Saturday 6 October 2018

கறிவேப்பிலை சட்னி, பொடி, குழம்பு செய்முறை

கறிவேப்பிலை சட்னி


தாளிக்க
நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
கடுகு - 1/2 தேக்கரண்டி 

செய்முறை -
அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் வத்தலை போட்டு வறுக்கவும். பிறகு அதோடு தேங்காய் துருவல், புளி, பூண்டு சேர்த்து வறுத்து தனியே வைக்கவும்.
அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கறிவேப்பிலையை வறுக்கவும்.
வறுத்த கறிவேப்பிலையை தேங்காய் துருவலுடன் சேர்த்து சிறிது நேரம் ஆற விடவும்.
ஆறிய பிறகு அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸ்சியில் அரைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்ததும் சட்னியில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான கறிவேப்பிலை சட்னி ரெடி.
இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.


கருவேப்பிலை பொடி

கருவேப்பிலை பொடி வயிற்றுக்கும் உடம்பிற்கும் மிகவும் நல்ல ஒரு பொடி. இதனை, சாதத்தோடு நல்லெண்ணெய் ஊற்றி கலந்து சாப்பிட வேண்டும்.

தாளிக்க
கருவேப்பிலை - 1 கப் (நன்கு அடைத்து அளக்கவும்)
உளுத்தம் பருப்பு - ½ கப்
சிகப்பு மிளகாய் - 8-10
துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டி
பெருங்காயம் - ¼ தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை
ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி, முதலில் பெருங்காயம், மிளகாய், உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக, மிதமான தீயில் வறுக்கவும்.
துருவிய தேங்காய் கடைசியாக சேர்த்து, பொன்னிறமாக வறுக்கவும்.
அடுப்பை நிறுத்திவிட்டு, அந்த வாணலியில் சூட்டிலேயே கருவேப்பிலையை சேர்த்து, இரண்டு முறை வதக்கி, அப்படியே ஆறவிடவும்.
கருவேப்பிலை காய்ந்து, லேசாகவும் மொறுமொறுப்பாகவும் மாறிவிடும்.
மைக்ரோ வேவ் ஓவென் இருந்தால் அதில் மூன்று நிமிடம் வைத்து அப்படியே ஒரு 2 நிமிடம் விட்டாலும் மொறு மொறு என்று ஆகி விடும். ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை கிளறிவிட வேண்டும்.
ஆரிய பின், உளுத்தம் பருப்பு தவிர மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து பொடி செய்யவும்.
கடைசியாக, உளுந்து சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும்.
கருவேப்பிலையை நன்கு கழுவி, சுத்தம் செயது, ஒரு சுத்தமான துணியில் பரப்பி, நிழலிலேயே தண்ணீர் இல்லாமல் உலர்த்தவும். பிறகு தான் இந்த பொடியை செய்ய வேண்டும்.

கறிவேப்பிலை குழம்பு
கறிவேப்பிலையை சாப்பிட்டால், முடி நன்கு கருமையாக வளரும் என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தும், அதனை நாம் தூக்கி எறிவோம். ஆனால் நீங்கள் கறிவேப்பிலையை சாப்பிட வேண்டுமென்று நினைத்தால், அந்த கறிவேப்பிலையை குழம்பு செய்து சாப்பிடுங்கள். இங்கு கறிவேப்பிலை குழம்பை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



தேவையான பொருட்கள் 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
தக்காளி - 2 (நறுக்கியது) 
கறிவேப்பிலை - 2 கப் வெந்தயம் - 1 டீஸ்பூன் 
வரமிளகாய் - 2 
பூண்டு - 15 
பற்கள் சீரகம் - 1 
டீஸ்பூன் கடுகு - 1 
டீஸ்பூன் புளி - 1 
சிறிய எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்) மஞ்சள் தூள் - 1 
டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 
டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் - 1 
டேபிள் ஸ்பூன் எண்ணெய் - 1/4 
கப் உப்பு - 
தேவையான அளவு சர்க்கரை - 1 டீஸ்பூன் தாளிப்பதற்கு... 
கடுகு - 1 டீஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது 

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கறிவேப்பிலையை சேர்த்து 5-10 நிமிடம் வறுத்து, அத்துடன் பாதி பூண்டை சேர்த்து வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரனம், வெந்தயம், வரமிளகாய் சேர்த்து தாளித்து, பூண்டு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும். பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து கிளறி, புளிச்சாற்றினை சேர்த்து, உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து, எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு வேக வைக்க வேண்டும். அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை பேஸ்ட்டை சேர்த்து கிளறி, எண்ணெய் தனியாக பிரியும் வரை வேக வைக்கவும். இறுதியில் சிறு வாணலியை மற்றொரு அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, அத்துடன் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குழம்புடன் சேர்த்து கிளறி இறக்கினால், கறிவேப்பிலை குழம்பு ரெடி!

No comments:

Post a Comment