையில்லை.  பராமரிப்புச் சேவையை முதல் தடவை தொடர்பு கொள்ளும்போதே  சிகிச்சையையும் அளித்து விடலாம். பால்வினை நோய்க் (எஸ்.டி.டி.) கட்டுப்பாட்டில் நோய்த்தாக்க அணுகுமுறையில் சுகாதாரப் பராமரிப்பு பணியாளர்கள் பயிற்சி பெற வேண்டும் என்று உ.சு.அ. (WHO) வலியுறுத்துகிறது.
கே: இரட்டைக் கொள்ளை நோய்களான எச்.ஐ.வி.-காசநோய்களை சமாளிக்க இந்திய அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது?
பதில்: எச்.ஐ.வி.- காசநோய் இணைத் தொற்றின் அபாயத்தை நன்குணர்ந்த இந்திய அரசு, காச நோயுள்ள எச்.ஐ.வி. நோயாளிகளைச் சிறந்த முறையில் பராமரிக்க, காசநோய் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் ஒன்றிணைந்து செயலாற்றுவதை வலியுறுத்துகிறது. இந்த இரட்டைக் கொள்ளை நோய்களைக் கட்டுப்படுத்த மேற்கண்ட இரு திட்டங்களையும் இணைத்து ஒரு செயல் திட்டம் மைய அளவில் தீட்டப்பட்டது. முதலில் தொற்று மிகவும் பரவலாக இருந்த ஆறு மாநிலங்களிலும் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இரு தேசிய திட்டங்களாலும் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. எச்.ஐ.வி.க்கான ஆலோசனையும் சோதனையும், காச நோய்க்கான நோய்கண்டறிதலும் குறுகிய கால நேரடி கண்காணிப்பு சிகிச்சையும் தேவைப்படும் நோயாளிகளுக்கு ஒரே இடத்தில் கிடைக்கும் வண்ணமாக ஒருங்கிணைப்பு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
கே: ஒரே நேரத்தில் எச்.ஐ.விக்கும் காசநோய்க்கும் சிகிச்சை அளிக்கும் போது என்ன முன்னெச்சரிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்.
பதில்: சில எதிர்-காசநோய் மருந்துகள் எதிர்-எச்.ஐ.வி. மருந்தின் அளவுநிலைகளைப் பாதிக்கலாம்; அல்லது எதிர்மாறாகவும் நேரலாம். எனவே, இரண்டு நோய்களுக்குமான மருத்துவம் ஓர் அனுபவம் வாய்ந்த மருத்துவரின் கண்காணிப்பின் கீழேயே நடைபெற வேண்டும். மருந்தின் அளவுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தேவைப்பட்டால் சரிசெய்யப்படவும் வேண்டும். முடிந்தால், எதிர்-நகல்வைரல் மருந்தளிக்கும் முன்னரே காசநோய்க்கான சிகிச்சையை முடித்து விடுதல் நல்லது.
பால்வினைத் தொற்றுக்கள்/ இனப்பெருக்கப் பாதைத் தொற்றுக்கள்
கே: இந்தியாவில் 1949-லிருந்தே பால்வினை நோய் (எஸ்.டி.டி) கட்டுப்பாட்டுத் திட்டம் நடைமுறையில் இருந்தும் அந்நோய் பரவல் குறையாததின் காரணம் என்ன? அத்திட்டத்தின் கீழ் என்னென்ன நடவடிக்கைகள் அளிக்கப்படுகின்றன?
பதில்: இந்தியாவில் பால்வினை நோய் பரவலைப் பற்றிய புள்ளிவிவரம் எதுவும் இல்லை. இருப்பினும், நோய் தொற்ற அதிக வாய்ப்புள்ள மக்களிடத்திலும், மருத்துவ மனை சார்ந்தும் நடத்தப்பட்ட குறைந்தபட்ச ஆய்வுகளில் இந்தியாவில் பால்வினை நோய்ப்பரவல் ஐந்து சதவிகிதம் என கூறப்பட்டுள்ளது. பால்வினை தொற்றின் பரவலையும், இந்நோய்த் தொகுதியால் துன்புறும் நபர்களின் நலம்நாடும் நடத்தைகளையும் கண்டறிய தே.எ.க.அ. நாடுதழுவிய சமுதாய அடிப்படையிலான பால்வினைத் தொற்று பரவல் கணக்கெடுப்பைத் திட்டமிட்டுள்ளது. ஆரம்பக் கட்ட நோய் கண்டறிதலையும், பால்வினைத் தொற்றுக்குத் தகுந்த மருத்துவத்தையும், பால்வினை நோயாளிகளின் நலம்நாடும் நடத்தையையும் அடிப்படையாகக் கொண்டதே பால்வினை நோய் கட்டுப்பாட்டுத் திட்டம்.
பால்வினை நோய் உள்ளவர்கள் நலம்நாடும் நடத்தைக்கும் அதில் இணைந்துள்ள களங்கத்திற்கும் இடையில் நேரடி சம்பந்தம் உள்ளது. ஏனெனில் களங்கத்தின் காரணமாகப் பால்வினை நோயாளிகள் தங்களை வெளிக்காட்ட விரும்புவதில்லை. இதனால் அவர்கள் சுய மருத்துவம் உட்பட பல மாற்று சிகிச்சை முறைகளைத் தேடுவதால் பொதுத்துறை மருத்துவ அமைப்பை நாடுவதில்லை. இத்தகைய மனப்போக்காலும் நடத்தையாலும் பால்வினை நோயாளிகள் தங்களது பல பால்வினை இணையர்களுக்குத் தொடர்ந்து நோயைப் பரப்புகின்றனர். இதுவே தொற்று பரப்பும் பிரிவினரை தொற்று பரவா பிரிவினராக மாற்ற முக்கிய தடையாக உள்ளது. பால்வினை நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள மாவட்ட மருத்துவ மனைகளில் அரசு பால்வினைநோய்ப் பிரிவை ஏற்படுத்தியுள்ளது. இங்கு பால்வினை நோய் மருந்துகள் இந்திய அரசால் இலவசமாக வழங்கப்படுவதோடு மட்டுமல்லாமல் நோயாளிகளின் அந்தரங்கமும் பேணப்படுகிறது. இப்பிரிவுகள் பால்வினை நோய் மருத்துவத்தில் பயிற்சி பெற்ற வல்லுநர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. பால்வினை நோய்க் கட்டுப்பாட்டு திட்டத்தின் இன்னொரு பெரிய நடவடிக்கை, இலக்கின் அடிப்படையிலான தலையீடு ஆகும்.  வணிக ரீதியிலான பால்வினைத் தொழிலாளர்கள், கனரக வாகன ஓட்டிகள், இடம்பெயரும் தொழிலாளர்கள், பிற விளிம்புநிலை மக்களுக்கு  சிறப்பு வசதிகள் எளிதாக  கிடைக்கும்படி செய்யப்படுகின்றன. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக இணையர் அறிவிக்கை, காப்புறை வலியுறுத்தல், தகவல் கல்வி தொடர்பு நடவடிக்கைகளை ஊக்கப்படுத்துதல் ஆகியவற்றை நிகர் போதனையாளர்கள் மூலம் நிறைவேற்றுதல். நோய்த்தாக்க அணுகுமுறையில் பால்வினை நோய்க் கட்டுப்பாட்டை பயிற்சி பெற்ற மருத்துவ அதிகாரிகள் சுகாதாரப் பாதுகாப்பு சேவையின் முதல், நடு மற்றும் போதுமான ஆய்வக வசதிகள் இல்லாத கடை நிலையிலும் கூட கையாளுகின்றனர்.
கே: குடும்ப நல விழிப்புணர்வுப் பிரச்சாரம் (FHAC) என்றால் என்ன?
பதில்: எஃப்.எச்.ஏ.சி. என்பது குடும்ப நல விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைக் குறிக்கிறது. இந்தப் பிரச்சாரம் ஆண்டுக்கு ஒரு முறை 15 நாட்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது. இப்பிரச்சாரத்தின்  நோக்கங்கள் வருமாறு:
•கிராம மற்றும் குடிசைப் பகுதிகளிலும், தொற்று பரவும் அபாயத்தில் உள்ள மக்கள் குழுக்களிடையிலும் இனப்பெருக்கப் பாதை/பாலிவினையால் பரவும் தொற்று மற்றும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை உயர்த்துவது.
•பொது மக்களுக்கு இ.பா/பா.வி. தொற்றுக்கு மருத்துவம் செய்துகொள்ளும் நடத்தையை ஊக்கப்படுத்துவது.
•இ.பா./பா.வி. தொற்றுக்களுக்குப் பொது மருத்துவத் துறையில் கிடைக்கும் சேவைகளைப் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்குவது.
•ஆரம்ப சுகாதாரப் பராமரிப்புகளில் உள்ள கட்டமைப்புகளோடு இணைந்து இ.பா/பா.வி. தொற்றுக்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்து உகந்த மருத்துவத்தை அளிப்பது.
•எச்.ஐ.வி./எய்ட்ஸ் கொள்ளை நோயைத் தகுந்த முறையில் எதிர்கொள்ள சுகாதாரப் பராமரிப்புத் துறையில் பணியாற்றும் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார் தொழில் வல்லுநர்களின் திறனைப் வலுவாக்குதல்.
கே: பிற பால்வினையால் பரவும் நோய்கள் இருப்பதால் எச்.ஐ.வி. எளிதில் பரவுமா?
பதில்: ஆம். ஒவ்வொரு பால்வினையால் பரவும் நோயும் பிறப்புறுப்புகளின் தோலையும் சளிச்சவ்வையும் ஓரளவுக்கு சிதைப்பதால் எச்.ஐ.வி. எளிதில் உடலுக்குள் நுழைகிறது. இவற்றில் மிகவும் ஆபத்தானவைகள் வருமாறு:
•மேக நோய்
•மென்கிரந்தி
•பிறப்புறுப்புப் படர்தாமரை
•மேகவெட்டை
கே: பால்வினை நோய்களுக்கு ஏன் ஆரம்பகட்ட சிகிச்சை முக்கியமானது?
பதில்:பாதுகாப்பற்ற உடலுறவால் உண்டாகும் அதிக அளவிலான பால்வினையின் மூலம் பரவும் நோய்கள் பொதுமக்களிடையே தொற்று பரவும் ஆபத்தை அதிகரிக்கிறது. ஆரம்ப கட்ட மருத்துவத்தால் பிற உடலுறவு இணையருக்கு பரவும் ஆபத்தும், எச்.ஐ.வி. தொற்று உள்ளவரிடம் இருந்து பரவும் ஆபத்தும் குறைகின்றன. மேலும், பால்வினையால் பரவும் நோய்களுக்கான ஆரம்பகட்ட சிகிச்சை மலட்டுத்தன்மையையும் இடம் மாறிய கருவுறுதலையும் தடுக்கின்றன.
பெற்றோரிடம் இருந்து குழந்தைக்குப் பரவுவதைத் தடுத்தல் (PPTCT)
கே:எச்.ஐ.வி நேர்மறை தாய் குழந்தைக்குப் பாலூட்டுவதைப் பற்றி அரசின் நிலை என்ன?
பதில்: யூனிசெஃபால் பரிந்துரைக்கப்பட்டு தே.எ.க.அமைப்பால் ஆதரிக்கப்படும் சிறந்த வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இனப்பெருக்கம் மற்றும் குழந்தை நலத்தோடு தொடர்புடைய திட்டங்களோடு செய்திகள் ஒத்துப்போகும். எச்.ஐ.வி. நேர்மறை தாய்மார் நான்கு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே ஊட்டும்படி முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தொற்றுப் பரவலைத் தடுக்க படிப்படியாகக் குறைத்து ஆறாவது மாதத்தில் முற்றிலுமாக நிறுத்தப்படும். எனினும், இத்தகையோருக்கு தாய்ப்பால் வழியாக எச்.ஐ.வி. பரவும் அபாயம் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் எடுத்துரைக்கப்படும். குழந்தைக்குப் பாலூட்டுவது பற்றிய விவரங்களை எடுத்துரைத்து தேர்வு செய்வதற்கு உதவிகள் செய்யப்படும்.
எதிர்-நகல்வைரல் சிகிச்சை (Antiretroviral Therapy)
கே: அரசு மருத்துவ மனைகளில் எதிர்-நகல்வைரல் சிகிச்சையை இலவசமாக அளிக்க இந்திய அரசு திட்டமிடுகிறதா? மருந்துகளைப் பெற்றுக்கொள்ளும் தகுதி உடையவர்கள் யார்?
பதில்: சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை மத்திய அமைச்சர், எச்.ஐ.வி/எய்ட்சுக்கான எதிர்-நகல் வைரல் மருந்து உற்பத்தியாளர்களை ஒரு பேச்சு வார்த்தைக்கு அழைத்து, பொது சுகாதார அமைப்பின் வழியாக மருந்துகளை வாங்கி விநியோகிப்பதில் இருக்கும் சாத்தியக் கூறுகளைப் பற்றி ஆராய்ந்தார். இதன் விளைவாக அமைக்கப்பெற்ற பணிக்குழுவின் தலைவராகச் சுகாதாரத்துறைச் செயலரும், பொது இயக்குநர், சுகாதாரச் சேவைகள், கூடுதல் செயலாளர் மற்றும் திட்ட இயக்குநர், தே.எ.க.அமைப்பு, உறுப்பினர்களாகவும் அவர்களுடன்,  சி.ஐ.ஐ., எஃப்.ஐ.சி.சி.ஐ., மற்றும் எதிர்-நகல் வைரல் உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகளும் இருப்பர்.  இந்த பணிக்குழு தன் விவாதங்களை முடித்துள்ளது. எதிர்-நகல் வைரலைப் பொது சுகாதார அமைப்பின் வழியாக கொடுக்க முனைந்தால் அது அரசு மருத்துவ மனைகளில் இலவசமாக கடைநிலையில் உள்ள நோயாளிகளுக்குக் கிடைக்கும். ஆண்டின் இறுதியில் எச்.ஐ.வி./எய்ட்சோடு வாழும் மக்களைக் கணக்கெடுத்துப் பார்க்கும் போது நாம் நன்மை பெறவேண்டிய மக்களை முதன்மைப்படுத்தி நோக்க வேண்டும். பெற்றோரில் இருந்து குழந்தைக்குப் பரவல் தடுப்பு மருத்துவமனைகள் மூலமாக அரசு சுகாதார  அமைப்பை நாடும் எச்.ஐ.வி. நேர்மறை தாய்மார், 15 வயதுக்கு உட்பட்ட எச்.ஐ.வி. நேர்மறைக் குழந்தைகள், அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறும் முழுமையான எய்ட்ஸ் நோயாளிகள் ஆகியோர் இதில் அடங்குவர்.
காப்புறை ஊக்குவிப்பு (Condom Promotion)
கே: காப்புறை குறித்த அரசின் கொள்கை என்ன?
பதில்: எச்.ஐ.வி. பரவலைத் தடுப்பதில் காப்புறை பலனளிக்கக் கூடிய பாதுகாப்பான முறை என்பதே அரசின் கொள்கையாகும். பாதுகாப்பற்ற உடலுறவால் அதிக அளவில் பரவல் ஏற்படுவதால் காப்புறையை ஊக்குவிப்பதில் கருத்தை செலுத்த வேண்டும் என்று அரசு நம்புகிறது. பொதுமக்களைப் பொருத்த வரையில் நோய் மற்றும் மக்கள்தொகைப் பெருக்கம் தடுப்பு என்ற இரட்டை பயன்பாடு இருப்பதால் தேசிய எய்ட்ஸ் திட்டத்தாலும், இனப்பெருக்கம் மற்றும் குழந்தை நல திட்டத்தாலும் இது வலியுறுத்தப்படுகிறது. நோய் பரவும் ஆபத்தில் இருக்கும் குழுக்களுக்கு, இலக்கு நிர்ணயிக்கப்பட்ட சமூக விற்பனையும், இலவச காப்புறை விநியோகமும் அரசு சாரா அமைப்புகளால் ஊக்குவிக்கப்படுகின்றன.
கே: எச்.ஐ.வியைத் தடுப்பதில் காப்புறை எவ்வளவு தூரம் பாதுகாப்பானது?
பதில்: தொடர்ந்து தகுந்த முறையில்  மரப்பால் காப்புறைகளைப் பயன்படுத்தி வருவது உடலுறவுப் பாதை மூலம் எச் .ஐ.வி. பரவலைத் தடுக்க முற்றிலுமாக பலனளிக்கும் முறையாகும்.
 எச்.ஐ.வி-காச நோய் இணைத் தொற்று (HIV-TB Co-infection)
கே:எச்.ஐ.வி./எய்ட்ஸ் சூழலைக் காச நோய்த் தொற்று எவ்வாறு பாதிக்கிறது?
பதில்: காச நோயாளிகளிடம் எச்.ஐ.வி. வைரல் பளு ஆறிலிருந்து ஏழு மடங்கு அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்களின் வாழ்நாளை காசநோய் குறுக்குகிறது. எச்.ஐ.வி. எய்ட்சாக மாறும் வேக விகிதத்தைக் கூட்டுகிறது. உலகம் முழுவதும் எய்ட்ஸ் இருப்பவர்களில் மூன்றில் ஒருவரின் மரணத்துக்குக் காரணம் காச நோயே. குறுகிய கால நேரடி கண்காணிப்பு முறையைப் பயன்படுத்தி மருத்துவம் அளிக்கும்போது எய்ட்சோடு வாழும் நோயாளியின் வாழ்நாள் அதிகரிப்பதோடு அவர்களின் வாழ்க்கைத் தரமும் மேம்படும்.
கே: காசநோயின் மருத்துவ ரீதியான இயல்புகள் யாவை? எச்.ஐ.வி. நேர்மறை நபர்களிடம் பொதுவாகக் காணப்படும் காச நோய் வகை எது?
பதில்: எச்.ஐ.வி. தொற்று தொடர்ந்து முன்னேறும் போது CD4 வடிநீரணுக்கள் எண்ணிக்கையிலும் செயல்பாட்டிலும் குறைவடைகின்றன. இதனால், நோய்த்தடுப்பு மண்டலத்தால் காசநோய்க் கிருமிகளைத் தகுந்த முறையில் கட்டுப்படுத்த முடிவதில்லை. இதன் விளைவாக, பின் கட்டத்தில் பரவிய நிலையில் நுரையீரலுக்கு வெளியிலும் காசநோய் காணப்படுகிறது. இருப்பினும், எச்.ஐ.வி. தொற்றுள்ள நோயாளிகளில் நுரையீரல் காசநோயே பரவலாகக் காணப்படுகிறது. அனைத்து எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயாளிகளிலும் 70-90 சதவிகிதம் பேருக்கு நுரையீரலில் காசநோய் இருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.
கே: எச்.ஐ.வி. உள்ள, இல்லாத நபர்களுக்கு அளிக்கப்படும் காசநோய் மருத்துவம் எவ்வாறு வேறுபடுகிறது?
பதில்: தியாசெட்டாசோன் (thiacetazone) பயன்பாடு தவிர்த்து எதிர்-காசநோய் மருத்துவம் எச்.ஐ.வி. தொற்று உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் ஒரே மாதிரியாகவே இருக்கும். தியாசெட்டாசோன் ஆபத்தான தோல் எதிர்வினைகளை உண்டாக்கும். எனவே அதைத் தவிர்க்க வேண்டும். எச்.ஐ.வி. எதிர்மறையாக அல்லது நேர்மறையாக இருந்தாலும், குறுகிய கால மருத்துவத்தைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு மருத்துவ, கதிரியக்க, நுண்ணுயிரியல் எதிர்வினை ஒன்று போலவே உள்ளது. சுய சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களில் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. குறுகிய கால நேரடி கண்காணிப்பு மருத்துவம் எச்.ஐ.வி. தொற்றுள்ள காச நோயாளிகளுக்கு மிகவும் முக்கியம். எச்.ஐ.வி. தொற்றுள்ள காச நோயாளிகளுக்கு டாட்ஸ்  முறையில் மருத்துவம் அளிக்கும்போது அவர்கள் வாழ்க்கை தரம் உயர்வாகவும் வாழ்நாள் நீடித்தும் காணப்படுகிறது. டாட்ஸ் பல்மருந்து எதிர்ப்பு காசநோய் உருவாவதைத் தடுத்து அந்தப் போக்கை மாற்றுகிறது.




No comments:

Post a Comment